Header image alt text

நாடாளுமன்ற அரசியலமைப்பு பேரவையாக மாறியது, அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் விபரம்-

parliamentபுதிய அரசியலமைப்தைத் தயாரிப்பதற்காக, முழு நாடாளுமன்றமும் அரசியலமைப்புப் பேரவையாக, இன்று மாறியுள்ளது. அதன் முதற்படியாக, உப தலைவர்கள் எழுவர் நியமிக்கப்பட்டனர். இரண்டாவதாக, வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டது.

உப தலைவர்கள்
01. திலங்க சுமதிபால
02. செல்வம் அடைக்கலநாதன்
03. கபீர் ஹாசிம்
04. சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே
05. திலக் மாரப்பன
06. மஹிந்த யாப்பா அபேவர்தன
07. நலிந்த ஜயதிஸ்ஸ

வழிநடத்தல் குழு Read more

வடமாகாண அமைச்சர்களை நீக்கி புதியவர்களை நியமிக்குமாறு கையெழுத்து வேட்டை-

npc2_CIவடமாகாண சபை அமைச்சர்கள் அனைவரையும் நீக்கி புதியவர்களை நியமிக்குமாறு கோரிய விண்ணப்பத்தில் இதுவரை 16 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர், அவைத்தலைவர் மற்றும் 4 அமைச்சர்கள் நீங்கலாக மொத்தம் 24 உறுப்பினர்கள் இதில் கையெழுத்திடவிருப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் இணைப் பொருளாளரும், வடமாகாண சபை பிரதி அவைத்தலைவருமான அன்ரனி ஜெகநாதன் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், கடந்த 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி வட மாகாண சபைக்கான தேர்தல் முதன்முறையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தெரிவான உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதோடு, அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். அமைச்சர்களின் பதவிகள் எதிர்வரும் 11ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றன. அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்களேயொழிய மக்களுக்கான சேவை வழங்குவதில் அவர்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளவில்லை என்ற அதிருப்தி காணப்படுகின்றது. Read more

மட்டக்களப்பில் கட்சி அங்கத்தவர்களுடன் த.சித்தார்த்தன் (எம்.பி) கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)
batticaloa 17ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் உட்பட அனைத்து அங்கத்தவர்களுக்குமான கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. எஸ் வியாழேந்திரன் அவர்களின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில்,
சமகால அரசியல் நிலைமைகள், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் என்பன பற்றியும், கிழக்கு மாகாணத்தில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டதோடு, அரசியல் தீர்வு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தினைத் தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் இடம்பெற்றது. 

Read more

CCTV கமராக்கள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்டறிய நடவடிக்கை-

cctv (2)கொழும்பு நகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கண்டறிந்து அது தொடர்பில் அவசர்களின் வீடுகளுக்கு தெரியப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. சீசீரிவி காட்சிகளை பயன்படுத்தி இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வீதிப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதற்காக கொழும்பு நகரில் 128 சீசீரிவி கமராக்களை செயற்படுத்தப்படவுள்ளதாகவும், அதனைத்தவிர சீசீரிவி கமாராக்கல் பொருத்திய மூன்று வாகனங்களையும் பயன்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தவறான முறையில் வாகனங்களை செலுத்துவதுபவர்களுக்கு எதிராக இன்றுமுதல் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீசீரிவி கமராக்கள் செயற்படும் பகுதியில் அதிகளவு பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நாட்டு சட்டத்தின் பிரகாரம் பகிரங்க ஆவணங்கள் மூலம் வாகனத்தை கொள்ளவனவு செய்ய முடியாது. வாகனம் விற்பனை செய்பவரைப் போன்று வாகனத்தை கொள்வனவு செய்பவரும் 14 நாட்களுக்குள் மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என பிரதி பொலிஸ் மாஅதிபர் அமரசிறி சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை உள்ளிட்ட 169 நாடுகளுக்கு வீசா அற்ற பயண வசதி-

