Header image alt text

பிரித்தானிய வைத்திய நிபுணர் சி.நவரட்ணம் அவர்கள் மற்றும் சித்தண்கேணி நாககன்னி அம்மன் ஆலய குருக்கள் ஆகியோருடன் கலந்துரையாடல்-

pirithaaniya vaiththiya nipunar (4)pirithaaniya vaiththiya nipunar (3)பிரித்தானியாவின் புகழ்பூத்த வைத்திய நிபுணர் திரு. சி. நவரட்ணம் அவர்கள் கடந்த 18.08.2014 திங்கட்கிழமை அன்று யாழ்;. வலி மேற்கு பிரதேச சபைக்கு விஜயம் செய்து பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களை சந்தித்து பல்வேறு வியங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார், இச்சந்திப்பின்போது புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுபினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இதேவேளை வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கடந்த 17.08.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பன்முக வரவுசெலவுத் திட்ட நிதி ஊடாக யாழ்ப்பாணம் சித்தன்கேணி நாககன்னி அம்மன் ஆலயத்திற்கான ஒதுக்கீடு தொடர்பில் ஆலய ஞானகுரு இந்திரன் அவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகங்கள், சனசமூக நிலையங்களுக்கு திரு. சித்தார்த்தன் அவர்கள் நிதியொதுக்கீடு-வலி மேற்கு தவிசாளரால் குடிநீர் திட்டம் ஆரம்பித்து வைப்பு-

vattukottai vilaiyaattu kalaham sana samooka nilaiyam (3)vattukottai vilaiyaattu kalaham sana samooka nilaiyam (2)vattukottai vilaiyaattu kalaham sana samooka nilaiyam (1)யாழ். வட்டுக்கோட்டைப் பகுதிக்கு நேற்றையதினம் (21.08.2014) விஜயம் செய்திருந்த புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் .சித்தார்த்தன் அவர்கள் வடமாகாண சபையின் ஒதுக்கீடுகளில் சுழிபுரம் மேற்கு பிரதேச இளம்சுடர் விளையாட்டுக்கழகம், சுழிபுரம் சன்ஸ்டார் விளையாட்;டுக்கழகம், திக்கரை தழிழ்த்தாய் சனசமூக நிலையம் மற்றும் மூளாய் மனிதவள சனசமூக நிலையங்களுக்கான தனது ஒதுக்கீட்டுத் தொகையினை வழங்கியுள்ளார். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி .நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் பிரதேசத்தின் எதிர்கால தேவைகள் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களிடம் எடுத்துக்கூறினார். இதேவேளை வலி மேற்கு பிரதேச சபையால் முன்னெடுக்கப்படும் பல அபிவிருத்திச் செயல் திட்டங்களில் ஒன்று சங்கானைப் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் நவீன நூலகம் ஆகும் இதற்கான குடிநீர் அமைப்புத் திட்டம் சம்பிரதாயபூர்வமாக இன்றையதினம் (22.08.2014) வலி மேற்கு பிரதேச சபைத்தவிசாளர் திருமதி நாகரஞ்சின ஐங்கரன் அவர்கள் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.

கொழும்பு மாநகரசபை உறுப்பினர் வேலணை வேணியனின் 77ஆவது பிறந்த தினம்-

velanai veniyan pirantha thinam, (2)கொழும்பு மாநகரசபை உறுப்பினர் வேலணை வேணியனின் 77ஆவது பிறந்ததினத்தில் கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய தர்மகர்த்தாவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான டிஎம் சுவாமிநாதன், இலங்கை இந்து முன்னணியின் இணைத்தலைவரும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கலாநிதி குமரகுருபரன், இன நல்லிணக்க அமைச்சின் இணைப்புச் செயலாளர் இலங்கை இந்து முன்னணி செயலாளர் கலாநிதி மோகன் ஆகியோர் வேலணை வேணியனுக்கு பட்டாடை போர்த்தி சந்தன மாலை அணிவித்து வாழ்த்தினர் ஆலய பிரதம குருக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.

 திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் கூட்டமைப்பு முறைப்பாடு-

இந்தியா சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் புதுடில்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள், தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சுஷ்மா சுவராஜிடம் எடுத்துக் கூறியுள்ளதக தெரியவருகிறது. இரா. சம்பந்தன் தலைமையில் இந்தியாவுக்குச் சென்றிருக்கும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றுகாலை இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் அதிகாரிகள் பலரை சந்தித்து வடக்கு கிழக்கின் தற்போதைய நிலைமைகள் பற்றி கலந்துரையாடியுள்ளனர்.

