Header image alt text

மன்னாரில் குடும்பஸ்தர் ரி.ஐ.டியினரால் கைது-

imagesமன்னார் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு விசாரணைகளுக்காக சென்று விட்டு வெளியில் வந்த மன்னார் பனங்கட்டுக்கோட்டு கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை வவுனியாவில் இருந்து வருகை தந்த பயங்கரவாத புலனாய்வுத்துரையினர் கைது செய்து வவுனியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். பனங்கட்டுக்கோட்டைச் சேந்த 5 பிள்ளைகளின் தந்தையான தங்கத்துரை ஜெயின்ஸ்(வயது-38) என்பவரே கைது செய்யப்பட்டவராவார். பயங்கரவாத புலனாய்வுத்துரையினர் தனக்கு துண்டொன்றையும் தந்துள்ளதாக அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார். எனது கணவருக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் முன்னர் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணைக்காக அவர் நேற்று மன்னார் நீதிமன்றத்திற்கு சென்றார். விசாரணை நிறைவடைந்து வீடு திரும்புவதற்காக நீதிமன்றத்திலிருந்து வெளியில் வந்தபோது வெளியில் நின்றுக்கொண்டிருந்த பயங்கரவாத புலனாய்வுத்துறையினர் அவரை கைதுசெய்து வவுனியாவிற்கு அழைத்துச் சென்றனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், எனது கணவரை கைது செய்ததாகவும், அவருக்கு புனர்வாழ்வு வழங்கவேண்டுமெனவும் பயங்கரவாத புலனாய்வுத்துரையினர் தொலைபேசியில் என்னிடம் தெரிவித்தனர். எனது கணவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பே புலி இயக்கத்தில் இணைந்திருந்தார். பின் திருமணம் முடித்து தற்போது குடும்ப வாழ்வில் ஈடுபட்டுவரும் நிலையிலேயே அவர்; கைது செய்யப்பட்டுள்ளார் என அவரது மனைவி மேலும் கூறியுள்ளார்.

அச்சுவேலி முக்கொலை சந்தேகநபர் தற்கொலை முயற்சி-

யாழ். அச்சுவேலி பகுதியில் இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். சிறைச்சாலையில் விளக்கமறியலில் உள்ள இவர், நேற்று நள்ளிரவு மருந்து வில்லைகளை உட்கொண்டு, தற்கொலைக்கு முயன்றுள்ளார். குறித்த சந்தேகநபர், கடந்த மே மாதம் தனது மனைவி, மாமியார், மனைவியின் சகோதரி மற்றும் அவரது கணவர் உள்ளிட்டோர் மீது வாளால் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதில் மூவர் பலியான நிலையில், இருவர் காயமடைந்தனர். இதனையடுத்து அச்சுவேலிப் பொலிஸாரால் சந்தேகநபருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இவர் சிறையில் இருந்தபோது, ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார். அப்போது வழங்கப்பட்ட மருந்து வில்லைகளை உட்கொண்டு நேற்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். குறித்த நபரை யாழ். சிறைச்சாலை காப்பாளர்கள் சிறை அத்தியட்சகரின் அனுமதியுடன், வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

யாழில் அடையாள அட்டையின்றி 46,000 பேர்-

யாழ்ப்பாணத்தில் தேசிய அடையாள அட்டை அல்லாதவர்கள் 46 ஆயிரம் பேர் இருப்பதாக, யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பொன்னுத்துரை குகநாதன் நேற்று தெரிவித்துள்ளார். 2014ம் ஆண்டிற்கான வாக்களார் இடாப்பிற்கான பி.சி படிவம் நிரப்பப்பட்டு, 4 இலட்சத்து 50 ஆயிரத்து 132 பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், 46 ஆயிரத்து 838 பேர் தேசிய அடையாள அட்டை இன்றி இருப்பதுடன், 7 ஆயிரத்து 126 பேர் தவறான தேசிய அடையாள அட்டை வைத்திருக்கின்றார்கள். அந்த வகையில், அடையாள அட்டை இன்றியும், தவறான அடையாள அட்டை வைத்திருப்பவர்களாக 53 ஆயிரத்து 964 பேர் யாழ். மாவட்டத்தில் உள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தேர்தல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உதவித் தேர்தல் ஆணையாளர் மேலும் கூறியுள்ளார்.

