பிரித்தானிய வைத்திய நிபுணர் சி.நவரட்ணம் அவர்கள் மற்றும் சித்தண்கேணி நாககன்னி அம்மன் ஆலய குருக்கள் ஆகியோருடன் கலந்துரையாடல்-

 பிரித்தானியாவின் புகழ்பூத்த வைத்திய நிபுணர் திரு. சி. நவரட்ணம் அவர்கள் கடந்த 18.08.2014 திங்கட்கிழமை அன்று யாழ்;. வலி மேற்கு பிரதேச சபைக்கு விஜயம் செய்து பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களை சந்தித்து பல்வேறு வியங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார், இச்சந்திப்பின்போது புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுபினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இதேவேளை வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கடந்த 17.08.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பன்முக வரவுசெலவுத் திட்ட நிதி ஊடாக யாழ்ப்பாணம் சித்தன்கேணி நாககன்னி அம்மன் ஆலயத்திற்கான ஒதுக்கீடு தொடர்பில் ஆலய ஞானகுரு இந்திரன் அவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
பிரித்தானியாவின் புகழ்பூத்த வைத்திய நிபுணர் திரு. சி. நவரட்ணம் அவர்கள் கடந்த 18.08.2014 திங்கட்கிழமை அன்று யாழ்;. வலி மேற்கு பிரதேச சபைக்கு விஜயம் செய்து பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களை சந்தித்து பல்வேறு வியங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார், இச்சந்திப்பின்போது புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுபினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இதேவேளை வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கடந்த 17.08.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பன்முக வரவுசெலவுத் திட்ட நிதி ஊடாக யாழ்ப்பாணம் சித்தன்கேணி நாககன்னி அம்மன் ஆலயத்திற்கான ஒதுக்கீடு தொடர்பில் ஆலய ஞானகுரு இந்திரன் அவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகங்கள், சனசமூக நிலையங்களுக்கு திரு. சித்தார்த்தன் அவர்கள் நிதியொதுக்கீடு-வலி மேற்கு தவிசாளரால் குடிநீர் திட்டம் ஆரம்பித்து வைப்பு-


 யாழ். வட்டுக்கோட்டைப் பகுதிக்கு நேற்றையதினம் (21.08.2014) விஜயம் செய்திருந்த புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் .சித்தார்த்தன் அவர்கள் வடமாகாண சபையின் ஒதுக்கீடுகளில் சுழிபுரம் மேற்கு பிரதேச இளம்சுடர் விளையாட்டுக்கழகம், சுழிபுரம் சன்ஸ்டார் விளையாட்;டுக்கழகம், திக்கரை தழிழ்த்தாய் சனசமூக நிலையம் மற்றும் மூளாய் மனிதவள சனசமூக நிலையங்களுக்கான தனது ஒதுக்கீட்டுத் தொகையினை வழங்கியுள்ளார். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி .நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் பிரதேசத்தின் எதிர்கால தேவைகள் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களிடம் எடுத்துக்கூறினார். இதேவேளை வலி மேற்கு பிரதேச சபையால் முன்னெடுக்கப்படும் பல அபிவிருத்திச் செயல் திட்டங்களில் ஒன்று சங்கானைப் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் நவீன நூலகம் ஆகும் இதற்கான குடிநீர் அமைப்புத் திட்டம் சம்பிரதாயபூர்வமாக இன்றையதினம் (22.08.2014) வலி மேற்கு பிரதேச சபைத்தவிசாளர் திருமதி நாகரஞ்சின ஐங்கரன் அவர்கள் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.
யாழ். வட்டுக்கோட்டைப் பகுதிக்கு நேற்றையதினம் (21.08.2014) விஜயம் செய்திருந்த புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் .சித்தார்த்தன் அவர்கள் வடமாகாண சபையின் ஒதுக்கீடுகளில் சுழிபுரம் மேற்கு பிரதேச இளம்சுடர் விளையாட்டுக்கழகம், சுழிபுரம் சன்ஸ்டார் விளையாட்;டுக்கழகம், திக்கரை தழிழ்த்தாய் சனசமூக நிலையம் மற்றும் மூளாய் மனிதவள சனசமூக நிலையங்களுக்கான தனது ஒதுக்கீட்டுத் தொகையினை வழங்கியுள்ளார். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி .நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் பிரதேசத்தின் எதிர்கால தேவைகள் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களிடம் எடுத்துக்கூறினார். இதேவேளை வலி மேற்கு பிரதேச சபையால் முன்னெடுக்கப்படும் பல அபிவிருத்திச் செயல் திட்டங்களில் ஒன்று சங்கானைப் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் நவீன நூலகம் ஆகும் இதற்கான குடிநீர் அமைப்புத் திட்டம் சம்பிரதாயபூர்வமாக இன்றையதினம் (22.08.2014) வலி மேற்கு பிரதேச சபைத்தவிசாளர் திருமதி நாகரஞ்சின ஐங்கரன் அவர்கள் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.
