Header image alt text

மன்னாரில் வைத்து ஒருவரிடம் 60 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக, இலங்கை போக்குவரத்து சேவையின் வட பிராந்திய முகாமையாளர், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்றுகாலை கைது செய்யப்பட்டுள்ளார். Read more

இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ராவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில் இதன் காரணமாக இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more

கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறிய மேற்கொள்ளப்படும் பி.ஆர்.சி பரிசோதனை நேற்று அதிகளவில் முன்னெக்கப்பட்டுள்ளது. இதன்படி 3518 பி.ஆர்.சி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more

செய்திகள்:

Posted by plotenewseditor on 19 August 2020
Posted in செய்திகள் 

1. முல்லைத்தீவு – மல்லாவியில் கடந்த 14ம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த 19வயது இளைஞரான மல்லாவி பகுதியைச் சேர்ந்த தாணுயன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார். Read more

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். தொழில் நியமனம் வழங்கப்படவுள்ள பட்டதாரிகளின் பெயர் விவரம் அரசாங்கத்தால் நேற்று வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் தமது பெயர்கள் உள்ளடக்கப்படவில்லை என தெரிவித்தே இவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 15 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. Read more

மட்டக்களப்பு திருகோணமலை வீதி மாங்கேணி பிரதேசத்தில் நேற்றுமாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மாங்கேணியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். Read more

யாழ். பண்ணை மீனாட்சிபுரம் பகுதியில் மீட்கப்பட்ட பெண்ணின் எச்சங்கள் தொடர்பான அகழ்வுகள் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில் அகழ்வின் போது, பெண்ணின் கால் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 79 பேர், பூரணமாக குணமடைந்து இன்று தமது வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 305 இலங்கை பிரஜைகள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். Read more