மக்களின் சொத்துக்களை தமதாக்குவது நியாயமற்றது-சீ.வி.கே.சிவஞானம்-
1995, 1996ம் ஆண்டு காலப்பகுதிகளில் மக்களால் யாழ். வங்கிகளில் விட்டுச் செல்லப்பட்ட நகைகள் உள்ளிட்ட பொருட்களை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண சபை கோரிக்கை விடுத்துள்ளது. வட மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த காலப்பகுதியில் இடம்பெற்ற பாரிய இடப்பெயர்வு காரணமாக அரச மற்றும் தனியார் வங்கிகளில் இருந்து கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்ட மக்களின் நகைகள் உள்ளிட்ட பொருட்கள் குறித்தே இந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மக்களால் கைவிடப்பட்ட சொத்துக்களை வங்கிகள் தமதாக்கிக் கொள்வது நியாயமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தோனேஷியாவில் சுனாமி எச்சரிக்கை, இலங்கைக்கு பாதிப்பில்லை-

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இந்தோனோஷியாவின் கிழக்குப் பிராந்தியக் கடற்பரப்பில் 7.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இப் பகுதியை சூழ 300 கிலோமீற்றர் தூரத்திற்கு அசூர அலைகள் ஏற்படக் கூடிய சாத்தியம் உள்ளதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது. இதேவேளை 2004ம் ஆண்டு இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சுனாமித் தாக்கம் ஏற்பட்டிருந்தது. இதனால் 250,000 பேர் வரையில் உயிரிழந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகள் அதிகரிப்பு-

உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்துள்ளார். இதன்படி மன்றங்களின் உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு 7,000 இருந்து 20,000 வரையும் பிரதி நகரசபைத்தலைவர்களுக்கான கொடுப்பனவு 10,000 இருந்து 25,000 வரையிலும் நகரசபைத்தலைவர்களுக்கான கொடுப்பனவு 15,000 இருந்து 30,000 வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலர் திருமலைக்கு விஜயம்-

சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலாளர் மஹிந்த பாலசூரிய, இன்று திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது, திருகோணமலை பொலிஸாரினால், கடற்கரை முன்றலில் அவருக்கு மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கபில ஜெயசேகர, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அன்ரனி மார்க், ஆகியோரின் வழிநடத்தலில் பொலிஸ் அத்தியட்சகர் சிறிலால் தலைமையில் இவ் மரியாதை அணிவகுப்பு நடைபெற்றுள்ளது. திருகோணமலை தலைமையக பொலிசாருடன் இணைந்து விசேட அதிரடிப்டையினரும் இவ் அணிவகுப்பில் பங்கு கொண்டிருந்தனர்.

வடமாகாண சபையின் காணி விபரத் திரட்டல்-

வடமாகாணத்தின் காணி விபரங்களை வடமாகாண சபை திரட்டி வருகிறது. இதற்காக வடமாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளதாக, வடமாகாண சபையின் தவிசாளர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடக்கில் பாதுகாப்பு தரப்பினரின் வசம் இருக்கும் பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அண்மையில் வடமாகாண சபையில் திர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதன்படி தங்களுக்கான ஆவணம் ஒன்றை தயாரித்துக் கொள்ளும் நோக்கில், பொதுமக்களின் காணிகள், அரச காணிகள், பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள காணிகள் மற்றும் கட்டிடங்கள் குறித்த தகவலை ஆவணப்படுத்த இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கான தகவல்களை திரட்டுமாறு வடமாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கு ஏறகனவே கடந்த மாதம் 30ம் திகதி வடமாகாண சபையால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது என அவர் மேலும் கூறியுள்ளார்.