கொழும்பு மாநகரசபை உறுப்பினர் வேலணை வேணியனின் 77ஆவது பிறந்த தினம்-
 கொழும்பு மாநகரசபை உறுப்பினர் வேலணை வேணியனின் 77ஆவது பிறந்ததினத்தில் கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய தர்மகர்த்தாவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான டிஎம் சுவாமிநாதன், இலங்கை இந்து முன்னணியின் இணைத்தலைவரும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கலாநிதி குமரகுருபரன், இன நல்லிணக்க அமைச்சின் இணைப்புச் செயலாளர் இலங்கை இந்து முன்னணி செயலாளர் கலாநிதி மோகன் ஆகியோர் வேலணை வேணியனுக்கு பட்டாடை போர்த்தி சந்தன மாலை அணிவித்து வாழ்த்தினர் ஆலய பிரதம குருக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
கொழும்பு மாநகரசபை உறுப்பினர் வேலணை வேணியனின் 77ஆவது பிறந்ததினத்தில் கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய தர்மகர்த்தாவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான டிஎம் சுவாமிநாதன், இலங்கை இந்து முன்னணியின் இணைத்தலைவரும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கலாநிதி குமரகுருபரன், இன நல்லிணக்க அமைச்சின் இணைப்புச் செயலாளர் இலங்கை இந்து முன்னணி செயலாளர் கலாநிதி மோகன் ஆகியோர் வேலணை வேணியனுக்கு பட்டாடை போர்த்தி சந்தன மாலை அணிவித்து வாழ்த்தினர் ஆலய பிரதம குருக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் கூட்டமைப்பு முறைப்பாடு-
இந்தியா சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் புதுடில்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள், தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சுஷ்மா சுவராஜிடம் எடுத்துக் கூறியுள்ளதக தெரியவருகிறது. இரா. சம்பந்தன் தலைமையில் இந்தியாவுக்குச் சென்றிருக்கும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றுகாலை இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் அதிகாரிகள் பலரை சந்தித்து வடக்கு கிழக்கின் தற்போதைய நிலைமைகள் பற்றி கலந்துரையாடியுள்ளனர்.
மோசடியான முறையில் பிரித்தானிய வீசாவுக்கு விண்ணப்பித்த மூவர் கைது-
42 வயதான இலங்கைப் பெண்ணும், வயதுக்கு வந்த அவரது இரு புதல்விகளும் மோசடியான முறையில் பிரித்தானிய செல்ல வீசா பெற்றுக்கொள்ள முயற்சித்தவேளை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 2005ஆம் ஆண்டிலும் வேறு பெயர்கள் மற்றும் வேறு பிறந்த திகதிகளைப் பயன்படுத்தி பிரித்தானிய செல்ல வீசாவிற்காக விண்ணப்பித்துள்ளனர். குறித்த மூன்று பேரினதும் வீசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கு 10 வருட காலம் பிரித்தானியாவிற்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. மேலும் குறித்த மோசடியில் ஈடுபட்ட பெண்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இஸ்லாமிய பயங்கரவாதம் பாரிய அச்சுறுத்தல்-பாதுகாப்பு செயலர்-
இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் குறித்து கண்காணிக்கப்பட உள்ளதாகவும் அது நாட்டிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். புலிகள் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர் சில குழுக்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. அவை குறித்து கண்காணிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. புலிகளின் அழுத்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் சில தற்பாதுகாப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வாறான சில குழுக்கள் சர்வதேச இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பிரச்சினைகளுக்கு உரிய முறையில் தீர்வு காணப்படாவிட்டால் மீளவும் இன முரண்பாடுகள் வெடிக்கும் சாத்தியமுள்ளது என அவர் மேலும் கூறியுள்ளார்.