indonesiaஇலங்கை உள்ளிட்ட 169 நாடுகளுக்கு வீசா அற்ற பயண வசதியை இந்தோனேஷியா வழங்கியுள்ளது. பயண விசா விலக்கு தொடர்பான ஜனாதிபதி விதிமுறைகளில் மேலும் 79 நாடுகளை இந்தோனோஷியா கடந்த மாதம் ஆரம்பத்தில் உள்ளடக்கியிருந்தது. குறித்த நாடுகளின் கடவுச் சீட்டை வைத்துள்ளவர்கள் வீசா இல்லாமல் தமது நாட்டிற்கு வருகை தரலாம் என இந்தோனேஷிய குடிவரவு அலுவலகம் கூறியுள்ளது. 30 நாட்களுக்கு மாத்திரமே இந்த வீசா விலக்கு செல்லுபடியாகும் எனவும் குடிவரவு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இதன்பிரகாரம் 169 வெளிநாடுகளைச் சேர்ந்த பிரஜைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எல்லை ஊடாக இந்தோனேஷிய நிலப்பரப்பிற்குள் பிரவேசிக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுற்றுலா, குடும்ப பயணம், சமூக பயணம், கலை, கலாசார அரச பணி, செயலமர்வில் உரையாற்றுதல், சர்வதேச கண்காட்சியில் பங்குபற்றுதல், இந்தோனேஷியாவிலுள்ள தலைமை அலுவலக அதிகாரிகளுடனான சந்திப்பிற்கென இந்த வீசா விலக்கை பயன்படுத்த முடியும்.

சம்பூரில் மோட்டார் குண்டுகள் மீட்பு-

wellதிருகோணமலை சம்பூர் முருகன் ஆலயத்திற்கு அருகிலுள்ள கிணறொன்றிலிருந்து 60 மில்லிமீற்றர் வகையைச் சேர்ந்த 44 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிணறு அமைந்துள்ள காணி சுமார் 9 வருடங்களாக கடற்படையினரின் வசமிருந்த நிலையில், கடந்த மாதம் 25ஆம் திகதி காணி உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குறித்த காணியினை உரிமையாளர்கள் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபடும் போது குறித்த மோட்டார் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து பொலிஸார் மற்றும் கடற்படையினர் இந்த ஆயுதங்களை மீட்டுள்ளனர். இதுபற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

அதிக வெப்பத்தால் பூநகரியில் பெண் மரணம்-

dead.bodyகிளிநொச்சி, பூநகரி கறுக்காய்தீவைச் சேர்ந்த பெண்ணொருவர் அதிக வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேயிடத்தைச் சேர்ந்த இராஜேஸ்வரன் செந்தமிழ்செல்வி (வயது 43) என்பவரே அதிக வெப்பம் காரணமாக இவ்வாறு உயிரிழந்துள்ளார். அதிக வெப்பத்தினால் மயக்கமடைந்த நிலையில் பூநகரி வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை அன்று அனுமதிக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வைத்தியதிகாரி என்.சிவரூபன் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டார். உடலில் நீர்த்தன்மை குறைந்தமையால் இந்தப் பெண் உயிரிழந்ததாக வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெருகல் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பணிப்பகிஸ்கரிப்பு-

verukal DSதிருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இன்று முதல் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பிரதேச செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சுமார் 50க்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை உத்தியோகத்தர்கள் கடமைக்காக தனியார் பேருந்தில் இருந்து வரும் போது ஏறாவூர் போக்குவரத்து சபைக்கு சொந்தமான கல்முனை தொடக்கம் திருகோணமலை செல்லும் பஸ் இவர்களது பேருந்தை வழி மறித்துள்ளது. அத்தோடு பஸ் நடத்துனர் மற்றும் சாரதி பிரதேச செயலக ஊழியர்களை தகாத வார்த்தைகளால் ஏசியதுடன், வெருகல் பிரதேச செயலாளருக்கு இரும்பு பொல்லைக் காட்டி அடிப்பதாகவும் மிரட்டியுள்ளனர். இவ்வாறு பிரச்சனை ஏற்படுவதை உத்தியோகத்தர்கள் பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளருடன் கூறியதை அடுத்து இவர்கள் பயணம் செய்தபோது இச்சம்பவம் கடும் மோசமாக நடைபெற்றதாகவும், இதனை இவர்கள் நேரடியாக பார்த்ததாகவும் தெரிவித்தனர். Read more