கொஸ்லாந்தையில் 131 பேர் இடம்பெயர்வு-

பதுளை மாவட்டம் கொஸ்லாந்தைப் பகுதியில் மண்சரிவு ஏற்படும் என்ற அச்சத்தினால் இடம்பெயர்ந்த 131 குடும்பங்களைச் சேர்ந்த 464 பேர் சிறி கணேசா தமிழ் வித்தியலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 29 மண்சரிவு இடம்பெற்ற மீரியாபெத்த தோட்டத்துக்கு அருகிலேயே நேற்றையதினம் நில வெடிப்பொன்று அவதானிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து கட்டிட ஆய்வு நிறுவகம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், அங்கு மண்சரிவு ஏற்படுவதற்கான ஆரம்ப குறியீடுகள் தென்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்றை தினம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கொஸ்லாந்தை பிரதேச மக்கள், மீண்டும் முகாமிற்கே திருப்பி அழைக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை இணைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றில் மனு தாக்கல் செய்யும் எண்ணமில்லை-அமைச்சர் பீரிஸ்-

புலிகளுக்கு எதிரான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், அதற்கு எதிராக மேன்முறையீடு செய்யப் போவதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று இதனை நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்துள்ளார். இந்த தடை நீக்கத்துக்கு எதிரான மேன்முறையீடு செய்யப்படுமா? என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் வழங்கும்போது, அவ்வாறான எண்ணம் எதுவும் இல்லை என்று அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார். எனினும் இவ்வாறான மேன்முறையீடு ஒன்றை செய்து, ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்ற விவாதத்தின் வாதியாக செயற்பட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாருக்கு மன்னார் நீதவான் எச்சரிக்கை-

பொய்யான தகவலை வழங்கியமைக்காக பொலிஸாருக்கு மன்னார் நீதவான் நீதிமன்றத்தால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது மயங்கி விழுந்தமை தொடர்பில் பொலிஸார் பொய்யான தகவல்களை வழங்கியுள்ளமை சட்ட வைத்திய அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கவனத்திற்கு எடுத்துக்கொண்ட மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் பொலிஸாருக்கு நேற்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பான அறிக்கை ஒன்றை நீதிமன்றத்திற்கு சமர்பிக்குமாறு வட பிராந்திய பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு, மன்னார் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையின்போது மயங்கி விழுந்த சந்தேகநபர்மீது தாக்குதல் நடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இது ஒரு மனித உரிமை மீறல் எனவும் நீதிபதி ஆனந்தி கனகரட்ணம் சுட்டிக்காட்டியுள்ளார்.

புத்தளத்தில் வர்த்தக நிலையம் மீது துப்பாக்கிப் பிரயோகம்-

புத்தளம் கரம்பைப் பகுதியில் வர்த்தக நிலையமொன்றின் மீது இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.. துப்பாக்கி பிரயோகத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூட்டினால் வர்த்த நிலையத்தின் கதவுகள் சேதமடைந்துள்ளன. காணிப் பிரச்சினை தொடர்பில் வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நோக்கிலேயே இந்த துப்பாக்கி பிரயோக சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு புதிய கடுகதி ரயில் சேவை-

கொழும்பு – கோட்டையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு இன்றிரவு முதல் புதிய கடுகதி ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து இரவு 10 மணிக்கு புறப்படவுள்ள புதிய கடுகதி ரயில், மறுநாள் காலை 6.55க்கு யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் எல்.ஏ.ஆர். ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இந்த கடுகதி ரயில், கோட்டையிலிருந்து கிளிநொச்சி வரை கடுகதி ரயிலாக பயணிக்கவுள்ளது. கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் வரை சகல ரயில் நிலையங்களிலும் இந்த ரயில் நிறுத்தப்படும் என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் மேலும் கூறியுள்ளார்.

