தேர்தல் ஆணையாளர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திப்பு-
அசாதாரண சூழல் காரணமாக வடகிழக்கிலிருந்து வெளியேறி நாட்டின் ஏனைய பாகங்களிலும் தமிழ் நாட்டிலும் வசிக்கும் அகதிகளை பதிவுசெய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிடம் சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு வலியுறுத்தியுள்ளன. நேற்றைய தினம் வடகிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிற்குமிடையில் சந்திப் பொன்று இராஜகிரியவில் உள்ள தேர்தல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போதே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட் டுள்ளது. வடகிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மைக் கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் த.சித்தார்த்தன் எம்.பி.யும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சரும் அக்கட்சியின் பிரதித் தலைவருமான ஹாபீஸ் நஸீர் அஹமட், செயலாளர் ஹசன் அலி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான கே. எம்.டக்ளஸ் தேவானந்தா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் ஆகியோர் குறித்த சந்திப்பில் பங்குபற்றியிருந்தனர். இச் சந்திப்புக் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வடகிழக்கிலிருந்து வெளியேறி நாட்டின் பல பாகங்களிலும் வசிக் கும் மக்களை வாக்காளர் இடாப்பில் ஏதேனும் ஒரு பிரதேசத்தில் உள்வாங்கப்படவேண்டும் என ஏகோபித்த குரலில் வலியுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு நீண்டகாலமாக புத்தளம், சிலாபம் போன்ற பகுதிகளில் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் அனைவரும் சொந்த இடங்களில் குடியேற்றப்பட்டு வாக் காளர் இடாப்பில் இணைத்துக்கொள் ளப்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் கோரினார். Read more