தமிழ் தேசத்தின் அடிப்படை உரித்துக்களுக்கான அங்கீகாரம் வலியுறுத்தப்பட வேண்டும் – தர்மலிங்கம் சித்தார்த்தன்

sithadthanஇன்றைய இலங்கை அரசியல் போக்கு, இரு பெரும் சிங்களத் தேசியக் கட்சிகளும் இணைந்து ஆட்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு சரித்திர வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்துள்ளது. இந்த அரசாங்கத்தை அமைத்ததில் தமிழ் மக்களும், முஸ்லீம் மக்களுமே முதன்மையான பங்கை ஆற்றியுள்ளார்கள். இலங்கையின் நாடாளுமன்றம் அரசியல் சாசன சபையாக மாற்றப்பட்டு, இந்த நாட்டிற்காக புதிய ஓர் அரசியல் யாப்பு உருவாக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது போலத் தென்படுகின்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் தமிழர் தரப்பிலிருந்து, ஒருமித்த குரலாக, தமிழ் தேசத்தின் அடிப்படை அரசியல் உரித்துக்களுக்கான அங்கீகாரம் கோரப்பட வேண்டும்.

கடந்த கால வரலாற்றில், சூழலுக்கு ஏற்றவிதமாகத் தத்தமது போராட்ட வடிவங்களில் ஒவ்வாரு தமிழ் கட்சியும் எத்தகைய மாறுதல்களைச் செய்திருந்தாலும் – இன்று பிறந்திருக்கின்ற இந்தத் தனித்துவமான அரசியற் சூழலில் – தமிழ் தேசத்தின் அடிப்படையான அரசியல் உரிமைகள் வலியுறுத்தப்பட வேண்டும் என்பதும், அவற்றில் எத்தகைய விட்டுக்கொடுப்பையும் செய்ய முடியாது என்பதுவே தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய எமது கட்சியினது நிலைப்பாடு ஆகும் என்று தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்.
Read more

யாழ் புதிய ஹோட்டல் திறப்புவிழாவில் ஜனாதிபதி பங்கேற்பு-

4344யாழ். நகரப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஹோட்டலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார். அத்துடன் இதன்போது, யாழ். கரைநகர் பகுதியில் உள்ள சுற்றுலா மற்றும் ஹோட்டல் கற்கை நெறியினை பூர்த்திசெய்த மாணவர்கள் ஐவருக்கு ஜனாதிபதி சான்றிதழ்களை வழங்கி வைத்ததுடன், அம் மாணவர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்வில் அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, முஸ்தபா, விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், இலங்கைக்காக இந்திய துணைத் தூதுவர் ஆ.நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். யுத்தத்தின் பின்னர் யாழ். மாவட்டத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சுற்றுலா அமைச்சின் அனுசரணையுடன், ஜேர்மன் நாட்டின் தனியார் நிறுவனம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக (மணிக்கூட்டு வீதி) குறித்த பிரமாண்டமான ஹோட்டலை நிர்மாணித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும். 

விரைவில் நீதியைப் பெற்றுத்தாருங்கள்-ஜனாதிபதியிடம் வித்தியாவின் தாயார்-

dsddsஎனது மகளின் படுகொலை விசாரணையை விரைவுபடுத்தி விரைவில் நீதியை பெற்றுத்தாருங்கள் என வித்தியாவின் தாயார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா நகர்ப்பகுதியில் வித்தியாவின் குடும்பத்தினருக்கு வீடு கையளிக்கும் நிகழ்வு இன்றுபகல் இடம்பெற்றபோதே வித்தியாவின் தாயார் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். யாழ்ப்பாணம் புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் தாயாரை ஜனாதிபதி யாழ்ப்பணத்தில் முன்பு சந்தித்திருந்தபோத தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு கருத்தி வவுனியாவில் வீடொன்றை பெற்றுத்தருமாறு கோரியிருந்தார். இந்நிலையில் வவுனியா காமினி மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் வீடொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தது. இதனை ஜனாதிபதி கையளிக்கும் நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றபோதே வித்தியாவின் தாயார் இக்கோரிக்கையை முன்வைத்ததுடன் மகளின் கொலை தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தி குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கைதான 14 வெளிநாட்டவர்களும் தடுத்துவைப்பு-