மோசடியான முறையில் பிரித்தானிய வீசாவுக்கு விண்ணப்பித்த மூவர் கைது-

42 வயதான இலங்கைப் பெண்ணும், வயதுக்கு வந்த அவரது இரு புதல்விகளும் மோசடியான முறையில் பிரித்தானிய செல்ல வீசா பெற்றுக்கொள்ள முயற்சித்தவேளை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 2005ஆம் ஆண்டிலும் வேறு பெயர்கள் மற்றும் வேறு பிறந்த திகதிகளைப் பயன்படுத்தி பிரித்தானிய செல்ல வீசாவிற்காக விண்ணப்பித்துள்ளனர். குறித்த மூன்று பேரினதும் வீசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கு 10 வருட காலம் பிரித்தானியாவிற்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. மேலும் குறித்த மோசடியில் ஈடுபட்ட பெண்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இஸ்லாமிய பயங்கரவாதம் பாரிய அச்சுறுத்தல்-பாதுகாப்பு செயலர்-

இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் குறித்து கண்காணிக்கப்பட உள்ளதாகவும் அது நாட்டிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். புலிகள் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர் சில குழுக்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. அவை குறித்து கண்காணிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. புலிகளின் அழுத்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் சில தற்பாதுகாப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வாறான சில குழுக்கள் சர்வதேச இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பிரச்சினைகளுக்கு உரிய முறையில் தீர்வு காணப்படாவிட்டால் மீளவும் இன முரண்பாடுகள் வெடிக்கும் சாத்தியமுள்ளது என அவர் மேலும் கூறியுள்ளார்.

ஆப்பிரிக்க நாடுகளுக்கு விசா வழங்கல் தற்காலிக நிறுத்தம்-

எபோலா வைரஸ் தாக்கம் காரணமாக சில ஆபிரிக்க நாடுகளுக்கு, இலங்கை வருவதற்க்கான விசா (ஒன் எரைவல் விசா) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. நைஜீரியா, கினியா, சியராலியோன் மற்றும் லைபீரியா ஆகிய நான்கு ஆபிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களுக்கே விசா வழங்குவதே தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமையவே அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

யாழில் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலர்மீது தாக்குதல்-

யாழில் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்மீது இனம் தெரியாத நபர்கள் நேற்றிரவு 9மணியளவில் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். நல்லூர் ஆலய உற்சவத்தில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது நல்லூர் செட்டிதெரு வீதியில் வைத்து இவர்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் முகத்தில் காயமடைந்த நிலையில் விஜயகாந் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டு விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி நேற்று முன்தினம் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக விஜயகாந் தலைமையில் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியினர் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியிருந்தது.

இராணுவ முகாமில் வெடிப்புச் சம்பவம், ஒருவர் காயம்-

பளை இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் படுகாயமடைந்த இரரணுவ வீரர் ஒருவர், பலாலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த முகாமில், துப்பாக்கியொன்று தவறுதலாக வெடித்ததிலேயே மேற்படி வீரர் படுகாயமடைந்த நிலையில் நேற்றுமாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். டி.சமன்திலக (வயது 31) என்ற இராணுவ வீரரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். அவர் தனது கையில் வைத்திருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவத்தினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

வட்டு தென்மேற்கு பிரதேச அபிவிருத்திக்கு முதலமைச்சரின் நிதி ஒதுக்கீடு-

வட மாகாண முதலமைச்சரின் விசேட நிதி ஒதுக்கீட்டின் வாயிலாக வட்டு தென் மேற்கு பிரதேச அபிவிருத்திக்காக பிரதேச மக்களாலும் பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி .ஐங்கரன் அவர்களதும் வேண்டுகோளுக்கு இணங்க 18.08.2014 அன்று 2.015மில்லியன் ரூபா ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இவ்நிகழ்வின் செயற்திட்டம் தொடர்பான ஆரம்பக்கட்ட கண்காணிப்புகுழு தெரிவு கூட்டம் வட்டுகோட்டை மூன்றாம் பனை ஐக்கிய நாணய சங்க கட்டிடத்தில் சங்க தலைவர் தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக தவிசாளர் கலந்து கொண்ட பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது, இன்று அபிவிருத்தி என்ற வகையில் மக்களுடைய ஏராளமான தேவைகள் உள்ளன. இவ் விடயம் தொடர்பில் முதலமைச்சருக்கு இப் பிரதேச மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். Read more

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் இந்தியாவிற்கு விஜயம்-

thamil thesiya koottamaippu indiaஇந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது, 13வது திருத்தச் சட்டத்தை முற்றாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ள கூட்டமைப்பின் குழுவினர் அந்நாட்டின் முக்கிய தலைவர்களைச் சந்திக்கத் தீர்மானித்துள்ளனர். இதன்படி நாளை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜையும் நாளை மறுதினம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்க இவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

வட மாகாண சபை அமர்விலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு-

vada maakaanasabai amarvilirunthuவட மாகாண சபையின் அமர்வு இன்று நடைபெற்றபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 6 பேர் வெளிநடப்பு செய்துள்ளனர். ஆளுங்கட்சி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் சமர்ப்பித்த 3 பிரேரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததாக கூறப்படுகிறது. சர்வதேச விசாரணைக்கான கால வரையறையை நீடித்தல் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் இந்த 03 பிரேரணைகள் சிவாஜிலிங்கத்தினால் இன்றைய அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

பிரபா கணேசன், பீ.திகாம்பரம் பிரதியமைச்சர்களாக பதவிப்பிரமாணம்-

pirathi amaicharkalபாராளுமன்ற உறுப்பினர்களான பிரபா கணேசன் மற்றும் பீ.திகாம்பரம் ஆகியோர் பிரதியமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். அலரி மாளிகையில் இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் இவர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, தொலைத் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரதியமைச்சராக பிரபா கணேசனும், தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க பிரதியமைச்சராக பீ திகாம்பரமும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை-

