வவுனியா கனகராயன்குளம் பகுதியில் காயங்களுடன் முதிவர் ஒருவரின் சடலம் ஒன்று நேற்றுக் (22 காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதி வீட்டொன்றின் அருகாமையில் சடலம் ஒன்று இருப்பதாக கனகராயன்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

குறித்த சடலத்தினை வவுனியா நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்லீமா பௌசானா நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். க.இந்திரகுமார் (வயது-75) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.