5656ஹெரோயின் 110 கிலோகிராமுடன் கைதுசெய்யப்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகள் 14 பேரையும் ஏழு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதியளித்துள்ளது. சந்தேகநபர்களை நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவேளை, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இதன்படி, பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் குறித்து தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, குறித்த வெளிநாட்டுப் பிரஜைகளின் கைது குறித்து இலங்கையிலுள்ள தூதுவராலயங்கள் மூலம் அந்தந்த நாடுகளுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ருவன் குணசேகர கூறியுள்ளார். கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் அண்மையில் இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் வைத்து படகொன்றிலிருந்து 110 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. இதேவேளை, அப் படகில் இருந்த ஈரான் பிரஜைகள் 10பேர், பாகிஸ்தான் பிரஜைகள் இருவர், இந்திய மற்றும் சிங்கப்பூர் பிரஜைகள் இருவர் என 14பேர் இதன்போது, கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

திருக்கோவில் தங்கவேலாயுதபுரத்தில் குண்டுகள் மீட்பு-

motorஅம்பாறை மாவட்டம் திருக்கோவில் – தங்கவேலாயுதபுரம் பிரதேச காட்டுப் பகுதியிலிருந்து மூன்று மோட்டார் குண்டுகள் இன்று மீட்டகப்பட்டுள்ளன.

அம்பாறை விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து பொலிசாருடன் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து அந்த காட்டுப் பகுதியில் சோதனை நடத்தினர். இதன்போது, நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று மோட்டார் குண்டுகளை இன்று காலை 11.00 மணியளவில் மீட்டனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட குண்டுகளை நீதிமன்ற உத்தரவைப் பெற்று பொத்துவில் அறுகம்பை விசேட அதிரடிப் படையினரை வரவழைத்து அவ் இடத்தில் வெடிக்கவைத்து அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இது கடந்த காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தகுதிகாண் வைத்திய நிபுணர்கள் தொழிற்சங்க போராட்டம்-

hospital nnவடக்கு, கிழக்கு மாகாணங்களில் தகுதிகாண் வைத்திய நிபுணர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலதிக கொடுப்பனவிற்கான நேரம் மாதத்திற்கு 80மணித்தியாலங்களாக மட்டுப்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தகுதிகாண் வைத்திய நிபுணர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார். இதன்பிரகாரம் மாலை 4மணிக்கு பின்னர் பணிகளில் ஈடுபடுவதிலிருந்து விலகியிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண சுகாதார திணைக்கள அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் உரிய தீர்வு எட்டப்படவில்லை என சம்மேளனத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் கோரியதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் வடக்கு சுகாதார திணைக்கள பணிப்பாளருடன் நாளைய தினத்தில் பேச்சுவார்த்தையொன்று நடைபெறவுள்ளதாக சம்மேளனத்தின் செயலாளர் தர்மகீர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

மூன்று புதிய மேம்பாலங்களை நிர்மாணிப்பதற்கு தீர்மானம்-

WEEWEEEWEமூன்று புதிய மேம்பாலங்களை நிர்மாணிப்பதற்கு நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் டி.சி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கனேமுல்ல ரயில் கடவை பகுதியிலும் பொல்கஹவல ரயில் கடவைக்கு மேலாகவும், மற்றும் ராஜகிரிய – நாவல பகுதியிலும் மேம்பாலங்களை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நிதியுதவின் கீழ் 53 மில்லியன் யூரோ இந்த நிர்மாணத்திட்டங்களுக்காக செலவிடப்படவுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

குமார் குணரட்னத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்-

kumar gunaratnamமுன்னிலை சோசலிசக்கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரட்னத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதோடு அரசியல் பழிவாங்கள் அடிபடையில் திட்டமிட்டே அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதா முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது.

எவ்வாறாயின் அரசாங்கமானது குமார் குணரட்னத்தின் குடியுரிமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுருத்தியுள்ளது.

