ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் ஆரம்பம்-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 27ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகவுள்ளது இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் விசாரணை குழுவினர் மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பான தகவல்கள் இன்று ஆரம்பமாகவுள்ள கூட்டத் தொடரில் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் 26ஆம் திகதி தொடக்கம் இன்றுவரை குறித்த முன்னெடுக்கப்பட்ட விசாரணை தொடர்பான தகவல்கள் இவ்வாறு வெளியிடப்படவுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்த வருடத்திற்கான இறுதி கூட்டத் தொடராக இன்று ஆரம்பமாகவுள்ள கூட்டத் தொடர் அமைந்துள்ளதென இலங்கைமனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஆறு வருடங்களாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராக பதவி வகித்து வந்த நவநீதம்பிள்ளை ஓய்வுபெற்றுள்ள நிலையில் புதிய ஆணையாளராக பதவியேற்றுள்ள ஜோர்தான் இளவரசர் ஷெய்த் அல் {ஹசைன் இன்று ஆரம்பவுரை நிகழ்த்தவுள்ளார். ஆணையாளர்களில் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் இலங்கை தொடர்பான விசாரணைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹானாமஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் பயங்கரமான சூழல் தொடர்கிறது-ஐ.நா மனித உரிமை ஆணையாளர்-
இலங்கையில் மனித உரிமைகளுக்காக செயற்படும் சமூகத்தினருக்கு எதிராக பிரயோகிக்கப்படும் பயமுறுத்தல்களையிட்டு நான் அச்சமடைந்துள்ளேன் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல் ஹூசேன் தெரிவித்துள்ளார். ஐ.நா சபையின் 27ஆவது அமர்வு இன்று ஆரம்பமானபோது தனது ஆரம்ப உரையின்போது மனித உரிமை ஆணையகத்தின் புதிய ஆணையாளர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களும் வன்முறையும் அரங்கேறி வருவதைக் கண்டிப்பதாக கூறிய அவர், முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பாதையில் தொடர்ந்து பயணிக்கப் போவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். புகலிட கோரிக்கையாளர்களின் உரிமையை அவுஸ்திரேலியா தொடர்ச்சியாக மீறிவருவதையும், அடைக்கலம் கோருவோரை கடலில் வைத்து விசாரிப்பதையும் கப்பல்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புவதையும் கடுமையாக அவர் கண்டித்துள்ளார். எதேச்சாதிகாரமாக தடுத்துவைத்தல் சித்திரவதைக்கு உட்படும் சாத்தியம் ஆகிய மனித உரிமை மீறல்களுக்கு இந்த கொள்கை வழிவகுத்துள்ளது என ஷெயிட் அல் ஹூசேன் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி ஆதரவு பல்கலைக்கழக மாணவர்கள்மீது தாக்குதல்-
மொனராகலை – மதுருகெட்டிய பிரதேசத்தில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஆதரவாளர்களான பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் இன்றுகாலை 6.30 மணியளவில் இலக்கத் தகடு இல்லாத டிபென்டர் வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு அதில் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மாணவன் கடுமையாகத் தாக்கப்பட்டு வீதியில் விட்டுச் செல்லப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு இயக்கமான கபே தெரிவித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணி மொனராகலை மாவட்ட வேட்பாளர் பல்லியகுருகே விஜேசிறியின் வீட்டில் குறித்த மாணவர்கள் தங்கியிருந்துள்ளனர். இன்றுகாலை முகம் கழுவவென நால்வரும் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றுக்குச் சென்றவேளை இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட மாணவருக்கு கழுத்து, தலை, கை பகுதிகளில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. வேட்பாளர் பல்லியகுருகே விஜேசிறியின் வீட்டின்மீது இதற்கு முன்னர் தாக்குதல் நடத்தப்பட்டதோடு துப்பாக்கிச்சூடும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் பொதுமக்களின் காணிகள் கையளிப்பு-
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த நிலைமையின்போது படைமுகாமாக படையினரால் பயன்படுத்தப்பட்டுவந்த பொதுமக்களின் காணிகள் கையளிக்கப்பட்டு வருகின்றன. இதன்கீழ் களுவாஞ்சிகுடி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் படையினரின் முகாமாக இருந்த பொதுமக்களின் காணிகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஓந்தாச்சிமடத்தில் உள்ள 18வது சிங்கபாகு படைப்பிரிவின் அலுவலகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. பாதுகாப்பு செயலர் கோத்தபாயவின் ஆலோசனையின்பேரில் கிழக்கு மாகாண கட்டளையிடும் அதிகாரி மேஜர் ஜெனரல் லால் பெரேராவின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்போது களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஓந்தாச்சிமடத்தில் படையினரின் முகாம் இருந்த பொதுமக்களின் காணிகளின் ஒரு பகுதி இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் இருந்த பிரதான படைமுகாம் மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்டவெல்லாவெளியிலுள்ள படைமுகாம் என்பன அகற்றப்பட்டுள்ளன.