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு நேற்று டெல்லியில் உயர்மட்ட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்திய பிரதமரின் முதன்மை செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய வேளாண்மை, உள்துறை, வெளியுறவு அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது இலங்கை இந்தியா இடையேயான சர்வதேச எல்லையின் ஏற்படும் பிரச்சினைகள், கைது சம்பவங்கள் போன்றவை குறித்து ஆராயப்பட்டுள்ளது. அத்துடன், அதற்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

தேர்தல் நடவடிக்கைகளுக்கு அரச வளங்களை பயன்படுத்துவதாக முறைப்பாடு-

therthal nadavadikkaiku arasa valankalaiஊவா மாகாணசபைத் தேர்தலின் பிரசார நடவடிக்கைகளுக்கு அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அரச வளங்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. இவ்விடயம் தொடர்பில் 10 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் பிரிவு குறிப்பிடுகின்றது. இதேவேளை, அரச உத்தியோகத்தர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் சம்பவங்கள் தொடர்பில் 06 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. ஊவா மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் 33 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. சட்டவிரோத போஸ்டர், கட்அவுட்களை காட்சிப்படுத்துல் தொடர்பில் 10 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதனைத்தவிர, அரசியற் காரணங்களுக்காக அரச உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்குவது தொடர்பிலும் 05 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள்மீது தாக்குதல்-

கதிர்காமம் புதிய நகரில் போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்த ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் இருவர்மீது இனந்தெரியாதவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போஸ்டர் ஒட்டுவதற்காக முச்சக்கர வண்டியில் சென்றவர்கள்மீது இன்று அதிகாலை 1.20 அளவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சுமார் 40 பேரடங்கிய குழு தாக்குதல் நடத்தியதாக, தாக்குதலுக்கு உள்ளானவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்தவர்கள் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்கு தெபரவௌ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை அகதிகளை இடம்மாற்றத் தீர்மானம்-

ilankai akathikalai idamaatraஇந்தியாவின் ஈரோடு மாவட்டம் பவானி சாகரில் அமைந்துள்ள அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை வேறு முகாமிற்கு இடம்மாற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அங்குள்ளவர்களின் கோரிக்கையை பரிசீலித்துப் பார்த்ததையடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு நடவடிக்கைகள் தொடர்பான ஆணையாளர் பி.ஆனந்த் தெரிவித்துள்ளார். குறித்த அகதிகளுக்கு தேவையான நீர், சுகாதாரம் மற்றும் கழிவகற்றல் வசதிகள் போதுமானளவு இல்லாமையினாலேயே இவர்கள் இடமாற்றப்படவுள்ளனர். இந்த முhகமில் 1057 குடும்பங்களைச் சேர்ந்த 3532 பேர் வசிக்கின்றனர். இவர்களில் 1000 பேரை வேறிடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகம்மீது தாக்குதல்-

UNP aluvalakam meethu thaakkuthalஊவா பரணகம – கலஹகம பகுதியிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகம்மீது இன்று அதிகாலை 3.00மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஐக்கிய தேசியக் கட்சியினர் பயன்படுத்திய முச்சக்கர வண்டியொன்றும் இதன்போது தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது. தனியாரின் மரக்கறி வர்த்தக நிலைய கட்டிடத்திலேயே குறித்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த ஆட்டோ முற்றாக சேதமடைந்துள்ளதோடு, வர்த்தக நிலையத் தொகுதியும் சேதமடைந்துள்ளது. ஏ.எம்.புத்ததாஸ எனும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளரின் ஆதரவாளர்களாலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐ.தே.கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் ஐயந்த கன்னங்கர கூறியுள்ளார். ஐ.தே.கட்சியின் முதன்மை வேட்பாளர் ஹரீன் பிரனாந்து கலந்துகொண்ட சந்திப்பொன்று இந்த அலுவலகத்தில் நடைபெற்றது. அதன் பின்னர் இதனை ஏற்பாடு செய்த குழுவினருக்கு இரவில் ஜீப் வண்டியில் வந்த சிலர் மிரட்டல் விடுத்துள்ளனர் என கன்னங்கரவினால் தமக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக கபே சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச விசாரணை குழுவுக்கு பான்கீ மூன் ஆதரவு-

pan ki munஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் மேற்கொள்ளும் யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான்கீ முன் முழுமையான ஆதரவினை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டிபன் டுஜாரிக் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொடர்பில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும். ஐக்கிய நாடுகளின் விசாரணை குழுவினால் இலங்கையில் நடத்தப்படும் போர்க்குற்ற விசாரணைகளின்மூலம் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு வழியேற்படும். அதனடிப்படையில் அதற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என பேச்சாளர் கூறியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம்-

thamil thesiya koottamaippu indiaதமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று நாளைய தினம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்றதன் பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு அனுமதி கோரியிருந்தது. இதற்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மத்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு நாளை இந்தியா செல்லவுள்ளதாகவும், அங்கு நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையின்போது 13ஆவது திருத்தம் தொடர்பில் விரிவாக பேசப்படவிருப்பதாகவும் தெரியவருகின்றது.

