Header image alt text

வட மாகாண வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆளுநர் அங்கீகாரம்-

imagesCAA6XM32வட மாகாண சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்திற்கு வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி அங்கீகாரம் வழங்கியுள்ளார். இந்த அங்கீகாரம் கடந்த சனிக்கிழமை ஆளுநரினால் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 2013ஆம் ஆண்டுக்கான நிதிநியதிச் சட்டத்திற்கும் ஆளுநர் அங்கீகாரம் வழங்கியுள்ளார். வட மாகாண சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டமும் 2013 ஆண்டின் முதலாம் இலக்க நிதிநியதிச் சட்டமும் மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரானால் டிசம்பர் 12ஆம்திகதி மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மாகாண ஆளுநரின் அங்கீகாரத்திற்காக வரவு–செலவுத் திட்டம் மாகாண பிரதம செயலருக்கு மாகாண சபை தவிசாளரால் அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில் வரவு-செலவுத் திட்டத்திற்கான அங்கீகாரம் ஆளுநரால் சனிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

நீர்வேலி ஸ்ரீகணேஷா முன்பள்ளியின் வருடாந்த கலைவிழா-

யாழ். நீர்வேலி ஸ்ரீகணேஷா முன்பள்ளியின் வருடாந்தக் கலைவிழா நேற்றுப் பிற்கல் நடைபெற்றது. ஸ்ரீகணேசஷா முன்பள்ளியின் தலைவர் க.க.முருகையா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர் லஷீகன், ஓய்வுபெற்ற விலைக் கட்டுப்பாட்டு அதிகாரி சிவசீலன், கரவெட்டி பிரதேச செயலக மேலதிக மாவட்ட பதிவாளர் செல்வி செல்வநாயகம் சிவாநதி ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் வரவேற்று, கௌரவிக்கப்பட்டு பாண்ட் வாத்தியத்துடன் அழைத்துவரப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஆலய வழிபாட்டுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதன்போது முன்பள்ளிச் சிறார்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், முன்பள்ளி சிறார்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதா தெய்வேந்திரம்பிள்ளை சாதனை-

கிளிநொச்சி மாவட்டத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் பிரதா தெய்வேந்திரம்பிள்ளை என்ற மாணவி மாவட்ட ரீதியாக முதலிடத்தை பிடித்துள்ளார். 2013ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலைய மாணவி பிரதா வர்த்தகத்துறையில் மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் ஒரு வயதாக இருக்கும்போதே தாயார் இறந்துவிட சிறியதாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் கற்க முடியாத சூழ்நிலையில் இவரது கல்வி இடைநிறுத்தப்பட்டது. இதனால் இவர் அந்த ஆண்டிற்குரிய பத்தாம் தரத்தினை படிக்க முடியாமல் போய்pருந்தது. இருந்தும் மனம் தளராது பல துன்பங்களுக்கு மத்தியில் இலட்சியக் கனவுகளோடு தவற விட்ட ஆண்டினையும் சேர்த்து பதினோராம் தரத்தில் கற்று சாதாரண தரத்தில் சித்தியெய்திய இவர் மேலும் தனது விடாமுயற்சியினால் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் பெற்ற பெறுபேறுகள் புள்ளி விபரவியல் யு, கணக்கீடு -யு, பொருளியல் -டீ ஆகும்.

தொண்டர் ஊழியர்கள் 12ஆவது நாளாக பணி பகிஷ்கரிப்பு-

எந்தவித தீர்வுகளும் எட்டப்படாத நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் தொண்டர் ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு 12ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது. தமது பிரச்சினைக்கு மூன்று நாட்களுக்குள் உரிய பதிலளிப்பதாக ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டதாக யாழ். போதனா வைத்தியசாலை தொண்டர் ஊழியர் சங்கத் தலைவர் எஸ். ஈழவளவன தெரிவித்துள்ளார். இதற்கமைய அதிகாரிகளிடமிருந்து பதில் கிடைக்கும் வரை தொடர்ச்சியாக பணி பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும், தங்களின் பணிகளில் புதியவர்களை ஈடுபடுத்தக்கூடாது மற்றும் நிரந்தர நியமனத்திற்கான எழுத்துமூல உறுதிமொழி வழங்கப்பட வேண்டும் என மூன்று கோரிக்கைகள் தொண்டர் ஊழியர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.