முன்னிலை சோசலிச கட்சியினரினால் இன்றைய தினம் கொழும்பில்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அக்கட்சியின் ஏற்பாட்டாளர் புபுது ஜெயகொட மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

புதிய குற்றப் புலனாய்வு மத்திய நிலையம்-

policeகுற்றவியல் புலனாய்வுத் தகவல் பகுப்பாய்வு மத்திய நிலையம் என்ற பெயரில் புதிய பிரிவொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக தெரியவருகிறது. மனித படுகொலை, பாலியல் துஷ்பிரயோகங்கள் போன்ற பாரிய குற்றச்செயல்கள் சம்பந்தமான தகவல்களை, அன்றாடம் பொலிஸ் நிலையங்கள் மட்டத்தில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒன்று திரட்டுவது இப் பிரிவினால் நடைபெறும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். அந்த தகவல்களை பகுப்பாய்வு செய்து, தெரிவு செய்யப்பட்ட குற்றச்செயல்கள் ஏற்படும் வழிவகைகள் மற்றும் குற்றச் செயல்களின் அதிகரிப்பு சம்பந்தமாக, விசாரணைகள் மேற்கொள்ளும் அதிகாரிகளை தெளிவுபடுத்துவது இந்த புதிய பிரிவின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. எதிர்வரும் 4ம் திகதி குற்றவியல் புலனாய்வுத் தகவல் பகுப்பாய்வு மத்திய நிலையம் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அது குற்ற அறிக்கைகள் பிரிவில் ஸ்தாபிக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மக்களின் பாதுகாப்புக்காக பொறுப்புடன் செயற்படுவேன்-பாதுகாப்புச் செயலர்-

karunasenaசாவகச்சேரியில் தற்கொலை அங்கி உட்பட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான தனது அறிக்கைக்கு மிகவும் தவறான அர்த்தம் வழங்கப்பட்டிருப்பதாக பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டியாரச்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். பாதுகாப்பமைச்சின் செயலாளர் என்ற வகையில் நாட்டு மக்களின் பாதுகாப்பு சம்பந்தமாக தான் மிகவும் பொறுப்புடன் செயல்படுவதாக அவர் கூறியுள்ளார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்களுக்கு பாதகமான தவறான செய்தியை வழங்கி தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது. சாவகச்சேரி சம்பவத்தின் மூலம் இந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரின் திறனை குறைத்து மதிப்பிடும் வகையில் நான் செயற்படவில்லை. அதேநேரம் இந்த நிலமையை பயன்படுத்தி சிலர் தமது உள்நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கின்றனர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்களை தவறாக வழி நடத்தாமல் இருப்போமென்று உறுதியளிக்கின்றோம். எவ்வாறாயினும் நாட்டின் பாதுகாப்பு தரப்பினர் மற்றும் அனைத்து புலனாய்வு துறையினரும் மிகவும் சரியாகவும் கவனமாகவும் தமது கடமைகளை நிறைவேற்றுகின்றனர் என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் பெறுமதி 11,000 இலட்சம்-

5656இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் 11 வெளிநாட்டவர்களுடன் கைப்பற்றப்பட்ட 101 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளின் பெறுமதி 11,000 இலட்சம் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக இன்றையதினம் காலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர மேற்சொன்ன விடயத்தைக் கூறியுள்ளார். போதைப் பொருளை கடத்தி வந்த சிறிய படகு ஈரான் நாட்டிற்கு சொந்தமானது என்றும் இந்தக் கடத்தலை செய்திருக்கின்ற பிரதான சூத்திரதாரிகள் நீர்கொழும்பு, துங்கல்பிட்டிய பிரதேசத்தில் தங்கியிருந்த குழுவொன்று என்றும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட 11 வெளிநாட்டு பிரஜைகளும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரின் பொறுப்பில் இருப்பதாகவும் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

வவுனியா காவலரண்கள் பொலிஸ் நிலையங்களாக மாற்றம்-

vavuniyaவவுனியா பொலிஸ் பிரிவிலிருந்த நான்கு காவலரண்கள் நேற்று முதல் பொலிஸ் நிலையங்களாக இயங்க ஆரம்பித்துள்ளன.