ஆப்பிரிக்க நாடுகளுக்கு விசா வழங்கல் தற்காலிக நிறுத்தம்-
எபோலா வைரஸ் தாக்கம் காரணமாக சில ஆபிரிக்க நாடுகளுக்கு, இலங்கை வருவதற்க்கான விசா (ஒன் எரைவல் விசா) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. நைஜீரியா, கினியா, சியராலியோன் மற்றும் லைபீரியா ஆகிய நான்கு ஆபிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களுக்கே விசா வழங்குவதே தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமையவே அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
யாழில் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலர்மீது தாக்குதல்-
யாழில் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்மீது இனம் தெரியாத நபர்கள் நேற்றிரவு 9மணியளவில் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். நல்லூர் ஆலய உற்சவத்தில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது நல்லூர் செட்டிதெரு வீதியில் வைத்து இவர்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் முகத்தில் காயமடைந்த நிலையில் விஜயகாந் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டு விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி நேற்று முன்தினம் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக விஜயகாந் தலைமையில் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியினர் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியிருந்தது.
இராணுவ முகாமில் வெடிப்புச் சம்பவம், ஒருவர் காயம்-
பளை இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் படுகாயமடைந்த இரரணுவ வீரர் ஒருவர், பலாலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த முகாமில், துப்பாக்கியொன்று தவறுதலாக வெடித்ததிலேயே மேற்படி வீரர் படுகாயமடைந்த நிலையில் நேற்றுமாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். டி.சமன்திலக (வயது 31) என்ற இராணுவ வீரரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். அவர் தனது கையில் வைத்திருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவத்தினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
வட்டு தென்மேற்கு பிரதேச அபிவிருத்திக்கு முதலமைச்சரின் நிதி ஒதுக்கீடு-
வட மாகாண முதலமைச்சரின் விசேட நிதி ஒதுக்கீட்டின் வாயிலாக வட்டு தென் மேற்கு பிரதேச அபிவிருத்திக்காக பிரதேச மக்களாலும் பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி .ஐங்கரன் அவர்களதும் வேண்டுகோளுக்கு இணங்க 18.08.2014 அன்று 2.015மில்லியன் ரூபா ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இவ்நிகழ்வின் செயற்திட்டம் தொடர்பான ஆரம்பக்கட்ட கண்காணிப்புகுழு தெரிவு கூட்டம் வட்டுகோட்டை மூன்றாம் பனை ஐக்கிய நாணய சங்க கட்டிடத்தில் சங்க தலைவர் தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக தவிசாளர் கலந்து கொண்ட பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது, இன்று அபிவிருத்தி என்ற வகையில் மக்களுடைய ஏராளமான தேவைகள் உள்ளன. இவ் விடயம் தொடர்பில் முதலமைச்சருக்கு இப் பிரதேச மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். Read more
 
		     இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது, 13வது திருத்தச் சட்டத்தை முற்றாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ள கூட்டமைப்பின் குழுவினர் அந்நாட்டின் முக்கிய தலைவர்களைச் சந்திக்கத் தீர்மானித்துள்ளனர். இதன்படி நாளை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜையும் நாளை மறுதினம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்க இவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது, 13வது திருத்தச் சட்டத்தை முற்றாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ள கூட்டமைப்பின் குழுவினர் அந்நாட்டின் முக்கிய தலைவர்களைச் சந்திக்கத் தீர்மானித்துள்ளனர். இதன்படி நாளை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜையும் நாளை மறுதினம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்க இவர்கள் எதிர்பார்த்துள்ளனர். வட மாகாண சபையின் அமர்வு இன்று நடைபெற்றபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 6 பேர் வெளிநடப்பு செய்துள்ளனர். ஆளுங்கட்சி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் சமர்ப்பித்த 3 பிரேரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததாக கூறப்படுகிறது. சர்வதேச விசாரணைக்கான கால வரையறையை நீடித்தல் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் இந்த 03 பிரேரணைகள் சிவாஜிலிங்கத்தினால் இன்றைய அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
வட மாகாண சபையின் அமர்வு இன்று நடைபெற்றபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 6 பேர் வெளிநடப்பு செய்துள்ளனர். ஆளுங்கட்சி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் சமர்ப்பித்த 3 பிரேரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததாக கூறப்படுகிறது. சர்வதேச விசாரணைக்கான கால வரையறையை நீடித்தல் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் இந்த 03 பிரேரணைகள் சிவாஜிலிங்கத்தினால் இன்றைய அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. பாராளுமன்ற உறுப்பினர்களான பிரபா கணேசன் மற்றும் பீ.