நாளை தொடக்கம் நாட்டில் உள்ள சில மிருகக்காட்சிசாலைகளை தற்காலிகமாக மூடவுள்ளதாக தேசிய விலங்கியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, தெஹிவளை மிருகக்காட்சிசாலை, பின்னவலை யானைகள் சரணாலயம், பின்னவலை மிருகக்காட்சிசாலை மற்றும் ரிதியகம சஃபாரி பூங்காஆகியவை மறு அறிவித்தல் வரை மூடப்படுமென தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஹிசினி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.