கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திநகர் பகுதியில் தாயும் மகனும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. 
குறித்த பகுதியில் வசிக்கும் இருவரே இவ்வாறு வீட்டிலிருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

70 வயது மதிக்கதக்க விஷ்னுகாந்தி வள்ளியம்மை என்ற தாயாரும், அவரது மகனான 34 வயதான விஷ்னுகாந்தி லிங்கேஷ்வரன் என்ற இளைஞருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த நபர்களின் உடலில் காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை கிளிநொச்சி குற்ற தடுப்பு பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்களை நீதவான் பார்வையிட்டதன் பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.