திகாம்பரம் ஆகியோர் பிரதியமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். அலரி மாளிகையில் இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் இவர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, தொலைத் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரதியமைச்சராக பிரபா கணேசனும், தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க பிரதியமைச்சராக பீ திகாம்பரமும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களான பிரபா கணேசன் மற்றும் பீ.திகாம்பரம் ஆகியோர் பிரதியமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். அலரி மாளிகையில் இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் இவர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, தொலைத் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரதியமைச்சராக பிரபா கணேசனும், தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க பிரதியமைச்சராக பீ திகாம்பரமும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணசபைத் தேர்தலின் பிரசார நடவடிக்கைகளுக்கு அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அரச வளங்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. இவ்விடயம் தொடர்பில் 10 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் பிரிவு குறிப்பிடுகின்றது. இதேவேளை, அரச உத்தியோகத்தர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் சம்பவங்கள் தொடர்பில் 06 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. ஊவா மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் 33 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. சட்டவிரோத போஸ்டர், கட்அவுட்களை காட்சிப்படுத்துல் தொடர்பில் 10 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதனைத்தவிர, அரசியற் காரணங்களுக்காக அரச உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்குவது தொடர்பிலும் 05 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
ஊவா மாகாணசபைத் தேர்தலின் பிரசார நடவடிக்கைகளுக்கு அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அரச வளங்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. இவ்விடயம் தொடர்பில் 10 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் பிரிவு குறிப்பிடுகின்றது. இதேவேளை, அரச உத்தியோகத்தர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் சம்பவங்கள் தொடர்பில் 06 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. ஊவா மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் 33 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. சட்டவிரோத போஸ்டர், கட்அவுட்களை காட்சிப்படுத்துல் தொடர்பில் 10 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதனைத்தவிர, அரசியற் காரணங்களுக்காக அரச உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்குவது தொடர்பிலும் 05 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்தியாவின் ஈரோடு மாவட்டம் பவானி சாகரில் அமைந்துள்ள அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை வேறு முகாமிற்கு இடம்மாற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அங்குள்ளவர்களின் கோரிக்கையை பரிசீலித்துப் பார்த்ததையடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு நடவடிக்கைகள் தொடர்பான ஆணையாளர் பி.ஆனந்த் தெரிவித்துள்ளார். குறித்த அகதிகளுக்கு தேவையான நீர், சுகாதாரம் மற்றும் கழிவகற்றல் வசதிகள் போதுமானளவு இல்லாமையினாலேயே இவர்கள் இடமாற்றப்படவுள்ளனர். இந்த முhகமில் 1057 குடும்பங்களைச் சேர்ந்த 3532 பேர் வசிக்கின்றனர். இவர்களில் 1000 பேரை வேறிடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஈரோடு மாவட்டம் பவானி சாகரில் அமைந்துள்ள அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை வேறு முகாமிற்கு இடம்மாற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அங்குள்ளவர்களின் கோரிக்கையை பரிசீலித்துப் பார்த்ததையடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு நடவடிக்கைகள் தொடர்பான ஆணையாளர் பி.ஆனந்த் தெரிவித்துள்ளார். குறித்த அகதிகளுக்கு தேவையான நீர், சுகாதாரம் மற்றும் கழிவகற்றல் வசதிகள் போதுமானளவு இல்லாமையினாலேயே இவர்கள் இடமாற்றப்படவுள்ளனர். இந்த முhகமில் 1057 குடும்பங்களைச் சேர்ந்த 3532 பேர் வசிக்கின்றனர். இவர்களில் 1000 பேரை வேறிடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊவா பரணகம – கலஹகம பகுதியிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகம்மீது இன்று அதிகாலை 3.00மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஐக்கிய தேசியக் கட்சியினர் பயன்படுத்திய முச்சக்கர வண்டியொன்றும் இதன்போது தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது. தனியாரின் மரக்கறி வர்த்தக நிலைய கட்டிடத்திலேயே குறித்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த ஆட்டோ முற்றாக சேதமடைந்துள்ளதோடு, வர்த்தக நிலையத் தொகுதியும் சேதமடைந்துள்ளது. ஏ.எம்.புத்ததாஸ எனும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளரின் ஆதரவாளர்களாலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐ.தே.கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் ஐயந்த கன்னங்கர கூறியுள்ளார். ஐ.தே.கட்சியின் முதன்மை வேட்பாளர் ஹரீன் பிரனாந்து கலந்துகொண்ட சந்திப்பொன்று இந்த அலுவலகத்தில் நடைபெற்றது. அதன் பின்னர் இதனை ஏற்பாடு செய்த குழுவினருக்கு இரவில் ஜீப் வண்டியில் வந்த சிலர் மிரட்டல் விடுத்துள்ளனர் என கன்னங்கரவினால் தமக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக கபே சுட்டிக்காட்டியுள்ளது.