மேலும் செய்திகளை வாசிக்க…………. Read more

19.08.2014.
புன்னாலைக்கட்டுவன் கலைவாணி சனசமூக நிலையத்திற்கு மின் இணைப்புபெற நிதியுதவி-

punnalaikattuvan kalaivani library 18.08 (3)யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு கலைவாணி சனசமூக நிலையத்திற்கான மின்சார இணைப்பினை வழங்குவதற்காக ஒருதொகைப் பணம் வழங்கப்பட்டுள்ளது. புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு தர்மலிங்கம் சித்தார்த்தன் அவரகளால் மேற்படி நிதியுதவியானது கலைவாணி சனசமூக நிலையத்தின் தலைவர் திரு கஜன் அவர்களிடம் நேற்றையதினம் (18.08.2014) வழங்கப்பட்டுள்ளது. கலைவாணி சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. கஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், புன்னாலைக்கட்டுவன் பிரதேச சமூக சேவையாளருமான திரு லோகன் அவர்களும் உரையாற்றினார்கள். ஊர்ப் பெரியோர்கள், பெண்கள், இளைஞர்கள் என அக்கிராமத்தைச் சேர்ந்த பெருமளவிலானோர் இந்நிகழ்வினில் கலந்து கொண்டிருந்தனர். புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் அண்மையில் சுவிஸ் நாட்டிற்கு விஜயம் செய்திருந்தபோது புளொட்டின் சுவிஸ் கிளையினரால் வழங்கப்பட்ட பணத்திலிருந்து ஒரு தொகுதியே (25,000ருபாய்) மேற்படி சனசமூக நிலையத்திற்கு மின்சார இணைப்பினை வழங்குவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. 

punnalaikattuvan kalaivani library 18.08 (1)punnalaikattuvan kalaivani library 18.08 (2)punnalaikattuvan kalaivani library 18.08 (3)punnalaikattuvan kalaivani library 18.08 (5)

புங்குடுதீவு வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணம் அன்பளிப்பு

unnamedபுங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு.திருமதி கனகரட்ணம் கனகம்மா அவர்களது குடும்பம் சார்பாக அவர்களின் பிள்ளைகளான சுவிஸில் வசிக்கும் அருள், ரவி மற்றும் இலங்கையில் வசிக்கும் ரகுநாதன் ஆகியோர் இணைந்து சுமார் பத்தொன்பது (19) இலட்சம் ரூபா பெறுமதியான ‘மருத்துவ ஊடு கதிர்ப்படக் கருவியினை  (Scanning Machine) புங்குடுதீவு வைத்தியசாலைக்கு கடந்த 15.08.2014 சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சார்பாக நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
இந்நிகழ்வில் திரு.ரகுநாதன் பாரியார் உஷா ரகுநாதன் உயிரியல் வைத்தியப் பொறியியலாளர் திருமதி சாந்தி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவவியல் நிபுணர் டொக்டர் சரவணபவன், மகப்பேற்று வைத்திய அதிகாரி டொக்டர் குமாரவேல் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் குணதாசன் ஆகியோர் உட்பட புங்குடுதீவு வைத்தியசாலையின்  பொறுப்பதிகாரி, தாதிமாரும் கலந்து கொண்டனர்.

unnamed2unnamed1

நிபுணர் குழுவுக்கு மேலும் இருவர் நியமனம்-

janathipathi mahinda rajapakseகாணாமல் போனவர்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுக்கு மேலும் இருவரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை நியமித்துள்ளார். நிபுணர்களான அவ்தாஷ் கௌஷல், அஃமர் பீ சூபி ஆகிய இருவரே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கு சட்ட மேதைகளான டேஸ்மன்டி சில்வா, சேர் ஜேப்ரி நைஸ், டேவிட் எம். கிரேன் ஆகிய மூவரும், கடந்த ஜுலை 15ஆம்திகதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருந்தனர்.

முள்ளிவாய்க்காலில் மர்மப்பொருள் வெடித்து ஒருவர் காயம்-

mullivaaikalil marma porul vediththuமுல்லைத்தீவு – வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பகுதியில் மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். வீட்டுக் காணியை துப்பரவு செய்து நெருப்பு வைத்த சமயம் அங்கிருந்த மர்ப்பப் பொருளொன்று வெடித்துள்ளது. இச்சம்பவத்தில் வெள்ளாம் முள்ளிவாய்க்காலைச் சேர்ந்த வேலு செல்வநாயகம் என்பவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளை வாசிக்க….. Read more

வடலியடைப்பு கலைவாணி சனசமூக கலையரங்க கட்டிடத்திற்கு நிதியுதவி-

2யாழ் மாவட்டம் பண்டத்தரிப்பு வடலியடைப்பு கலைவாணி சனசமூக நிலைய இளைஞர் மன்றத்தினால் அதே இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கலையரங்க கட்டடத்தின் தேவைக்காக நிதியுதவி ஒன்று நேற்றுமாலை (17.08.2014) புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது இந்நிதியினை மன்றத்தின் தலைவர் யோகேஸ்வரன் ராகவன் அவர்களிடம் சித்தார்த்தன் அவர்கள் கையளித்தார். பின்னர் சன சமூக நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பாக புளொட் தலைவரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கேட்டறிந்து கொண்டார்.

vadaliyadaipu 7vadaliyadaipu ivadaliyadaipu 2

வடலியடைப்பு கலைவாணி சனசமூக கலையரங்க கட்டிடத்திற்கு நிதியுதவி-

யாழ் மாவட்டம் பண்டத்தரிப்பு வடலியடைப்பு கலைவாணி சனசமூக நிலைய இளைஞர் மன்றத்தினால் அதே இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கலையரங்க கட்டடத்தின் தேவைக்காக நிதியுதவி ஒன்று நேற்றுமாலை (17.08.2014) புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது இந்நிதியினை மன்றத்தின் தலைவர் யோகேஸ்வரன் ராகவன் அவர்களிடம் சித்தார்த்தன் அவர்கள் கையளித்தார். பின்னர் சன சமூக நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பாக புளொட் தலைவரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கேட்டறிந்து கொண்டார்.