மாங்குளத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது-

முல்லைத்தீவு மாங்குளம் பாளப்பானி பகுதியில் அனுமதி பத்திரமின்றி வெடிப்பொருட்களை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபரிடமிருந்து வெடிபொருள் தயாரிக்கத் தேவையான வெடிமருந்து உள்ளிட்ட சில பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபரை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாங்குளம் பொலிஸார் இதுபற்றிய விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சிறைச்சாலையில் அதி நவீன தொழிநுட்பம் –

சிறைச்சாலைகளின் நடைமுறையில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைளை மேலும் வலுப்படுத்த சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, வெலிக்கடை சிறைச்சாலையில் முதலில் அதிநவீன தொழிலுட்ப உபகரணங்கள் பொறுத்தப்படவுள்ளன. இந்த நடவடிக்கை இந்த வாரத்தில் இடம்பெறும் என சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சிறைச்சாலையினுள் இடம்பெறும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலைக்குள்ளும் அதி நவீன தொழிநுட்பங்கள் பொருத்தப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டில் 32 சிறைச்சாலைகள் காணப்படுகின்ற போதிலும் வெலிக்கடை சிறைச்சாலையிலேயே முதற்கட்டமாக இந்த அதி நவீன தொழிநுட்பங்கள் பொருத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதி-

சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வந்த தமிழகம் – நாகபட்டினம் பகுதியைச் சேர்ந்த 23 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்;டுள்ளனர். இவர்கள் அனைவரும் பெண்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் நாகப்பட்டணம் அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் 200க்கும் அதிகமான மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி, தமிழகம் – நாகபட்டினம் பகுதியைச் சேர்ந்த கடந்த மூன்று தினங்களாக போராட்டம் மோற்கொண்டு வருகின்றனர்.

உரும்பிராயில் சிசுவின் சடலம் மீட்பு-

யாழ். உரும்பிராய் பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில், சிசுவொன்றின் சடலம் நேற்றுமாலை மீட்கப்பட்டுள்ளது. உரைப்பையில் இடப்பட்டு கட்டப்பட்டவாறு இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் அங்குள்ள பற்றையொன்றினுள் குழி தோண்டிக்கொண்டிருப்பதை ஒருவர் அவதானித்துள்ளார். இது தொடர்பில் சந்தேகமடைந்த அந் நபர், அயலவர்களின் உதவியுடன் குறித்த பற்றைக்குச் சென்று பார்வையிட்டுள்ளார். இதன்போது குறித்த பற்றையினுள் குழி தோண்டப்பட்டு உரைப்பையினுள் கட்டப்பட்ட பொதியொன்று போடப்பட்டிருந்ததை கண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கிராம அலுவலகர் மூலமாக கோப்பாய் பொலிஸாருக்கு அயலவர்கள் தகவல் வழங்கினர். இந்நிலையில், குறித்த இடத்திற்கு வந்த பொலிஸார் குழியில் கிடந்த உரைப்பை பொதியை அவிழ்த்துப் பார்த்தபோது அதனுள் சிசுவின் சடலமொன்று இருப்பதைக் கண்டுள்ளனர். கோப்பாய் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கு ஜனாதிபதி விஜயம்-

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பலஸ்தீன் மற்;றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு ஜனவரி 6ஆம் திகதி ஜனாதிபதி புறப்படவுள்ளார். இந்த விஜயத்தின்போது இரு நாட்டு அரச தலைவர்களை ஜனாதிபதி மஹிந்த சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இதன்போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் 510 ஏக்கர் காணி அபகரிக்கப்பட்டு விற்பனை-

மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள மூன்று கிராமங்களை உள்ளடக்கிய, 510 ஏக்கர் காணி தனிநபர் ஒருவரால் அபகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த காணி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் அந்தோனி சகாயம் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் வடமாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மன்னார் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட ஓலைத்தொடுவாய் கிராம சேவகர் பிரிவின், உவரி, தாழங்காடு, கருப்பன் குடியிருப்பு ஆகிய மூன்று கிராமங்களையும் உள்ளடக்கி, புதுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த தனிநபர் ஒருவர், 510 ஏக்கர் காணியை அபகரித்து, போலி ஆவணங்களை தயாரித்து கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். Read more

பாரதிபுரம் வடக்கு பாடசாலைப் பிள்ளைகளுக்கு உதவி-

unnamed 3 unnamed 5 unnamed 6 unnamed3 unnamed4கிளிநொச்சி பாரதிபுரம் வடக்கில் பாடசாலைப் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்றுமுற்பகல் 10மணியளவில் இடம்பெற்றுள்ளது. பாரதிபுரம் வடக்கில் அமைந்துள்ள கணனி மையத்தில் பாரதிபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது பிரதேச பாடசாலைகளில் பயிலும் 120 பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. லண்டனில் வசிக்கும் புளொட் அமைப்பைச் சேர்ந்த திரு. தர்மலிங்கம் நாகராஜா அவர்களினால் இதற்கான நிதி நன்கொடையாக வழங்கப்பட்டதுடன், நாகராஜா அவர்களின் தாயாரும் இந்நிகழ்வில் பங்கேற்று பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார். இந்;நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) கிளிநொச்சி கிளையின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனாதிபதியின் அழைப்புக்கு கூட்டமைப்பு பதில்-

tna13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் வரையறைக்குள் மட்டும் குறுகிநிற்காமல், அதனையும் தாண்டிய அரசியல் தீர்வுத் திட்டம் பற்றி ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டால் அதில் பங்கெடுப்பது பற்றி நிச்சயமாக பரிசீலிக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா..சம்பந்தன் தெரிவித்துள்ளார். 13ஆம் திருத்தத்துக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த சகல ஜனாதிபதிகள் தலைமையிலான அரசகளும் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் அமைத்திருந்த தெரிவுக்குழுக்களும் நிபுணர் குழுக்களும் 13ஆம் திருத்தத்துக்கும் அப்பால்சென்று முன்னேறிய அரசியல் தீர்வுத் திட்டத்தையே பரிந்துரை செய்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டீயள்ளார். நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட நிறைவுரையை கடந்த வெள்ளிக்கிழமை ஆற்றிய ஜனாதிபத ‘வெளிநாட்டிடம் தீர்வு தேடாமல் உள்நாட்டிலேயே தீர்வொன்றை’ எட்ட முன்வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்புக்கு பதிலளிக்கும் வகையிலேயே இரா. சம்பந்தன் மேற்கண்ட தெளிவுபடுத்தலை வழங்கியுள்ளார். ஜனாதிபதியின் அழைப்பை கவனமாக பரிசீலிப்போம். உள்ளுரிலேயே பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமாகவும் விசுவாசமாகவும் நாங்கள் செயற்பட்டு வந்திருக்கிறோம். அரசாங்கத்துக்கும் எமக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடந்தும் அதன்போது நாம் முன்வைத்திருந்த தீர்வு யோசனைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து உறுதியளிக்கப்பட்டவாறு இன்னும் பதில் கிடைக்கவில்லை. பின்னர் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின்போது எட்டப்பட்ட உடன்பாடுகளும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் 13ஆம் திருத்தத்தை முற்றாக இல்லாது செய்வதற்கான அல்லது அதிகாரங்களைக் குறைப்பதற்கான தெரிவுக்குழுவில் இடம்பெற முடியாது என இரா. சம்பந்தன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 இந்து ஆலயங்களில் கொள்ளை-

