Header image alt text

ரஜினிகாந் மேனகாகாந்தி ஆகியோருக்கு நன்றிக் கடிதம் – ஜெயலலிதா

Tamil_News_476707100869நடிகர் ரஜினிகாந்துக்கு ஜெயலலிதா அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-  நேற்று தாங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுக்கு என் மீதான கனிவு மற்றும் அன்பான வார்த்தைகளுக்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தங்களுக்கு நீண்ட ஆயுளுடன் நல்ல உடல் நலத்துடன் வாழவும், அனைத்து நடவடிக்கைகளிலும் வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். எனது வாழ்த்துக்களை உங்களது குடும்பத்தினர் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

மத்திய மந்திரி மேனகா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தங்களது கடிதம் எனது மனதை ஆழமாக தொட்டு நெகிழ வைத்து விட்டது. பணிச்சுமை அதிகரித்த நிலையிலும் என்னை நினைத்து கடிதம் எழுதியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் இறைவன் நன்மை புரியவும் வாழ்த்துகிறேன். இவ்வாறு அந்தக் கடிதங்களில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். மத்திய மந்திரி மேனகாகாந்தியும், ஜெயலலிதாவுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதில், ”தங்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதுடன் தனது ஆதரவு, அனுதாபம் ஆகியவை எப்போதும் தங்களுக்கு உண்டு. இந்த தருணத்தில் மகிழ்ச்சியுடன் உங்களுக்காக எது வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன். மீண்டும் உங்கள் தலைமையில் ஆட்சி நிர்வாகம் அமைவதை பார்க்க முடியும் என்பதை உறுதியாக கூறுகிறேன்” என்றார்.

ரஜினிகாந்த் வாழ்த்து சொன்னதில் எந்த தவறும் இல்லை – முரளிதரராவ்

BJP_SECVPFரஜினிகாந்த், ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறியது சகஜமானதுதான். இதில் எந்த அரசியல் முக்கியத்துவம் இல்லை, தவறும் இல்லை. ரஜினிகாந்த் சிறந்த மனிதர். மக்கள் செல்வாக்கு படைத்தவர். அவரை போன்ற பிரபலங்கள், நல்லவர்கள் பாரதீய ஜனதாவுக்கு வருவதை வரவேற்போம். தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் மத்திய மந்திரி மேனகாகாந்தி தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் கருத்து தெரிவித்து உள்ளார். அது பாரதீய ஜனதாவின் கருத்து அல்ல. மத்திய அரசை பொறுத்த வரை தூய்மையான நல்ல நிர்வாகத்தை கொடுப்பதில் உறுதியாக இருக்கிறது. சுப்பிரமணியசாமி பல விஷயங்கள் தொடர்பாக கருத்துக்களை வெளியிடுகிறார். அது அவரது சொந்த கருத்து தான். தமிழக பாரதீய ஜனதாவை பற்றி அவர் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது. அதே நேரத்தில் கட்சியின் தமிழக தலைமை என்ன சொல்கிறதோ? அதை தான் கட்சி மேலிடம் கவனத்தில் கொள்ளும். தமிழகத்தில் கட்சியை அடி மட்டத்தில் இருந்து பலப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளோம். இதற்கான பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கும். மராட்டியம், அரியானாவில் முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றி உள்ளோம். இது மக்களுக்கு மோடி மீதான நம்பிக்கையை காட்டுகிறது. அதே போல் வருங்காலத்தில் தமிழகத்திலும் பா.ஜனதா பலம் வாய்ந்த கட்சியாக மாறும். அதற்கான பணிகளை செய்வோம். தமிழக சட்டமன்றத்தில் பாரதீய ஜனதாவுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. ஆனால் தமிழரான தமிழ்ச்செல்வன் மராட்டிய சட்ட மன்றத்தில் பாரதீய ஜனதா பிரதிநிதியாக வெற்றி பெற்று இருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அவருக்கு இந்த நேரத்தில் நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் – த.வி.கூ. ஆனந்தசங்கரி

Snakari.எமக்கு வேண்டியது சமாதானம், ஒற்றுமையுடன் கூடிய இணக்கப்பாடு என்ற தலைப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, அவர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அருகதையுண்டா?  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலம்; பெயர்ந்த மக்களும் பிரிவினை கோருவதையும், தமிழீழம் அமைப்பதையும் கைவிடுவார்களேயானால் தாங்களும் நிறைவேற்று அதிகார முறைமையை கைவிட தயாராக இருப்பதாக தெரிவித்தமையானது நாட்டிலுள்ள பல்லின மக்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆனால் ஆதிக்கம் செலுத்துகின்ற புலம்பெயர்ந்தவர்களும் அவர்களில் தங்கியிருந்து செயற்படுகின்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும்; இதற்கு சம்மதிக்கத் தயங்குவார்கள். எது எப்பிடியிருப்பினும் தங்களின் கூற்று உறுதியாக இருக்குமானால் இந் நாட்டின் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சாதகமானதொரு நிலைமையை உருவாக்க பலர் தயாராகவே உள்ளனர். 1970ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற சில சம்பவங்களை நினைவூட்ட வேண்டுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ புலம் பெயர்ந்தவர்களில் ஒரு பகுதியினருக்கோ இப்பிரச்சினையில் தலையிடுவதற்கு அருகதையுண்டா  இல்லையா என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியும். Read more