காணாமல் போனோர் தொடர்பில் 20,000 முறைப்பாடுகள் பதிவு-

காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு இதுவரை சுமார் 20,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த குழுவினால் இதுவரை ஆறு கட்டங்களாக முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இறுதியாக கடந்த 8ம் திகதி முதல் 11ம் திகதி வரை மன்னாரில் இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றன. இதன்போது 187 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அத்துடன் இவ்வருடம் ஜனவரி கிளிநொச்சியிலும் பெப்ரவரி யாழ்ப்பாணத்திலும் மார்ச் மட்டக்களப்பிலும் முறைப்பாடுகளைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. மேலும் ஜூன் முல்லைத்தீவிலும் ஜூலை மீண்டும் மட்டக்களப்பிலும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன.

வெள்ளவத்தை கொள்ளைச் சந்தேநபருக்கு தடுப்புகாவல்-

கொழும்பு வெள்ளவத்தை பீற்றர்சன் வீதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்து 43 லட்சத்து 87 ஆயிரத்து 500 ரூபாய் வெளிநாட்டு பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தார் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட நபரை தடுப்புகாவலில் வைத்து விசாரிக்குமாறு புதுக்கடை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இதன்பிரகாரம் சந்தேகநபர், வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்த கொள்ளைச்சம்பவம் ஓகஸ்ட் 8ஆம் திகதி இடம்பெற்றது. இச்சம்பவம் தொடர்பில் தெஹிவளையைச் சேர்ந்த 34 வயதான சந்தேக நபரொருவரை 16ஆம் திகதி அரலகங்வலவில வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவரால் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களில், கொழும்பு செட்டியார்தெரு நகைக்கடையொன்றில் விற்பனை செய்யப்பட்ட 17 பவுண் தங்க நகைகளை இன்று மீட்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசியல் சீர்திருத்தத்தை மாற்றுமாறு கோரிக்கை-

1978ஆம் ஆண்டு அரசியல் அமைப்பு சீர்திருத்தத்திற்கு மாற்றீடாக புதிய அரசியல் அமைப்பு சீர்த்திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டும் என்று தேசிய சுதத்தர முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸமில் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் இந்திப்பின்போது இதனை குறிப்பிட்டுள்ளார். 78ஆம் ஆண்டு அரசியல் அமைச்சு சீர்திருத்திற்கு நட், போல்ட் என சிறுசிறு திருத்தங்கள் செய்து ஓட்டிக்கொண்டு செல்ல முடியாது. இந்நிலையில் அதனை முற்றாக மாற்றி புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டும். இது தொடர்பான சீர்திருத்தங்களை நாங்கள் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளோம் என்றார் அவர்.

போர் முடிவுக்குப் பின்னர் யாழில் தற்கொலை வீதம் அதிகரிப்பு-

வடக்கு மாகாணத்தில் யாழ். மாவட்டத்திலேயே தற்கொலை செய்துகொள்ளும் வீதம் அதிகரித்துள்ளது என யாழ். பல்கலைக்கழக மனநல துறை பேராசிரியர் தயா சோமசுந்தரம் தெரிவித்துள்ளார். பேராசிரியர் தயா சோமசுந்தரம் தான் சேகரித்துள்ள புள்ளிவிபரங்களுக்கு அமையவே இத்தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி போர் முடிவிற்கு முன்னர் அதாவது 2005ஆம் ஆண்டுமுதல் 2009ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாணத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சம் பேருக்கு 23வீதமாக இருந்தது. அதன்பின்னர் போர் ஆரம்பமாகி அது தீவிரமடைந்த போது 2007ஆம் மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை 20வீதமாக குறைந்தது. போர் உச்சக்கட்டத்திலும் தமிழ் சமூகம் கடும் அச்சுறுத்தலான நிலைமையில் இருந்த 2009ஆம் ஆண்டு தற்கொலைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சம் பேருக்கு 15 வீதமாக குறைந்திருந்தது. போர் முடிவடைந்து 2011ஆம் ஆண்டுவரை 25 வீதமாக இந்த தற்கொலைகளின் எண்ணிக்கை உயர்ந்தது. 2012ஆம் ஆண்டு மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் 24 வீதத்திலேயே இது காணப்பட்டது. முன்னைய இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்ற காலத்துடன் ஒப்பிடும்போது, 2002ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரையான சமாதான காலத்திலும் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது என கூறப்பட்டுள்ளது.

