யாழ். சுன்னாகம் முடவேம்படி வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றுமாலை (15.07.2019) 5.00மணியளவில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி செய்யப்படுகின்றது. நேற்றைய அடிக்கல் நாட்டும் வைபவத்தில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் தர்சன், பிரதேச சபை உறுப்பினர் சுரேஸ்குமார், முன்னாள் நகரசபை உறுப்பினர் கிசோர், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் யுகராஜ், சுன்னாகம் கிராம சக்தி அமைப்பின் தலைவர் நவரட்ணம், ஊர்ப் பெரியோர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்துகொண்டிருந்தனர்.