சித்திபெற்ற மாணவிகளுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கம் பாராட்டு-

33 34முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கடந்தகால யுத்தத்தின்போது தாய் தந்தையை இழந்த செல்வி ராகவி மற்றும் யுத்தத்தினால் தனது தந்தை காணாமல் போயுள்ள யாழ்ப்பாணம் அரியாலையில் வசிக்கும் செல்வி விதுசா ஆகியோர் தமது கல்வி வயர்ச்சிக்கு உதவுமாறு பெற்றோர் பாதுகாவல்கள் ஊடாக வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் விண்ணப்பித்து இருந்தார்கள். இதில் செல்வி ராகவிக்கு 2013ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து மாதாந்தம் தலா 1000 ரூபா வீதமும் செல்வி அனுசிகாவின் குடும்பத்திற்க்கு 2014ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து மாதாந்தம் 3000 ரூபாவும் வைப்பில் இடப்பட்டு வரும் நிலையில் கடந்த மாதம் நடந்து முடிந்த 5ம் ஆண்டு புலமைப்பரீட்சையில் ராகவி 161 புள்ளிகளும் விதுசா 154 புள்ளிகளும் பெற்று சித்தி அடைந்துள்ளார்கள். சொல்லொணா துயரத்தின் மத்தியிலும் இம் மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் செயற்பட்ட இவர்களுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கம் தனது பாராட்டுகளையும் நன்றிiளையும் தெரிவிப்பதோடு இம் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி புரிகின்றவர்களுக்கும் இவ்வேளையில் நன்றி தெரிவிப்பதோடு எமது சங்கத்தின் ஊடாக தொடர்ந்தும் மாதாந்த கல்வி உதவி புரிந்துவரும் கல்வி கொடையாளர்களுக்கும் மீண்டும் மீண்டும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)