விடைபெறவுள்ள இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் சையிட் மக்சுமுல் ஹக்கீம், கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அவரது பதவிக் காலத்தின் நிறைவை முன்னிட்டு கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை அவர் சந்தித்துள்ளார்.

அவரது பதவிக் காலத்தில் இலங்கை கடற்படைக்கு அளித்த ஒத்துழைப்புக்காக, பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகருக்கு நன்றியைத் தெரிவித்த கடற்படைத் தளபதி, அவரின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகருக்கு நினைவு சின்னங்களும் வழங்கப்பட்டன.