ஊவா பரணகம – கலஹகம பகுதியிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகம்மீது இன்று அதிகாலை 3.00மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஐக்கிய தேசியக் கட்சியினர் பயன்படுத்திய முச்சக்கர வண்டியொன்றும் இதன்போது தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது. தனியாரின் மரக்கறி வர்த்தக நிலைய கட்டிடத்திலேயே குறித்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த ஆட்டோ முற்றாக சேதமடைந்துள்ளதோடு, வர்த்தக நிலையத் தொகுதியும் சேதமடைந்துள்ளது. ஏ.எம்.புத்ததாஸ எனும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளரின் ஆதரவாளர்களாலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐ.தே.கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் ஐயந்த கன்னங்கர கூறியுள்ளார். ஐ.தே.கட்சியின் முதன்மை வேட்பாளர் ஹரீன் பிரனாந்து கலந்துகொண்ட சந்திப்பொன்று இந்த அலுவலகத்தில் நடைபெற்றது. அதன் பின்னர் இதனை ஏற்பாடு செய்த குழுவினருக்கு இரவில் ஜீப் வண்டியில் வந்த சிலர் மிரட்டல் விடுத்துள்ளனர் என கன்னங்கரவினால் தமக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக கபே சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் மேற்கொள்ளும் யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான்கீ முன் முழுமையான ஆதரவினை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டிபன் டுஜாரிக் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொடர்பில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும். ஐக்கிய நாடுகளின் விசாரணை குழுவினால் இலங்கையில் நடத்தப்படும் போர்க்குற்ற விசாரணைகளின்மூலம் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு வழியேற்படும். அதனடிப்படையில் அதற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என பேச்சாளர் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் மேற்கொள்ளும் யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான்கீ முன் முழுமையான ஆதரவினை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டிபன் டுஜாரிக் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொடர்பில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும். ஐக்கிய நாடுகளின் விசாரணை குழுவினால் இலங்கையில் நடத்தப்படும் போர்க்குற்ற விசாரணைகளின்மூலம் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு வழியேற்படும். அதனடிப்படையில் அதற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என பேச்சாளர் கூறியுள்ளார். யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு கலைவாணி சனசமூக நிலையத்திற்கான மின்சார இணைப்பினை வழங்குவதற்காக ஒருதொகைப் பணம் வழங்கப்பட்டுள்ளது. புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு தர்மலிங்கம் சித்தார்த்தன் அவரகளால் மேற்படி நிதியுதவியானது கலைவாணி சனசமூக நிலையத்தின் தலைவர் திரு கஜன் அவர்களிடம் நேற்றையதினம் (18.08.2014) வழங்கப்பட்டுள்ளது. கலைவாணி சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. கஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், புன்னாலைக்கட்டுவன் பிரதேச சமூக சேவையாளருமான திரு லோகன் அவர்களும் உரையாற்றினார்கள். ஊர்ப் பெரியோர்கள், பெண்கள், இளைஞர்கள் என அக்கிராமத்தைச் சேர்ந்த பெருமளவிலானோர் இந்நிகழ்வினில் கலந்து கொண்டிருந்தனர். புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் அண்மையில் சுவிஸ் நாட்டிற்கு விஜயம் செய்திருந்தபோது புளொட்டின் சுவிஸ் கிளையினரால் வழங்கப்பட்ட பணத்திலிருந்து ஒரு தொகுதியே (25,000ருபாய்) மேற்படி சனசமூக நிலையத்திற்கு மின்சார இணைப்பினை வழங்குவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது.
யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு கலைவாணி சனசமூக நிலையத்திற்கான மின்சார இணைப்பினை வழங்குவதற்காக ஒருதொகைப் பணம் வழங்கப்பட்டுள்ளது. புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு தர்மலிங்கம் சித்தார்த்தன் அவரகளால் மேற்படி நிதியுதவியானது கலைவாணி சனசமூக நிலையத்தின் தலைவர் திரு கஜன் அவர்களிடம் நேற்றையதினம் (18.08.2014) வழங்கப்பட்டுள்ளது. கலைவாணி சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. கஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், புன்னாலைக்கட்டுவன் பிரதேச சமூக சேவையாளருமான திரு லோகன் அவர்களும் உரையாற்றினார்கள். ஊர்ப் பெரியோர்கள், பெண்கள், இளைஞர்கள் என அக்கிராமத்தைச் சேர்ந்த பெருமளவிலானோர் இந்நிகழ்வினில் கலந்து கொண்டிருந்தனர். புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் அண்மையில் சுவிஸ் நாட்டிற்கு விஜயம் செய்திருந்தபோது புளொட்டின் சுவிஸ் கிளையினரால் வழங்கப்பட்ட பணத்திலிருந்து ஒரு தொகுதியே (25,000ருபாய்) மேற்படி சனசமூக நிலையத்திற்கு மின்சார இணைப்பினை வழங்குவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. 


 புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு.திருமதி கனகரட்ணம் கனகம்மா அவர்களது குடும்பம் சார்பாக அவர்களின் பிள்ளைகளான சுவிஸில் வசிக்கும் அருள், ரவி மற்றும் இலங்கையில் வசிக்கும் ரகுநாதன் ஆகியோர் இணைந்து சுமார் பத்தொன்பது (19) இலட்சம் ரூபா பெறுமதியான ‘மருத்துவ ஊடு கதிர்ப்படக் கருவியினை  (Scanning Machine) புங்குடுதீவு வைத்தியசாலைக்கு கடந்த 15.08.2014 சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சார்பாக நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு.திருமதி கனகரட்ணம் கனகம்மா அவர்களது குடும்பம் சார்பாக அவர்களின் பிள்ளைகளான சுவிஸில் வசிக்கும் அருள், ரவி மற்றும் இலங்கையில் வசிக்கும் ரகுநாதன் ஆகியோர் இணைந்து சுமார் பத்தொன்பது (19) இலட்சம் ரூபா பெறுமதியான ‘மருத்துவ ஊடு கதிர்ப்படக் கருவியினை  (Scanning Machine) புங்குடுதீவு வைத்தியசாலைக்கு கடந்த 15.08.2014 சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சார்பாக நன்கொடையாக வழங்கியுள்ளனர். 

 காணாமல் போனவர்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுக்கு மேலும் இருவரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை நியமித்துள்ளார். நிபுணர்களான அவ்தாஷ் கௌஷல், அஃமர் பீ சூபி ஆகிய இருவரே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கு சட்ட மேதைகளான டேஸ்மன்டி சில்வா, சேர் ஜேப்ரி நைஸ், டேவிட் எம். கிரேன் ஆகிய மூவரும், கடந்த ஜுலை 15ஆம்திகதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருந்தனர்.
காணாமல் போனவர்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுக்கு மேலும் இருவரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை நியமித்துள்ளார். நிபுணர்களான அவ்தாஷ் கௌஷல், அஃமர் பீ சூபி ஆகிய இருவரே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கு சட்ட மேதைகளான டேஸ்மன்டி சில்வா, சேர் ஜேப்ரி நைஸ், டேவிட் எம். கிரேன் ஆகிய மூவரும், கடந்த ஜுலை 15ஆம்திகதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருந்தனர். முல்லைத்தீவு – வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பகுதியில் மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். வீட்டுக் காணியை துப்பரவு செய்து நெருப்பு வைத்த சமயம் அங்கிருந்த மர்ப்பப் பொருளொன்று வெடித்துள்ளது. இச்சம்பவத்தில் வெள்ளாம் முள்ளிவாய்க்காலைச் சேர்ந்த வேலு செல்வநாயகம் என்பவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு – வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பகுதியில் மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். வீட்டுக் காணியை துப்பரவு செய்து நெருப்பு வைத்த சமயம் அங்கிருந்த மர்ப்பப் பொருளொன்று வெடித்துள்ளது. இச்சம்பவத்தில் வெள்ளாம் முள்ளிவாய்க்காலைச் சேர்ந்த வேலு செல்வநாயகம் என்பவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். யாழ் மாவட்டம் பண்டத்தரிப்பு வடலியடைப்பு கலைவாணி சனசமூக நிலைய இளைஞர் மன்றத்தினால் அதே இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கலையரங்க கட்டடத்தின் தேவைக்காக நிதியுதவி ஒன்று நேற்றுமாலை (17.08.2014) புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது இந்நிதியினை மன்றத்தின் தலைவர் யோகேஸ்வரன் ராகவன் அவர்களிடம் சித்தார்த்தன் அவர்கள் கையளித்தார். பின்னர் சன சமூக நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பாக புளொட் தலைவரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கேட்டறிந்து கொண்டார்
யாழ் மாவட்டம் பண்டத்தரிப்பு வடலியடைப்பு கலைவாணி சனசமூக நிலைய இளைஞர் மன்றத்தினால் அதே இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கலையரங்க கட்டடத்தின் தேவைக்காக நிதியுதவி ஒன்று நேற்றுமாலை (17.08.2014) புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது இந்நிதியினை மன்றத்தின் தலைவர் யோகேஸ்வரன் ராகவன் அவர்களிடம் சித்தார்த்தன் அவர்கள் கையளித்தார். பின்னர் சன சமூக நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பாக புளொட் தலைவரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கேட்டறிந்து கொண்டார்


