சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க, தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திசாநாயக்க எதிர்வரும் முதலாம் திகதியுடன் ஓய்வுபெறவுள்ளதால், அந்த பதவிக்கு பேராசிரியர் அநுர மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

களனி பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வுப்பிரிவின் சிரேஷ்ட பேராசிரியராக அநுர மனதுங்க கடமையாற்றுகின்றார்