அதிகரித்துள்ள மக்கள் சனத்தொகையை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதன்படி உலுக்குளம், பறயநாயன்குளம், பூவரசன்குளம், மாமடு ஆகிய காவலரண்கள் பொலிஸ் நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதுவரையான காலப்பகுதியில் இவை வெறும் காவலரண்களாக மாத்திரம் இயங்கி வந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

நீர்வேலியில் வாள்வெட்டு, 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி-

cut killed (2)யாழ். நீர்வேலி தெற்கில் வீடொன்றுக்குள் புகுந்த இளைஞர் குழுவொன்று மேற்கொண்ட வாள்வெட்டுத் தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குலினால் பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சுமார் 10பேர் கொண்ட இளைஞர் குழு குறித்த பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து வீட்டு உரிமையாளரை பொல் மற்றும் வாள்களால் ஓடஓடத் தாக்கியுள்ளது. இதனைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் உதவிக்குச் சென்றவேளை தந்தையும் 2 மகன்களும் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பா. தயாளன், எஸ். செல்வராசா, செ.ஜெயக்குமார், செ.சிவகுமார் எஸ். பெரியதம்பி, கே. குகா ஆகியோரே வாள்வெட்டுக்கு இலக்காகி கிகிச்சை பெற்று வருகின்றனர். வாள்வெட்டுக்கு இலக்கான பா.தயாளன் என்பவருடைய வீட்டிலேயே இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாக இந்த இளைஞர் குழுவின் அட்டகாசம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கும் விழிப்புக் குழுவில் இவர்கள் செயற்பட்ட காரணத்துக்காவே தாக்கப்பட்டதாகப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

காணாமற்போனதாக சந்தேகிக்கப்படும் நால்வர் மாலைத்தீவில் சிறையில்-

missingயுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமற்போனதாக சந்தேகிக்கப்படும் நால்வர் மாலைத்தீவில் சிறைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதென காணாமற்போனோர் தொடர்பான சாட்சி விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பிட்ட நால்வரின் உறவினர்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்ததாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம குறிப்பிட்டுள்ளார். உறவினர்களின் முறைப்பாட்டின் பிரகாரம் ஆணைக்குழுவினால் தனியான குழுவொன்று நியமிக்கப்பட்டு அதுகுறித்து வடக்கில் விசாரணை முன்னெடுக்கப்பட்டதாகவும், விசாரணைகளின் பின்னர் காணாமற்போன நால்வரும் மாலைத்தீவில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கான சாட்சியங்கள் கிடைத்துள்ளாகவும் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். Read more

PLOTE leader: Bureaucrats put paid to govt. efforts to make expatriate Tamils invest here

By Jehan Haniff

sithadthanThe government had extended an open invitation to all Lankans living in exile to return to their homeland but many of them had not taken the message seriously, MP and leader of the People’s Liberation Organisation of Tamil Eelam (PLOTE), Dharmalingam Siddarthan said yesterday.

He said the expatriate Tamil community did not believe in announcements made by the President and top government politicians locally and internationally because their decisions were not carried out by bureaucrats.

“I’m personally aware of two cases where expatriates wanted to invest here were driven from pillar to post and discouraged from making an investment.

“More than thirty per cent of the youth population in the North and East are unemployed and it is obvious that all of them cannot be provided with government jobs. Hence, the government must remove the bureaucratic red tape and encourage the private sector to invest if they are to genuinely find a solution to the unemployment issue in the North and East.”

Asked whether the government was not taking action to remedy the situation, the Tamil militant turned politician said: “The government is taking some action, but things are moving at a snail’s pace. Our people want things to happen faster. Investments for large, medium and small industries are vital, but who will invest when the bureaucracy remains a stumbling block?