மாணவியைக் காணவில்லையென முறைப்பாடு-
நுவரெலியா தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வட்டக்கொடை -மடக்கும்புர கீழ் பிரிவு தோட்டத்தில் வசிக்கும் பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார். வட்டக்கொடை தமிழ் மகா வித்தியாலயத்தில் 10ஆம் ஆண்டு கல்வி கற்கும் சக்திவேல் நித்தியா (வயது 15) எனும் மாணவியே கடந்த 5ஆம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. வெளியே சென்ற மாணவி வீட்டுக்கு திரும்பாததையடுத்து மாணவியின் உறவினர்கள் அயலவர்களின் உதவியோடு தேடுதல் பணிகளில் ஈடுப்பட்டிருந்த போதிலும் அவர் கிடைக்கவில்லை. அதன்பின் காணாமல் போன மாணவியின் தந்தை நேற்று 7ஆம் திகதி தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவுசெய்துள்ளார். முறைப்பாட்டின் அடிப்படையில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழரசு கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையால் அறிவிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவின் நடவடிக்கைகள் முழுமையாக நிறைவே உதவி அளிக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி 15ஆவது தேசிய மாநாடு நேற்றிரவு வவுனியாவில் முடிவுற்றபோது நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-
01. 2014 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 5,6,7 ஆம் திகதிகளில் வவுனியாவில் கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாடு ஏறத்தாழ அறுபது வருடங்களாக இக்கட்சியின் கொள்கைகளுக்காக அயராது உழைத்தவர்களுக்கும் இதன் அடிப்படைக் கொள்கைகளை ஏற்று, ஆதரித்து, தொடர்ச்சியாக வாக்களித்து, இதுவே தமிழ் மக்களுடைய நிலைப்பாடு என்பதை ஜனநாயக முறைப்படி உறுதி செய்த எமது மக்களுக்கும், எம்முடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கும் அதேவேளையிலே அந்தக் கொள்கை – அதாவது, எமது இனத்தின் சுயநிர்ணய அடிப்படையிலே, பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள்ளே, இணைந்த வடக்கு – கிழக்கில் பகிரப்படும் இறைமையின் அடிப்படையில், தன்னாட்சி அதிகாரம் கொண்ட அரசு ஒன்று வன்முறையற்ற சாத்வீகப் போராட்டத்தின் மூலம் – வென்றெடுக்கப்படும் வரை போராடுவோம் என்று எமது மக்களுக்கு உறுதி கூறுகின்றது. Read more
கியூபா வெளிவிவகார அமைச்சர் புருனோ ரோதிகேஸ் பரில்லா, இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ளார். ஜப்பானின் பிரதமர் ஒருவர் 24 வருடங்களின் பின்னர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனது இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும், அத்துடன் பல்வேறு சந்திப்புக்களை மேற்கொள்வதற்கும் ஏற்படாகியிருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும காயமடைந்துள்ளார். காயமடைந்த அவர், களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த ஜீப் வாகனம் தெற்கு அதிவேக வீதியின் தொடம்கொட பகுதியில் குடை சாய்ந்ததென தகவல் கிடைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அபுதாபியிலிருந்து நாடுகடத்தப்பட்ட இருவரை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று