யாழ். கோப்பாய் எம்.பி.பி.எஸ் லேன், கலம்பரை வீதி ஆகிய இரண்டு வீதிகளின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்றுகாலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக மேற்படி இரண்டு வீதிகளும் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. இன்றைய அடிக்கல் நாட்டும் வைபவத்தில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், செந்தூரன், வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளர் நிரோசன், வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் இ.செல்வராஜா, சி.அகீபன் மற்றும் ஊர்ப் பெரியோர்கள், பயனாளிகள் கலந்துகொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து பிரதேச மக்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்றும் அங்கு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.