 According to the PLOTE leader the TNA has taken up the issue with the President and concerned politicians on several occasions but in vain.  (The Island 01.04.2016)

வவுனியாவில் நெற்களஞ்சியசாலைகள் பாதுகாப்பு தரப்பினரால் விடுவிப்பு-

stfவவுனியாவில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நீண்ட காலமாகப் பயன்படுத்தி வந்த இரண்டு நெற்களஞ்சியசாலைகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன. 1997ஆம் ஆண்டில் இருந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இந்த இரு நெற்களஞ்சியசாலைகளையும் முகாமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், குறித்த இரு களஞ்சியசாலைகளையும் மீண்டும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்க வேண்டும் என தொடர்ந்து விடுக்கப்பட்டு வந்த கோரிக்கையை அடுத்து இன்று அவை விடுவிக்கப்பட்டன. வவுனியா மாவட்ட செயலாளர் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இன்று அங்கு சென்று களஞ்சியசாலைகளைப் பார்வையிட்டனர். இந்த இரு நெற்களஞ்சியசாலைகளிலும் 3000 மெட்ரிக்தொன் நெல்லைக் களஞ்சியப்படுத்த முடியுமென கூறப்படுகிறது.

மீட்கப்பட்ட தற்கொலை அங்கி உள்ளிட்டவை 10 வருடங்கள் பழைமையானவை-

werererrerயாழ். சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் புலிகளினால் போர்க் காலத்தில் பயன்படுத்தப்பட்டவை என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் உற்பத்தி செய்யப்பட்டவை எனவும், எனினும் இவ் வெடிபொருட்கள் தொடர்பில் பயங்கரவாத ஒழிப்பு பிரிவு விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கைதான முன்னாள் புலி உறுப்பினர் கொழும்பு தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தபட்டு வருவதாகவும், குறிப்பிட்ட நபரின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து பெறப்பட்ட சந்தேகத்துக்கிடமான இலக்கங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் கூறியுள்ளார்.

குடிவரவு, குடியகல்வு திணைக்கள உடமைகளுக்கு சேதம் விளைவிப்பு-

567676முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்னத்தை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, கொழும்பு – புஞ்சிபொரளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது தடியடி மேற்கொண்ட பொலிஸார், அவர்களை அங்கிருந்து கலைத்துவிட்டுள்ளனர். புஞ்சிபொரளையில் அமைந்துள்ள குடிவரவு – குடியகழ்வுத் திணைக்களத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், பின்னர் அத்துமீறி திணைக்களத்தின் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று அங்குள்ள உடமைகளுக்கு சேதம் விளைவித்த நிலையிலேயே, அவர்களை கலைப்பதற்காக பொலிஸார் தடியடி மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தால், அப்பகுதியில் பாரிய வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்தது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவிற்கு விஜயம்-

ranilபிரதமர் ரணில் விக்ரமசிங்க அடுத்தவாரம் சீனாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 06ம் திகதி முதல் 09ம் திகதி வரையில் பிரதமரின் இந்த விஜயம் அமையவுள்ளது. சீன பிரதமர் லீ கெகியாங்கின் அழைப்பின் பேரில் இலங்கை பிரதமரின் இந்த விஜயம் அமையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை மற்றும் பொதுவாக அவதானம் செலுத்த வேண்டிய விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்படவுள்ளதாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறியுள்ளார். இலங்கை அரசாங்கத்துடன் நீண்ட காலமாக காணப்படுகின்ற நட்புறவை மேம்படுத்துவதற்கு இந்த விஜயம் முக்கியமானதாக அமையும் என்று பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிராக மனுத்தாக்கல்-

courts (2)தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் நியமனம் சட்டவிரோதமானது என தெரிவிக்குமாறு கோரிய மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர உள்ளிட்ட குழுவினரால் அந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கம் தேசிய அரசாங்கம் அல்ல என்று உத்தரவிடுமாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். 19வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் படி தேசிய அரசாங்கமாக கருதப்படுவது, பெரும்பான்மை அதிகாரத்தை பெற்றுக்கொண்ட கட்சியுடன் ஏனைய அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து அமைக்கும் அரசாங்கத்தையே. எனினும் தற்போதைய அரசாங்கம் தேசிய அரசாங்கம் அல்ல என்பதுடன் அமைச்சரவை 30 உறுப்பினர்களை கொண்டதாகவே இருக்க வேண்டும் என்று மனுதார் கூறியுள்ளார்.