கைதுசெய்துள்ளனர். போலியான கடவுச்சீட்டுக்கள் ஊடாக பயணித்தமை மற்றும் புலிகள் அமைப்பை மீளவும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுத்தனரா என்ற விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக இவ்விருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வல்லுவர்புரம், விசுவமடுவைச் சேர்ந்த பாலச்சந்திரன் தவபாலன் அனுஷன் (வயது 20), கடகலந்தகுளம், முருங்கனைச் சேர்ந்த செபஸ்தியன் பிள்ளை ரொபட் (வயது 43) ஆகிய இருவருமே கைதானவர்களாவர். இதில் செபஸ்தியன்பிள்ளை ரொபட் என்பவர் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் திகதி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு 2010ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் திகதி பிணை நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டவர் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் வெளியிடப்படவிருந்த 15 தீர்மானங்கள் தொடர்பில் சிக்கல் தோன்றியுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மேலும் செயற்குழு தலைவராக இரா.சம்பந்தனும், செயலாளராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கி.துரைராஜசிங்கம் தெரிவாகியுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சி பொதுச்சபை கூட்டம் இன்றுகாலை முதல் வவுனியாவில் நடைபெற்று வருகின்றது. வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தில் கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டை முன்னிட்டு நடத்தப்படும் பொதுச் சபை கூட்டத்தில் இந்த தெரிவுகள் இடம்பெற்றுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மாநாடு நாளையதினம் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கலாநிதி அன்னலட்சுமி சின்னத்தம்பி அவர்களின் நினைவுநாளும் நினைவுப் பேருரையும் எதிர்வரும் 11.09.2014 வியாழக்கிழமை அன்று காலை 8.45 மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல் 1.00மணிவரையில் இடம்பெறவுள்ளது. செல்லா மண்டபம், வாழ்வகம், சபாபதிப்பிள்ளை வீதி, சுன்னாகம் என்ற முகவரியில் வாழ்வகத்தின் தலைவர் திரு. ஆறுமுகம் ரவீந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் கலந்து கொள்கின்றார். சிறப்பு அதிதிகளாக – வலி தெற்கு (உடுவில்) உதவி பிரதேச செயலர் திருமதி யசோதா உதயகுமார் மற்றும் சர்வதேச லயன்ஸ் கழகங்களின் 306(டீ)ஆளுனர் லயன் னுச.வை.தியாகராஜா, யாழ். ஞானம் பவுண்டேசன் திரு கனகசிங்கம் நவநீதன், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி னுச.மகேந்திரன் சுரேந்திரன், வரையறுக்கப்பட்ட வர்த்தக வங்கியின் பிராந்திய முகாமையாளர் திரு. றோய் நிக்கலஸ், சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு.எச்.எல்துஸ்யந்த ஆகியோரும், கௌரவ விருந்தினராக – தெல்லிப்பளை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தான தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இந்நிகழ்வின்போது யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவபீடம், முதுநிலை விரிவுரையாளர் திருமதி திலகேஸ்வரி குமுதரஞ்சன் அவர்கள் நினைவுப் பேருரையினை ஆற்றவுள்ளார்.
