மன்னார் சௌத்பார் உப்பளம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 13ம் திகதி சடலமாக மீட்கப்பட்ட நெடுந்தீவைச் சேர்ந்த டொரிக்கா ஜூயின் என்ற இளம் யுவதியின் கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான தாய் மாமன் நேற்று (24) வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். Read more
யாழ். தென்மராட்சி வரணி வடக்கில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட முதியவரின் மரணத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரை கனகராயன்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அரச நியமனங்கள் நிராகரிக்கப்பட்ட யாழ் மாவட்ட பட்டதாரிகள் வடக்கு மாகாண ஆளுநரிடம் இன்று மகஜர் கையளித்துள்ளனர். அரசாங்கத்தினால் 60 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு நாடு பூராகவும் வழங்கப்படவுள்ள நிலையில் பட்டதாரிகளுக்கான அரச நியமன கடிதங்கள் தற்போது அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
வாள்வெட்டு குழுக்களை இல்லாமல் செய்து பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்குங்கள் என படுகொலை செய்யப்பட்ட மாணவனின் பிரேதத்தை வீதியில் வைத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நாட்டில் நேற்று 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இருவர் மலேஷியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மணலுடன் சென்ற உழவு இயந்திரத்தின் மக்காட்டில் பயணித்த ஒருவர், தவறி வீழ்ந்து சில்லுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளார்.
அம்பாறை திருக்கோவில் பாவட்டாய் பகுதியில் ஆகஸ்ட் 20ம் திகதி அன்று காணி ஒன்றில் புதையுண்டிருந்த ரி-81 மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டு விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் செயலிழக்க செய்யப்பட்டுள்ளது.
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் இருந்த சுமார் 4 இலட்சம் ரூபா பெறுமதியான மின் இணைப்பு பொருட்கள் களவாடப்பட்டுள்ளது.
9ஆவது நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக இருநாள் விசேட செயலமர்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசாநாயக்க தெரிவித்துள்ளார்.