unnamed7மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள இரண்டு இந்து ஆலயங்கள் இன்று அதிகாலை உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. 300 வருடங்கள் பழைமை வாய்ந்த ஆரையம்பதி எள்ளிச்சேனை பிள்ளையார் ஆலயம் மற்றும் 100 வருடங்கள் பழைமை வாய்ந்த சிறீ பேச்சியம்மன் ஆலயம் ஆகியனவே உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன. இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஆலய பரிபாலன சபையினரால் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாகிஸ்தானுடன் இணைந்து செயற்பட இணக்கம்-

sri pakiவலயம் மற்றும் பூகோள நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து பாகிஸ்தான் மற்றும் இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் தேசிய சபையின் சபாநாயகர் சர்தார் அயேஸ் சதீக் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தபோதே, இது தொடர்பில் பரிமாறிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தானுடனான ஆழமான நட்பை மேலும் வலுப்படுத்தவுள்ளதாக கூறிய ஜனாதிபதி, இலங்கையில் பயங்கரவாதத்தை தோற்கடிக்க பாகிஸ்தான் உதவியமை குறித்தும் குறிப்பிட்டுள்ளார். இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு பாகிஸ்தான் சபாநாயகர் கடந்த வியாழக்கிழமை இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

அத்துமீறும் தமிழக மீனவர்கள் குறித்து ஆலோசனை-

unnamed10இலங்கைக் கடறபரப்பில் அத்துமீறி நுழைகின்ற தமிழக மீனவர்களுக்கு எதிராக மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது. பிரதி மீன்பிடித்துறை அமைச்சர் சரத் குமார குணரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்பரப்பில் நாளாந்தம் 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவதால், இலங்கையின் கடல் வளம் சூரையாடப்படுகிறது. ஆனால் அந்த படகுகளில் சிலவற்றை மாத்திரமே கடற்படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிகிறது. இந்நிலையில் இலங்கையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுகின்ற மீனவர்கள் அனைவரையும் ஒருசேர கைதுசெய்ய பாரிய முன்னெடுப்பு ஒன்று மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவே இது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளோம் என பிரதி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

தேர்தல் பணிகள் ஆரம்பம்

unnamed8அடுத்த வருடம் தேர்தல்கள் பணிகளில் ஈடுபடவுள்ள அரச பணியாளர்களை கணக்கெடுக்கும் பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்கள பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தல்களின்போது, பணியில் ஈடுபடவுள்ள அதிகாரிகள் தொடர்பில் கணக்கெடுக்கும் பணிகளை தற்போது தேர்தல்கள் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. எனினும் தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டதன் பின்னரே, இது குறித்த தகவல்கள் அரச நிறுவனங்களுக்கு வெளியிடப்படும் எனவும், எவ்வாறாயினும், தேர்தல் ஒன்றுக்கான பூர்வாங்க பணிகளையும் தேர்தல்கள் திணைக்களம் ஆரம்பித்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் கடற்படையினர் இருவர்மீது கொழும்பில் கல்வீச்சு-

unnamed9ஈரான் கடற்படையினர் இருவர்மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் கல்வீச்சு தாக்குதலை நடத்தினார் என்ற சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கொழும்பு துறைமுகத்தின் நான்காவது படலைக்கு முன்பாகவுள்ள மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகாமையில் நேற்று இடம்பெற்றுள்ளது. இதேவேளை, ஈரானின் இரண்டு நீர்மூழ்கி கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நங்கூரமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மல்லாகம் விபத்தில் இருவர் படுகாயம்-

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் படைவீரர் ஒருவரும் மற்றுமொருவரும் படுகாயமடைந்த நிலையில், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு மோட்டார் சைக்கிளொன்றும் சைக்கிளொன்றும் மோதியே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. யாழ். சிறைச்சாலை உத்தியோகத்தரான சி.சர்வானந்தன் (வயது 34), படைவீரரான ஜி.ஜி.எம்.கங்கொடகெதர (வயது 21) ஆகியோரே படுகாயமடைந்தவர்களாவர். மல்லாகம் கே.கே.எஸ்.வீதியிலுள்ள மதுவரித் திணைக்களத்திற்கு முன்பாக ரோந்து சென்றுகொண்டிருந்த படைவீரரின் சைக்கிளுடன் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டதாகவும், இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெல்லிப்பழை பொலீசார் தெரிவித்துள்ளனர்.