வடமாகாண சபையை இயங்கவிடாமல் அரசாங்கம் முட்டுக்கட்டையாக இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதி பிரதம திட்டப்பணிப்பாளர் அன்ரூ மன்னிற்கு எடுத்துக்கூறியதாக யாழ். மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார். யாழ்.ஆயர் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதி பிரதம திட்டப்பணிப்பாளர் அன்ரூ மன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு யாழ்.ஆயர் இல்லத்தில் இன்று இடம்பெற்றது. இச்சந்திப்பை தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை, ஆளுநர் பதவியிலிருந்து மாற்றாமல் தொடர்ந்து அவரை இரண்டாவது தடவையாக நியமித்து வடமாகாண சபையின் செயற்பாடுகளை செய்யவிடாமல் அரசாங்கம் முட்டுக்கட்டையாக இருப்பதாக அவருக்கு எடுத்துக்கூறினேன். தமிழ் மக்கள் மத்தியில் திருப்பம் ஒன்று கட்டாயம் வேண்டும். தமிழ் மக்கள் சந்தோஷமாக வாழ்வதற்கு ஏற்ற வழிவகைகளை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என அவரிடம் கேட்டுக்கொண்டேன். வடக்கு மாகாண சபைக்கு இருக்கும் முட்டுக்கட்டைகளை தான் ஏற்றுக்கொள்வதாகவும், இது தொடர்பில் வடமாகாண முதலமைச்சரும் தன்னிடம் எடுத்துக் கூறியதாகவும் அன்ரு மன், தன்னிடம் தெரிவித்ததாக ஆயர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேசத்திற்கு உட்பட்ட சத்தியக்காட்டு சந்தைப்பகுதியின் புதிய கடைத்தொகுதியை கடந்த 29.08.2014 அன்று வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் திறந்து வைத்தார். இதன்போது கருத்துத் தெரிவித்த தவிசாளர் அவர்கள், எதிர்வரும் காலங்களில் மேலும் இச்சந்தைப் பகுதியில் பல அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்தவுள்ளதாக கூறினார். இதேவேளை 29.08.2014 அன்று பிரதேச மக்கள் வழங்கிய தகவலையடுத்து சுழிபுரம் 
நெல்லியன் பகுதியிலுள்ள கிரியோலைச் சந்திப் பகுதியில் விசமிகளால் எரியூட்டப்படட்ட பற்றைக்காட்டுப் பகுதிகள் மற்றும் பனை மரங்களை வலி மேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் நேரடியாக பார்;வையிட்டார். இதனைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பில் அவர், பிரதேச செயலர் மற்றும் வடமாகாண சபை சுற்றுப்புற சூழல் மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர்க்கு எழுத்துமூலமாகவும் அறிவித்தார். இது தொடர்பாக தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கூறுகையில், இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுமானால் சுற்றுப்புற சூழல் மட்டுமல்லாது இப்பகுதி மக்களது இயல்பு நிலையும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று குறிப்பிட்டார்.
வவுனியா திருநாவற்குளம் பாரஊர்தி தரிப்பு நிலையத்திற்கு முன்பாக அமரர் தோழர் தர்மலிங்கம் தேவராஜா (இளங்கோ) அவர்களின் ஞாபகார்த்தமாக இன்று பேருந்து தரிப்பு நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டது. மேற்படி பேருந்து தரிப்பு நிலையத்;தின் திறப்புவிழா ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர் திருமதி சோதிமதி நகுலேஸ்வரம்பிள்ளை அவர்களின் தலைமையில் இன்று (03.09.2014) காலை 10.30மணியளவில் இடம்பெற்றது. 








இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரி ஒருவர் பயணித்த கார் தெற்கு அதிவேக வீதியில் விபத்துக்குள்ளானமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பாணந்துறைக்கும் தொடங்கொடைக்கும் இடையிலான 21ஆம் மைல் கல் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் பாதுகாப்பு சுவரில் மோதியுள்ளது. சம்பவம் இடம்பெற்றபோது அந்த வீதியில் பயணித்த எம்பியூலன்ஸ் ஒன்றில் பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டிருந்தார். சுரேஷ் ராவ் என்ற குறித்த அதிகாரியின் உடல்நிலை தேறியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அனுமதிப்பத்திரம் ஒன்றை பெற்ற பின்னர் சிலாபம், முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் மிருகபலி பூஜை செய்யலாம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கான அனுமதிப்பத்திரத்தை சிலாபம் பிரதேச சபையில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மிருக பலி பூஜையின் மூலம் விலங்குகள் சித்திரவதை சட்டம் மீறப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு தேசிய பிக்குகள் சம்மேளனம் உள்ளிட்ட சில அமைப்புக்கள் வழக்குத் தாக்கல் செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (02.09.2014) அனுஷ்டிக்கப்பட்டது. 














