Header image alt text

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்ட மாணவர்களுக்கு உதவிகள்

vaddu valpar0வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த பெண்தலமைத்துவக் குடும்பங்களின் 130 மாணவர்களுக்கு பாடசாலை புத்தகப்பைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

அதேநேரம் மேலும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த தாய் தந்தையரை இழந்த 92 பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. Read more

மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு முக்கியமானது எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன்

sam magiஇலங்கையில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய அரசியலமைப்புக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு முக்கியமானது என நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு ஏற்படுத்துவது தொடர்பில், அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட யோசனை பற்றிய விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்தபோது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். Read more

ஈழத் தமிழர்களின் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் வேண்டும். – வீரமணி

ramathasஈழத் தமிழர்களான ஆதிக்குடிகளை அன்னியப்படுத்தாமல் அவர்களின் பண்பாடு, அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் தமிழர்களின், இஸ்லாமியர்களின் ஆதரவுடன் மைத்திரிபால சிறிசேன தலைமையில், அரசு அமைந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. Read more

ஜனாதிபதி, பிரதமரின் வருகைக்கு யாழில் எதிர்ப்பு; கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம்

arpdam_jaff_002ஜனாதிபதி மற்றும் பிரதமர் வலி.வடக்கிற்கு தைப்பொங்கல் விழாவிற்கு வருகை தரவுள்ளதை எதிர்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

யாழ். மத்திய பஸ் நிலையத்தின் முன்பாக இன்று காலை 10.00 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. Read more

கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்துகொள்ள பிள்ளையானுக்கு அனுமதி

pillaiyanமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதியாகவுள்ள கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு கிழக்கு மாகாண சபையின் இம்மாத அமர்வில் கலந்துகொள்ள இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. Read more

குவைத்தில் தவித்த 80 பணிப் பெண்கள் இலங்கை திரும்பினர்

Kuvit to sriவெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்று பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் ஆளான பணிப் பெண்கள் சிலர், குவைத் நாட்டில் இருந்து தாயகம் திரும்பியுள்ளனர்.

இன்று காலை 06.50 அளவில் இலங்கைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி 80 பெண்களே இவ்வாறு வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலையீட்டினால், மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை இம் மாத இறுதிக்குள் மேலும் சில பணிப் பெண்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.