திருக்கேதிஸ்வரப் பகுதியில் மனித எச்சங்கள் தேடும் பணி ஆரம்பம்-

unnamed7unnamed4மன்னார், திருக்கேதிஸ்வரம் பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்து குறித்த பகுதியில் இன்றுகாலை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் முன்னிலையில் தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாந்தை சந்தியில் இருந்து திருக்கேதிஸ்வரத்திற்கு செல்லும் பாதையில் இருந்து சுமார் 75 மீற்றர் தொலைவில் நேற்றுமாலை 3 மணியளவில் குடிநீர் இணைப்பை வழங்குவதற்காக பணியாளர்கள் வீதிக்கரையில் பள்ளம் தோண்டியபோது குறித்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்றுமாலை குழி கிண்டப்பட்டபோது மூன்று மனித மண்டையோடுகளும், ஏனைய பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன. உடனடியாக அருகில் உள்ள இராணுவத்திற்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இராணுவம் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின் மன்னார் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்தை உற்பட பொலிஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்றனர். இந்நிலையில் மன்னார் பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். Read more

காணாமல்போனோர் தொடர்பில் 11,000 முறைப்பாடுகள்-

unnamed 4காணாமல்போனோர் தொடர்பான சுமார் 11,000 முறைபாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக காணாமல்போனோர் தொடர்பான முறைபாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றுள் சுமார் ஆறாயிரம் முறைபாடுகள் பொதுமக்களிடம் இருந்தும், மேலும் 5000 முறைபாடுகள் முப்படையினர் மற்றும் பாதுகாப்புத் தரப்பு உத்தியோகத்தர்களிடம் இருந்தும் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எச்.டபிள்யூ. குணசேன குறிப்பிட்டுள்ளார். 1990ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல்போனோர் தொடர்பிலான விசாரணைகள் இந்த ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படுகின்றது. குறிப்பிட்ட இரண்டு மாகாணங்களிலும் காணாமல்போனோர் தொடர்பான தகவல்களை நாட்டின் எந்தவொரு பகுதியில் உள்ளவரும் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவிற்கு முறைபாடுகளை தெரிவிப்பதற்காக இம்மாதம் 31 ஆம் திகதிவரை பொது மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. Read more

இராணுவப் பயிற்சி நிறைவு செய்த 45 தமிழ் பெண்கள்-

unnamed1unnamed2unnamed3இராணுவத்தில் பயிற்சிகளை முடித்துக்கொண்டு 45 தமிழ் பெண்கள் உட்பட 55 பெண்கள் வெளியேறியுள்ளதாக பாதுகாப்பமைச்சு தெரிவித்துள்ளது. பயிற்சிகளை முடித்து வெளியேறிய தமிழ் பெண்களின் அணிவகுப்பு மரியாதை கடந்த 18ஆம் திகதி அனுராதபுரத்தில் அமைந்துள்ள இராணுவ சமிக்ஞை படைப்பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் வன்னி பிராந்திய இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் போனிபஸ் பெரேரா பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். மதவாச்சியில் உள்ள இராணுவ தொண்டர் படையணிக்கு 45 தமிழ் பெண்களும் 10 சிங்கள பெண்களும் இணைத்து கொள்ளப்பட்டதுடன் அவர்களுக்கு மூன்று மாத பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