 யாழ். ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க அறநெறி பாலர் முன்பள்ளியில் புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் வழிகாட்டலில் திரு. சே.ஞானசபேசன் அவர்களின் ஏற்பாட்டில் புலம்பெயர்ந்து வாழும் திரு. வே.மணிவண்ணன் அவர்களின் அனுசரணையுடன் இலவச புலமைப்பரிசில் பரீட்சை வகுப்புக்கள் நடைபெற்று வந்தது. இம்மாணவர்களுக்கான இறுதிநாள் வகுப்பும் பெற்றோர்களுடனான கலந்துரையாடலும் கடந்த 14-08-2014 வியாழக்கிழமையன்று மாலை 3.30 மணிக்கு திரு. வே.ஹரிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆசிரியர் திரு. க. அருந்தவநேசன் (புலமைப்பரிசில் பரீட்சை ஆசிரியர்), திரு. இ. நவகேதீஸ்வரன் மற்றும் பெற்றோரும் கலந்து சிறப்பித்தனர்.
யாழ். ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க அறநெறி பாலர் முன்பள்ளியில் புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் வழிகாட்டலில் திரு. சே.ஞானசபேசன் அவர்களின் ஏற்பாட்டில் புலம்பெயர்ந்து வாழும் திரு. வே.மணிவண்ணன் அவர்களின் அனுசரணையுடன் இலவச புலமைப்பரிசில் பரீட்சை வகுப்புக்கள் நடைபெற்று வந்தது. இம்மாணவர்களுக்கான இறுதிநாள் வகுப்பும் பெற்றோர்களுடனான கலந்துரையாடலும் கடந்த 14-08-2014 வியாழக்கிழமையன்று மாலை 3.30 மணிக்கு திரு. வே.ஹரிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆசிரியர் திரு. க. அருந்தவநேசன் (புலமைப்பரிசில் பரீட்சை ஆசிரியர்), திரு. இ. நவகேதீஸ்வரன் மற்றும் பெற்றோரும் கலந்து சிறப்பித்தனர். தலைவர் திரு. வே.ஹரிவண்ணன் தலைமையுரையில், மாணவர்கள் தமது கல்வி மீதான அக்கறையை புலமை பரிசில்பரீட்சையின் பின்னரும் தொடரவேண்ர்டும் எனவும் தன்னம்பிக்கையுடன் பரீட்சைக்கு தோற்றுவதற்கான சூழலை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தலைவர் திரு. வே.ஹரிவண்ணன் தலைமையுரையில், மாணவர்கள் தமது கல்வி மீதான அக்கறையை புலமை பரிசில்பரீட்சையின் பின்னரும் தொடரவேண்ர்டும் எனவும் தன்னம்பிக்கையுடன் பரீட்சைக்கு தோற்றுவதற்கான சூழலை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
 யாழ். பருத்தித்துறை 2ஆம் குறுக்குத் தெருவில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றுமாலையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தும்பளையைச் சேர்ந்த தெய்வேந்திரன் ஸ்ரீரங்கன் (வயது 22) என்பவரே படுகாயமடைந்துள்ளார். இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் பருத்தித்துறையைச் சேர்ந்த ஒருவரைக் சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக தெரிவித்துள்ளனர். மேலும், இந்தக் கைகலப்புச் சம்பவத்தில் யாழ் – கொழும்பு தனியார் பஸ் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். பருத்தித்துறை 2ஆம் குறுக்குத் தெருவில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றுமாலையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தும்பளையைச் சேர்ந்த தெய்வேந்திரன் ஸ்ரீரங்கன் (வயது 22) என்பவரே படுகாயமடைந்துள்ளார். இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் பருத்தித்துறையைச் சேர்ந்த ஒருவரைக் சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக தெரிவித்துள்ளனர். மேலும், இந்தக் கைகலப்புச் சம்பவத்தில் யாழ் – கொழும்பு தனியார் பஸ் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்துக்கான தொடரூந்து சேவைகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படக்கூடியதாக இருக்கும் என இந்தியாவின் உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற இந்திய சுதந்திர தின விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்தியாவின் வேலைத்திட்டங்கள் அனைத்தும் தற்போது இலங்கையில் முழுவீச்சில் இடம்பெற்று வருகின்றன. அடுத்த மாதமளவில் யாழ்ப்பாணம் வரையான தொடரூந்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று இந்தியாவின் உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கான தொடரூந்து சேவைகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படக்கூடியதாக இருக்கும் என இந்தியாவின் உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற இந்திய சுதந்திர தின விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்தியாவின் வேலைத்திட்டங்கள் அனைத்தும் தற்போது இலங்கையில் முழுவீச்சில் இடம்பெற்று வருகின்றன. அடுத்த மாதமளவில் யாழ்ப்பாணம் வரையான