சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் விசாரிக்க புதிய நீதிமன்றம் ஒன்றை அமைக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி கொழும்பில் இன்று தெரிவித்துள்ளார். சில விடயங்களை மறைத்து வைத்திருக்க முடியாது. பூப்போன்ற சிறுவர்களுக்கு அநீதி இழைக்கப்படுமாக இருந்தால் அதற்குரிய தண்டணையை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க நேரிடும். அதற்கான சட்டங்களை இயற்ற முடியும்.

அமைச்சரவை அனுமதியுடன் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் விசாரிக்க புதிய நீதிமன்றம் ஒன்றை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.