இதன்போது தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களுள் ஒருவரான பேராசிரியர் சி.க..சிற்றம்பலம் அவர்கள் பிரதான நினைவுரையினை ஆற்றினார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் திரு.வீ.ஆனந்தசங்கரி, லண்டனிலிருந்து வருகைதந்திருந்த அரசியல் பிரமுகர் சிறீ கெங்காதரன், வலி வடக்கு; பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் திரு. குமாரவேல், வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி தெற்கு பிரதேச சபை தவிசாளர் திரு. பிரகாஸ், வலி மேற்கு பிரதேச சபைத் தலைவர் திருமதி.நாகரஞ்சனி ஐங்கரன், 



இதனைத் தொடர்ந்து அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக யாழ். கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள அன்னாரது உருவச்சிலைக்கு கல்லூரியின் பீடாதிபதி திரு. அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் மலர்மாலை அணிவிக்கப்பட்டு இரங்கல் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது, கல்லூரியின் பீடாதிபதி திரு.அமிர்தலிங்கம், லயன் வைத்தியக் கலாநிதி தியாகராஜா, திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
ஊவா மாகாண சபை தேர்தலின் பின்னர் நடைபெறவுள்ளதாக கூறப்படும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதிக்கு போட்டியிடுவதற்கு காணப்படும் தடைகள் தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். மக்கள் விடுதலை முன்னணி, மேல் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வடகல இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார். அது தெளிவான சட்ட விவாதமாகும். நாட்டில் பொருட்கோடல் கட்டளை சட்டம் என்ற சட்டம் உள்ளது. இந்த கட்டளை சட்டத்திற்கு அமைவாக கடந்த காலங்களுக்கு செல்லுப்படியாகும் வகையில் சட்டத்தை நெறிப்படுத்த முடியாது 18ஆவது அரசியலமைப்பு என்பது நாட்டின் ஜனநாயகம் மற்றும் சட்டத்தை புறம்தள்ளிய திருத்தமாகும். ஆனால் இந் திருத்தத்தைக் கொண்டுவரும்போது அதில் உள்ளடக்கப்பட வேண்டிய ஒரு விடயத்தை மறந்து விட்டனர். அதாவது கடந்த காலங்களுக்கும் செல்லுப்படடியாகும் அல்லது உள்ளடங்கும் என்ற விடயத்தை உள்ளடக்க மறந்து விட்டனர். ஏனெனில் தற்போதைய ஜனாதிபதி 17ஆவது அரசியலமைப்பின் அடிப்டையிலேயே பதவி பிரமாணம் செய்துகொண்டுள்ளார். அப்போது 18ஆவது அரசியலமைப்பு வரவில்லை. இதனடிப்படையில் அரசியலமைப்பின் 31ஃ2 பிரிவிற்கு அமைவாக 2ஆவது பதவி காலத்தில் மாத்திரமே அவரால் இருக்கமுடியும். ஆகவே தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் மூன்றாவது பதவிக்காலத்திற்காக ஜனாதிபதியால் போட்டியிட முடியாது என்றார் அவர்.
வவுனியாவில் கடந்த சில மாதங்களாக வவுனியா பொடியன் என்ற பெயரில் பேஸ்புக் கணக்கொன்றை இயக்கிவந்த சிறுவன் ஒருவன் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா தோணிக்கல் காந்திவீதியை சேர்ந்த நவரத்தினசாமி கிருஸாந் என்ற 16 வயது சிறுவனொருவனே இவ்வாறு வவுனியா பொடியன் என்ற பெயரில் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் கணக்கொண்றை இயக்கி வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளான். விபுலாநந்தா கல்லூரியில் சாதாரணதரத்தில் கல்வி பயிலும் இம் மாணவன் வவுனியா பொடியன் என்ற பெயரில் வவுனியாவை சேர்ந்த பல அரசியல்வாதிகள். சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள், சமூகத்தில் அறியப்பட்ட பலரையும் அவர்களின் புகைப்படங்களை பிரசுரித்து கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்து வந்திருந்தான். இந்நிலையில் பொதுமக்கள் வவுனியா பொடியன் என்ற கணக்கு தோணிக்கல்லில் இருந்தே இயக்கப்படுவதை அறிந்து சிறுவனின் வீட்ற்கு சென்றுள்ளனர். எனினும் அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடாது என்பதனை கருத்தில் கொண்டு இப்பகுதி கிராம சேவகருக்கு தகவல் வழங்கப்பட்டு கிராம சேவகர் மூலமாக வவுனியா பொலிஸாரிடம் மேற்படி சிறுவன் ஒப்படைக்கப்பட்டிருந்தான். இதனையடுத்து சிறுவனை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.