திருமலை சென்றுள்ள இந்திய கப்பல்களை அழைக்கவும்: ஜெயலலிதா-

indஇலங்கையுடன் இந்திய கடற்படை கூட்டு பயிற்சியில் ஈடுபடுவதற்கு சென்றுள்ள இந்திய கப்பல்கள் இரண்டையும் திரும்ப அழைக்குமாறு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா கோரியுள்ளார். இலங்கையுடன் இந்திய கடற்படை கூட்டு பயிற்சியில் ஈடுபடுவதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் நடக்கும் பயிற்சியில் இந்தியா பங்கேற்பதற்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையுடன் இராணுவ ஒத்துழைப்பு கூடாது என்று வலியுறுத்தி பலமுறை கடிதம் எழுதியுள்ளேன். இலங்கையுடன் இந்திய கடற்படை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது தமிழக மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் உள்ளது. இலங்கையுடனான கடல்சார் ஒத்துழைப்பு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கவே உதவும். எனவே, உடனடியாக இலங்கைக்கு கூட்டு பயிற்சியில் ஈடுபட சென்றுள்ள 2 இந்திய கப்பற்படை கப்பல்களை உடனடியாக திரும்ப அழைக்க வேண்டும், இலங்கையுடன் எந்த கூட்டு பயிற்சியும் மேற்கொள்ளக் கூடாது என்று பாதுகாப்பு துறைக்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தில் ஈரானிய போர்க்கப்பல்கள் தரிப்பு-

iranஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் வளர்ந்துள்ள நெருங்கிய உறவை வெளிப்படுத்தும் வகையில், நீர்மூழ்கி உள்ளிட்ட ஈரானியப் போர்க்கப்பல்களின் அணியொன்று நேற்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது. போர்க்கப்பலான ஐஆர்என்எஸ் பன்டர் அப்பாஸ், பயிற்சிக் கப்பலான ஐஆர்என்எஸ் அல்போர்ஸ், கனரக தரிக் வகை நீர்மூழ்கியான யூனெஸ் ஆகியவற்றைக் கொண்ட ஈரானியக் கடற்படை அணியே மும்பைத் துறைமுகத்தில் இருந்து கொழும்பு வந்துள்ளன. இவை எதிர்வரும் திங்கட்கிழமை வரை கொழும்பில் தரித்து நின்று விட்டு ஓமான் நோக்கிப் புறப்படவுள்ளன. இந்த ஈரானியக் கடற்படை அணியின் தளபதியான கப்டன் பப்ரக் பெலூச், நேற்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகேயை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடவுச்சீட்டு தொடர்பான தகவல்களுக்கு 1962 ஐ அழைக்குமாறு அறிவுறுத்தல்-

passகடவுச்சீட்டுகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் பொதுமக்களுக்கென 1962 என்ற விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி பொதுமக்களுக்கு புதிய கடவுச்சீட்டுக்களை எவ்வாறு பெறுவது, காலாவதியான கடவுச்சீட்டை எவ்வாறு புதுப்பிப்பது, கடவுச்சீட்டுகள் காணாமல் போனால் என்ன செய்வது என்பன உள்ளிட்ட கடவுச்சீட்டுகள் தொடர்பான சகல சந்தேகங்களையும் இந்த தொலைபேசி இலக்கத்தினூடாகப் பெற்றுக்கொள்ள முடியும். நாட்டின் எப்பகுதியிலிருந்தும் தமிழ், சிங்களம் அல்லது ஆங்கில மொழிகளில் இந்த இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும். இதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விசேட பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். தொண்டர்களின் தொடர் போராட்டம்-

unnamed5நிரந்தர நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி யாழ். போதனா வைத்தியசாலையின் தொண்டர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டம் பத்தாவது நாளாக இன்றும் தொடர்கிறது. நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும். தங்களின் பணிகளில் புதியவர்களை ஈடுபடுத்தக்கூடாது. நிரந்தர நியமனத்திற்கான எழுத்துமூல உறுதிமொழி வழங்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தொண்டர் ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது. இதனால் வைத்தியசாலையின் நோயாளர்களுக்கான சேவைகள் கடந்த இரண்டு வார காலமாக ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்களை தற்காலியகமாக பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக தொண்டர்கள் கூறியுள்ளனர்.

தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க துணை நிற்போம்: பாஜக-

bjpஇலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க பாரதீய ஜனத்தா கட்சி துணைநிற்கும் என அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர் பிரச்னைகள் குறித்தும், இலங்கைத் தமிழர் பிரச்னைகள் குறித்தும் நாங்கள் நன்கு அறிவோம். இவை முக்கிய பிரச்சினையாக எடுத்துக் கொள்ளப்படும். குறிப்பாக, இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் எங்கள் கட்சி எப்போதும் துணைநிற்கும். அதே நேரத்தில் இலங்கையை நட்பு நாடாகவும் ஏற்றுக்கொள்வோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருக்கேதீஸ்வரத்தில் மனித எச்சங்கள் மீட்பு-

unnamed7 unnamed8மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் இன்று மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் திருக்கேதிஸ்வரம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மாந்தை சந்தியில் இருந்து திருக்கேதீஸ்வரத்திற்கு செல்லும் பாதையில் இருந்து சுமார் 75 மீற்றர் தொலைவில் குறித்த மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  Read more

வடக்கு முதல்வருக்கும் உள்ளுராட்சி மன்ற தலைவர்களுக்குமிடையில் சந்திப்பு-

unnamed unnamed1                              வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று நடைபெற்றுள்ளது. இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ். பொது நூலகத்தில் அமைந்துள்ள வட மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இன்றுகாலை 10 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது உள்ளுராட்சி மன்றங்களினால் முன்னெடுக்கப்பட வேண்டிய பிரதேச மட்ட அபிவிருத்தி மற்றும் நிர்வாக ஒழுங்குமுறைகள், உள்ளுராட்சி மன்றங்களிற்கான சட்ட அமுலாக்கல் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன. இந்த கலந்துரையாடலில் இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளன உறுப்பினர்கள், வட மாகாண உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் என பலரும் பங்கேற்றிருந்துள்ளனர்.

காணாமல் போனார் பற்றிய விசாரணைகளை மேற்கொள்ள விசேடஆணைக்குழு-

unnamed 4யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடாத்த விசேட ஆணைக்குழுவை அமைக்க அரசு தீர்மானித்துள்ளது. அதன்படி யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 11ஆயிரம் பேர் தொடர்பில் இந்த விசேட ஆணைக்குழு விசாரணை நடத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஓய்வு பெற்ற நீதவான் பராக்கிரம பரனகம இந்த ஆணைக்குழுவிற்கு தலைமை தாங்குகின்றார். நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின்போது 11ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள் காணாமல்போதல் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமராகும் ஆசை எனக்கில்லை-அமைச்சர் தினேஷ் குணவர்த்தன-

unnamed2மாகாண சபை முறைமையானது நாட்டின் கல்வித்துறையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதென அரசாங்கத்தின் பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். ஐ.தே.கட்சியின் அறிமுகம் செய்யப்பட்ட மாகாண சபை முறைமை நாட்டின் நிர்வாகத்தை பெரியளவில் குழப்பிவிட்டது. கல்வியமைச்சின் மேற்பார்வையில் 400 பாடசாலைகள் மட்டுமே இன்றுள்ளன. ஆனால் 9000 பாடசாலைகள் மாகாணசபைகள் வசமுள்ளன. நாம் நெருக்கடி வலையில் அகப்பட்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது குறிக்கிட்ட அத்துகோறளை எம்.பி, அமைச்சர் தினேஷ் குணவர்த்தன பிரதமராகும் ஆசையை கொண்டிருப்பதாக கூறினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன தனக்கு அவ்வாறான ஆசை இல்லையென பதிலளித்துள்ளார்.