18 வருடங்களுக்கு முன் கடத்தப்பட்ட வான் மீட்பு-

மட்டக்களப்பு சித்தாண்டியில் 18 வருடங்களுக்கு முன் கடத்தப்பட்ட வான் கொழும்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தபோது நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், சந்தேக நபர்கள் இருவரை கைதுசெய்துள்ளதாகவும், இந்த வான் 18 வருடங்களுக்கு முன் புலிகளினால் கடத்தப்பட்டதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பஹா, வெலிவேரியாவிலுள்ள பாதையோரத்தில் வாகன விற்பனைச் சந்தை ஒன்றிலேயே இந்த வான் கைப்பற்றப்பட்டுள்ளது, இந்த வானை விற்பனைக்கு வைத்திருந்தததாகக் கூறப்படும் நபரும் வாகனப் பதிவுப்பெயரை மாற்றுவதற்கு விண்ணப்பித்திருந்த நபருமே கைதுசெய்யப்பட்டனர். இந்த வாகனத்தை விற்பனை செய்தவரை தேடி வருவதாகவும் பொலிஸார் கூறினர். மேலும், மட்டக்களப்பு பதில் நீதவான் டி.சின்னையா முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட இச் சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார். கடற்படை வீரரான தமிழர் ஒருவரும் அவரது குடும்பத்தினரும் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்தபோது 1996.08.11 அன்று ஏறாவூர், சித்தாண்டிச் சந்தியில் புலிகளால் கடத்தப்பட்டதாக ஏறாவூர் பொலிஸில் அன்று முறையிடப்பட்டிருந்தது. கடத்தப்பட்ட குடும்பத்தினர் பின்னர் புலிகளால் விடுதலைசெய்யப்பட்டதாக கூறுப்படுகிறது. கடந்த இரு மாதங்களுக்கு முன் வாகனப் பதிவுத் திணைக்களத்திலிருந்து பெயர் மாற்றுவதற்காக மெதகெதர லலித் பிரியங்க அபேகுணவர்தன என்பவர் கண்டி போலி முகவரியைக் கொடுத்து விண்ணப்பம் செய்துள்ளார்.

ஏழாலையில் புலமைப்பரிசில் பரீட்சைக்கான இலவச வகுப்பும், பெற்றோர் மாணவர்களுடனான கலந்துரையாடலும்-

pulamai parisil (3)யாழ். ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க அறநெறி பாலர் முன்பள்ளியில் புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் வழிகாட்டலில் திரு. சே.ஞானசபேசன் அவர்களின் ஏற்பாட்டில் புலம்பெயர்ந்து வாழும் திரு. வே.மணிவண்ணன் அவர்களின் அனுசரணையுடன் இலவச புலமைப்பரிசில் பரீட்சை வகுப்புக்கள் நடைபெற்று வந்தது. இம்மாணவர்களுக்கான இறுதிநாள் வகுப்பும் பெற்றோர்களுடனான கலந்துரையாடலும் கடந்த 14-08-2014 வியாழக்கிழமையன்று மாலை 3.30 மணிக்கு திரு. வே.ஹரிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆசிரியர் திரு. க. அருந்தவநேசன் (புலமைப்பரிசில் பரீட்சை ஆசிரியர்), திரு. இ. நவகேதீஸ்வரன் மற்றும் பெற்றோரும் கலந்து சிறப்பித்தனர்.

pulamai parisil (5)தலைவர் திரு. வே.ஹரிவண்ணன் தலைமையுரையில், மாணவர்கள் தமது கல்வி மீதான அக்கறையை புலமை பரிசில்பரீட்சையின் பின்னரும் தொடரவேண்ர்டும் எனவும் தன்னம்பிக்கையுடன் பரீட்சைக்கு தோற்றுவதற்கான சூழலை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

திரு. இ. நவகேதீஸ்வரன் தனது கருத்துரையில், பரீட்சைக்கான மாவட்ட ரீதியில் வெட்டுப்புள்ளி பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களில் 10 வீதத்தினர் சித்தியடையும் வகையில் சித்திப்புள்ளி தீர்மானிக்கபடுகின்றது எனவும் இதே ஆதரவை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எதிர்காலத்திலும் தொடர்ந்து வழங்கவேண்டும் எனவும் கூறியதுடன் கடந்த காலத்தில் திரு. சித்தார்த்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய காலத்தில் தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தூரநோக்குடன் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் எடுத்துக் கூறினார்.

pulamai parisil (4)

தொடர்ந்து ஆசிரியர்களான திரு. க. அருந்தவநேசன், திரு. வே. ஹரிவண்ணன் ஆகியோரால் பரீட்சைக்கான நுட்பங்களும் வழிகாட்டுதல்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பெற்றோர்கள் தமது கருத்துக்களை ஆக்கபூர்வமானதாக ஆர்வத்துடன் வெளிப்படுத்தியதுடன் எதிர்காலத்திலும் இதே மாதிரியான வகுப்புக்களை தொடர்ந்தும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துதவுமாறும் திரு. த.சித்தார்தன் அவர்களிடம் கோரிக்கையை முன்வைத்ததுடன் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.