தொடரூந்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று இந்தியாவின் உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா மேலும் குறிப்பிட்டுள்ளார். வவுனியா நாமல்கம ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதியான 65வயதான காலி ஸ்ரீநந்தரத்தன தேரர் மற்றும் அவருடைய உதவியாளரான 49வயதுடைய ஆகியோர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை 6.20 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் ஏழு மாதங்களின் பின்னர் வவுனியாவில் நேற்று பெய்த அடை மழையை அடுத்து ஏற்பட்ட மின்னல் தாக்கத்தின்போதே இவ்விருவரும் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா நாமல்கம ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதியான 65வயதான காலி ஸ்ரீநந்தரத்தன தேரர் மற்றும் அவருடைய உதவியாளரான 49வயதுடைய ஆகியோர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை 6.20 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் ஏழு மாதங்களின் பின்னர் வவுனியாவில் நேற்று பெய்த அடை மழையை அடுத்து ஏற்பட்ட மின்னல் தாக்கத்தின்போதே இவ்விருவரும் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி இலங்கை வருகைதரவுள்ளார். சீன ஜனாதிபதியொருவர் முப்பது வருடங்களுக்கு பிறகு இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசியல் பிரமுகர்களை அவர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் கற்பிட்டி, நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது கட்டத்தையும் ஆரம்பித்துவைப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி இலங்கை வருகைதரவுள்ளார். சீன ஜனாதிபதியொருவர் முப்பது வருடங்களுக்கு பிறகு இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசியல் பிரமுகர்களை அவர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் கற்பிட்டி, நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது கட்டத்தையும் ஆரம்பித்துவைப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை நிலாவெளி, 8ம் கட்டை முகைதீன் பள்ளிவாசல் வீதியிலுள்ள வீடுகள் சிலவற்றுக்குள் இன்று அதிகாலை மர்ம நபர்கள் நுழைந்ததையடுத்து பிரதேச மக்கள் மத்தியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு 5 வீடுகளுக்குள் இனந்தெரியாத நபர்கள் நுழைந்துள்ளனர். தாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, வீட்டின் யன்னல்களை கழற்றிவிட்டு, மர்ம நபர்கள் வீடுகளுக்குள் புகுந்ததாகவும் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் எழுந்தபோது, மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டதாகவும் வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐந்து வீடுகளிலும் ஒரே நேரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றதுடன் தப்பியோடியவர்களை கண்டபோதும் இருட்டாக இருந்தமையினால் ஓடியவர்களை தம்மால் அடையாளம் காணமுடியவில்லை என்றும் அவர்கள் கூறினர். இதனால் பிரதேச மக்கள் மத்தியில் அச்சம்;நிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை மேற்கொண்டதை அடுத்து அது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
திருகோணமலை நிலாவெளி, 8ம் கட்டை முகைதீன் பள்ளிவாசல் வீதியிலுள்ள வீடுகள் சிலவற்றுக்குள் இன்று அதிகாலை மர்ம நபர்கள் நுழைந்ததையடுத்து பிரதேச மக்கள் மத்தியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு 5 வீடுகளுக்குள் இனந்தெரியாத நபர்கள் நுழைந்துள்ளனர். தாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, வீட்டின் யன்னல்களை கழற்றிவிட்டு, மர்ம நபர்கள் வீடுகளுக்குள் புகுந்ததாகவும் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் எழுந்தபோது, மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டதாகவும் வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐந்து வீடுகளிலும் ஒரே நேரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றதுடன் தப்பியோடியவர்களை கண்டபோதும் இருட்டாக இருந்தமையினால் ஓடியவர்களை தம்மால் அடையாளம் காணமுடியவில்லை என்றும் அவர்கள் கூறினர். இதனால் பிரதேச மக்கள் மத்தியில் அச்சம்;நிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை மேற்கொண்டதை அடுத்து அது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.