யாழ். வைத்தியசாலை தொண்டர்களின் போராட்டம்-

unnamed5unnamed4நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி யாழ். போதனா வைத்தியசாலையின் தொண்டர் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிபுறக்கணிப்பு போராட்டம் ஒன்பதாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. யாழ். தொண்டர் ஊழியர்களின் தொடர்ச்சியான பணிபுறக்கணிப்பு போராட்டம் காரணமாக வைத்தியசாலையின் நோயாளர்களுக்கான சேவைகள் கடந்த ஒருவார காலமாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. தொண்டர் ஊழியர்கள் அனைவரும் சேவையில் நிரந்தர நியமனம் வழங்கும் வரை தங்களின் பணிபுறக்கணிப்பு போராட்டம் தொடரும் என சங்கத்தின் தலைவர் எஸ். ஈழவளவன் தெரிவித்துள்ளார். பணிப்பறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடும் சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் பணியாளர்கள் தமது சின்னத்தை அணிந்து போராட்டத்தில் ஈடுபடவேண்டாமென சென். ஜோன்ஸ் அம்புலன்ஸ் படையினர் வலியுறுத்தியதாகவும் அதற்கு தாம் மறுப்பு தெரிவித்தாகவும் தொண்டர்கள் கூறியுள்ளனர்.

மீனவர் பிரச்சினை தீர்க்க அமைச்சர் ராஜித இந்தியாவிற்கு விஜயம்-

unnamed6இந்திய – இலங்கை மீனவர்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுகாண விரைவில் இந்தியா செல்ல தீர்மானித்துள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதுவரை 213 இலங்கை மீனவர்கள் மற்றும் 40 மீன்பிடிப் படகுகளையும் இந்திய பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவர்களை விடுவிப்பது மற்றும் இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில், இந்திய மத்திய அரசின் மீன்பிடித்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த விரைவில் அங்கு செல்ல தீர்மானித்துள்ளேன் என அமைச்சர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்வி அமைச்சு கட்டடத்தில் தீ-

கொழும்பு, பத்தரமுல்லயில் அமைந்துள்ள கல்வி அமைச்சு கட்டடத்தில் இன்று காலை தீ பரவியுள்ளது. கல்வி அமைச்சு கட்டடத்தின் நான்காம் மாடியிலுள்ள ஓய்வூதிய பிரிவிலேயே தீ பரவியதாக கல்வி அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க தெரிவித்துள்ளார். குளிரூட்டி இயந்திரமொன்றில் ஏற்பட்ட மின்கசிவே தீ பரவியமைக்கு காரணமாக அமைந்துள்ளமை கண்டறியப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு மற்றும் கோட்டை சிறீ ஜெயவர்தனபுர கோட்டே மாநகர சபையின் தியணைப்பு சேவைப் பகுதியினர் தியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை இறுதி யுத்தம் – உறுப்பு நாடுகளும் பொறுப்புக்களிலிருந்து தவறின-

unoஇலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது ஐக்கிய நாடுகள் மாத்திரமன்றி, ஐக்கிய நாடுகளின் அங்கம் வகிக்கின்ற உறுப்பு நாடுகளும் தமது பொறுப்புகளில் இருந்து தவறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பிரதி பொதுச் செயலாளர் ஜேன் எலிசன் இதனைத் தெரிவித்துள்ளார். நிவ்யோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் நாளாந்த செய்தியாளர் சந்திப்பின்போது, அவரிடம் இறுதி யுத்தகாலத்தில் ஐ.நா சபை கிளிநொச்சி உள்ளிட்ட வடமாகாணத்தின் பல பகுதிகளில் இருந்து இடைவிலகி இருந்தமை தொடர்பில் இன்னர்சிட்டி பிரஸின் செய்தியாளர் ஒருவரால் கேள்வியெழுப்பப்பட்டது. Read more

வட மாகாணசபை கன்னி அமர்வில் புளொட் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா நகரசபையின் முன்னைநாள் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் உரை-

imagesCAF63JNJ

கௌரவ உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்:-

அனைவருக்கும் வணக்கம்,

என்னை ஈன்றெடுத்த என் தாய், தந்தையர்க்கும், என்னைத் தேர்ந்தெடுத்த எனது மாவட்ட மக்களுக்கும் சமர்ப்பணம். கௌரவ அவைத் தலைவர் அவர்களே, கௌரவ முதலமைச்சர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே, சக கௌரவ உறுப்பினர்களே, இங்கு வீற்றிருக்கின்ற மாகாணசபை அதிகாரிகளே, பார்வையாளர்களே, ஊடகவியலாளர்களே அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். Read more