கொழும்பில் நான்காவது பாதுகாப்பு மாநாடு-

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை நிறைவுக்கு வந்த பின்னர் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பில் ஆராயும் நான்காவது பாதுகாப்பு மாநாடு நாளையதினம் கொழும்பில் நடைபெறவுள்ளது இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் வெளிநாட்டு பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை தருவதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார் பாதுகாப்பு மாநாடு நாளை முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மலேஷியா, இந்தோனிஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட 60 நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்;கேற்கவுள்ளதாகவும் ருவன் வணிகசூரிய மேலும் கூறியுள்ளார். 

இலங்கையிடம் ஐ.நா. மனித உரிமைகள் குழு கேள்வி-

பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் குழு இலங்கை அரசிடம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கேள்வி எழுப்பவிருப்பதாக கூறப்படுகிறது. ஐ.நா மனித உரிமைகள் குழுவின் 112வது அமர்வு எதிர்வரும் ஒக்டோபர் 7ம் திகதி முதல் 31ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் ஒக்டோபர் மாதம் 7ம் மற்றும் 8ம் திகதிகளில் இலங்கையின் மனித உரிமைகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் போன்ற விடயங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பப்படவுள்ளது. மனித உரிமைகள் குழுவின் 112வது அமர்வுக்கான நிகழ்ச்சி நிரலில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உயிரிழப்புகள் தொடர்பிலும் கேள்வியெழுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருநாட்டு மீனவர் பிரச்சினை குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை-

இந்திய மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தை ஒன்று இந்த மாதம் 29ம் திகதி இடம்பெறவுள்ளது. இந்திய மற்றும் இலங்கை அதிகாரிகள் மட்டத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நிமால் ஹெட்டியாராச்சி தலைமையில் மூவர் கொண்ட குழு புதுடில்லிக்கு பயணமாகவுள்ளது. ஏற்கனவே இந்திய மற்றும் இலங்கை மீனவர்களுக்கிடையில் இரண்டு சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்த போதிலும்;, அவை தீர்மானங்களின்றி நிறைவடைந்திருந்தன. முன்னதாக கடந்த ஜனவரி மாதம் புதுடில்லியில் இந்திய இலங்கை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை ஒன்றும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் இம்மாதம் நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது, ஏற்கனவே இப்பிரச்சினையை தீர்ப்பதற்காக இந்தியா தயாரித்துள்ள திட்டங்களை இந்திய அதிகாரிகள் முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கட்டணங்களை வழங்கி மீன்பிடியில் ஈடுபட அனுமதிப்பது மற்றும் இந்தியாவின் அதிகார கடல் எல்லையை நீடிப்பது போன்ற விடயங்கள் இதன்போது இந்திய தரப்பினால் முன்வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் இந்தியா வலியுறுத்தல்-

இலங்கை தொடர்பில் கொள்கை ரீதியான அணுகுமுறையை பின்பற்றி இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் நல்லிணக்க பரிந்துரைகளின் முழுமையான அமுலாக்கம், 13ம் திருத்தச்சட்டத்தின் அமுலாக்காம் மற்றும் மறுசீரமைப்பு விடயங்களில் தொடர்ச்சியாக இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வரும் அதேநேரம் இலங்கையில் வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டமை, ஆயுத போராட்டம் நிறைவுக்கு வந்தமை போன்ற விடயங்களை இந்தியா வரவேற்கின்றது. இலங்கையுடனான சிறந்த நல்லுறவை மாத்திரம் கருத்தில் கொள்ளாது, சமாதானம், நீதி, சிறுபான்மை மக்களுக்கான சம அந்தஸ்த்து போன்ற விடயங்கள் தொடர்பிலும் இந்தியா செயற்பட்டு வருகின்றது என் அவர் மேலும் கூறியுள்ளார்.

எரிந்த நிலையில் ஆசிரியையின் சடலம் மீட்பு-

யாழ்ப்பாணம், புலோலி, 1ஆம் கட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து எரிந்த நிலையில் ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரின் சடலம் இன்றுகாலை மீட்கப்பட்டதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேயிடத்தைச் சேர்ந்த தருமராசா லக்;ஷ்மி (வயது 63) என்ற ஆசிரியையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டில் தனித்து வசித்து வந்த மேற்படி முன்னாள் ஆசிரியை, நேற்று தொடக்கம் வீட்டைவிட்டு வெளியில் வராததையடுத்து, சந்தேகம் கொண்ட அயலவர்கள் பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, ஆசிரியையின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். பின்னர் சடலம் மீட்கப்பட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் குழு மோதல், ஒருவர் படுகாயம்-

unnamedயாழ். பருத்தித்துறை 2ஆம் குறுக்குத் தெருவில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றுமாலையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தும்பளையைச் சேர்ந்த தெய்வேந்திரன் ஸ்ரீரங்கன் (வயது 22) என்பவரே படுகாயமடைந்துள்ளார். இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் பருத்தித்துறையைச் சேர்ந்த ஒருவரைக் சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக தெரிவித்துள்ளனர். மேலும், இந்தக் கைகலப்புச் சம்பவத்தில் யாழ் – கொழும்பு தனியார் பஸ் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பளைப் பிரதேசத்தில் இருந்து ஆயுதங்கள் மீட்பு-

கிளிநொச்சி, பளை, வேப்பங்கேணிப் பகுதியிலுள்ள தனியார் காணியிலுள்ள கிணற்றுக்குள் இருந்து ஆயுதங்கள் சில நேற்றுமாலை மீட்கப்பட்டதாக பளைப் பொலிஸார் தெரிவித்துள்னனர். எம் 75 கைக்குண்டு ஒன்றும், ஆர்.பி.ஜி குண்டொன்றுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. தற்போது, நிலவும் வரட்சி காரணமாக கிணற்று நீர் வற்றிய வேளையிலேயே மேற்படி ஆயுதங்கள் வெளிப்பட்டதாகவும், இது தொடர்பில் காணி உரிமையாளர் பளைப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ள பொலிஸார், இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினருடன் சென்று ஆயுதங்களை மீட்டதாக குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, பளை வன்னியங்கேணிப் பகுதியில் நிலத்தில் புதையுண்டு இருந்த 81 மில்லிமீற்றர் ஷெல் ஒன்றும் நேற்றையதினம் காலை மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளை விபத்தில் காயமடைந்த இராணுவ வீரர் மரணம்-

மாத்தளை தம்புள்ளை, இத்தாமுலுவே பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இராணுவவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொரவௌ இராணுவ முகாமை சேர்ந்த மேஜர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்றுகாலை தம்புள்ளை, இத்தாமுலுவே பிரதேசத்தில் இராணுவ டிரக்வண்டியும் தனியார் பஸ்ஸொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இராணுவத்தினர் மூவர் உட்பட 28 பேர் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களுள் இராணுவ மேஜர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்களின் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயம் முன்பு முற்றுகை போராட்டம்-

நாம் தமிழர் கட்சியினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயம் முன் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இலங்கையின் இராணுவ இணையத்தளத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றி அவதூறு பரப்பியதை கண்டித்தும், இலங்கையில் நடைபெறும் இராணுவ மாநாட்டில் இந்தியாவில் இருந்து யாரும் கலந்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தியும் இப்போராட்டம் நடத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவைகள் அடுத்தமாதம் ஆரம்பம்-

railயாழ்ப்பாணத்துக்கான தொடரூந்து சேவைகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படக்கூடியதாக இருக்கும் என இந்தியாவின் உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற இந்திய சுதந்திர தின விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்தியாவின் வேலைத்திட்டங்கள் அனைத்தும் தற்போது இலங்கையில் முழுவீச்சில் இடம்பெற்று வருகின்றன. அடுத்த மாதமளவில் யாழ்ப்பாணம் வரையான தொடரூந்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று இந்தியாவின் உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நிதிமோசடியில் ஈடுபட்ட கனேடிய அரச சார்பற்ற நிறுவனம்-

இலங்கையில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கனடாவின் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றை, 25 லட்சம் டொலர்களை கனேடிய அரசாங்கத்துக்கு செலுத்துமாறு கனடாவின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த அரச சார்பற்ற நிறுவனம் 2004ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் பின்னர் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்தது. இந்த நிறுவனத்துக்கு கனடாவின் சர்வதேச அபிவிருத்தி ஸ்த்தாபனத்தினால் வழங்கப்பட்ட நிதியில் பாரிய மோசடிகள் இடம்பெற்றதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே கனடாவின் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு-

minnal thaakkiவவுனியா நாமல்கம ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதியான 65வயதான காலி ஸ்ரீநந்தரத்தன தேரர் மற்றும் அவருடைய உதவியாளரான 49வயதுடைய ஆகியோர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை 6.20 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் ஏழு மாதங்களின் பின்னர் வவுனியாவில் நேற்று பெய்த அடை மழையை அடுத்து ஏற்பட்ட மின்னல் தாக்கத்தின்போதே இவ்விருவரும் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சீன ஜனாதிபதியின் இலங்கை விஜயம்-

chinaஇரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி இலங்கை வருகைதரவுள்ளார். சீன ஜனாதிபதியொருவர் முப்பது வருடங்களுக்கு பிறகு இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசியல் பிரமுகர்களை அவர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் கற்பிட்டி, நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது கட்டத்தையும் ஆரம்பித்துவைப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

நிலாவெளியில் வீடுகளுக்குள் புகுந்த மர்ம நபர்களால் பதற்றம்-

nilaveliyilதிருகோணமலை நிலாவெளி, 8ம் கட்டை முகைதீன் பள்ளிவாசல் வீதியிலுள்ள வீடுகள் சிலவற்றுக்குள் இன்று அதிகாலை மர்ம நபர்கள் நுழைந்ததையடுத்து பிரதேச மக்கள் மத்தியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு 5 வீடுகளுக்குள் இனந்தெரியாத நபர்கள் நுழைந்துள்ளனர். தாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, வீட்டின் யன்னல்களை கழற்றிவிட்டு, மர்ம நபர்கள் வீடுகளுக்குள் புகுந்ததாகவும் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் எழுந்தபோது, மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டதாகவும் வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐந்து வீடுகளிலும் ஒரே நேரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றதுடன் தப்பியோடியவர்களை கண்டபோதும் இருட்டாக இருந்தமையினால் ஓடியவர்களை தம்மால் அடையாளம் காணமுடியவில்லை என்றும் அவர்கள் கூறினர். இதனால் பிரதேச மக்கள் மத்தியில் அச்சம்;நிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை மேற்கொண்டதை அடுத்து அது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.