அமைச்சுப் பதவியை ஏற்பேன்: மங்கள சமரவீர எம்.பி-

amaichchu pathaviyai eatpen (1)ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, தான் அமைச்சு பதவியே ஏற்று அமைச்சராக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். எந்த காரணத்துக்காகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணையமாட்டேன் என்றும் அமைச்சு பதவிக்காக பேச்சு நடைபெறுவதாக கூறப்படுவதில் எவ்விதமான உண்மையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் எந்தவொரு அமைச்சரையும் நான் சந்திக்கவில்லை என்று தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, எதிர்காலத்தில் ஆட்சியமைக்கவிருக்கின்ற ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான அரசாங்கத்திலேயே நான் அமைச்சராக இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் சுட்டுக்கொலை-

Mannar-Dath-01Mannar-Dath-02மன்னார் – வெள்ளாங்குளம் கணேசபுரம் பகுதியில் வீடொன்றில் நேற்றிரவு 8.50 மணியளவில் புகுந்த ஆயுததாரிகள், வீட்டிலிருந்தவரை சுட்டுக்கொன்றுள்ளதாக இலுப்பைக்கடவை பொலிஸார் தெரிவித்துள்ளனர் அதேயிடத்தை சேர்ந்த கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் (வயது 40) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் முன்பு புலிகள் இயக்கத்தின் பொலிஸ் பிரிவில் கடமையாற்றியவர் என்றும் பின்னர் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று வெளியேறியவர் என்றும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர். மேசன் வேலை செய்து வாழ்க்கையை நடத்திவரும் இவர், சம்பவதினம் இரவு, தனது வீட்டு முற்றத்தில் சீமெந்துக் கற்களை வெட்டிக்கொண்டிருந்தபோது ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

காட்டுப்புலம் மாதகல் வீதி புனரமைப்பு-

kaattupulam mathakal veethi (5)DSC05264யாழ். வலி மேற்கு பிரதேசத்தில் பல இலட்சங்கள் செலவில் வீதிகள் வலி மேற்கு பிரதேச சபையால் புனரமைக்கப்படுகின்றது. மிக நீண்ட யுத்தத்தின் பின் வலி மேற்கு பிரதேசத்தில் மக்கள் மீளக் குடியமர்ந்த பகுதிகளில் காட்டுப்புலம் பிரதேசமும் ஒன்றாகும். இப் பிரதேசத்தில் வீதிகள் மற்றும் மதவுகள் அமைக்கும் பணியில் வலி மேற்கு பிரதேச சபை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த வகையில் மேற்படி வீதி மாகாண சபை நிதி மூலம் 6.5 மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்டு வருவது குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். இதேவேளை இப்பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இலவசமான முறையில் குடிநீர் விநியோகம் வலிமேற்கு பிரதேச சபையால் மேற்கொள்ளப்படுவதும் குறிப்பிக்கூடிய ஒன்றாகும்.

வடக்குக்கான தபால் ரயில் மூலம் ரூ.17,000,000 வருமானம்-

vadakkukkaana thapaal railவடக்குக்கான தபால் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்தில் ஒரு கோடியே 70 இலட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என்று யாழ். புகையிரத நிலைய பொறுப்பதிகாரி டி.பிரதீபன் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 14ஆம் திகதி முதல் வடக்குக்கான இரவு நேர தபால் சேவை ஆரம்பிக்கப்பட்டது. தெற்கிலிருந்து வடக்குக்கு 21 ஆயிரம் பயணிகளும் வடக்கிலிருந்து தெற்குக்கு 28 ஆயிரம் பயணிகளும் முதல் மாதத்தில் பயணித்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். வடக்கு ரயில் சேவைக்கான சாதாரண கட்டணம் 320 ரூபாயாகும். யாழில் உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்கள், ரயில் சேவை மூலம் கொழும்புக்கு கொண்டு செல்லப்படுகின்றன என யாழ். புகையிரத நிலைய பொறுப்பதிகாரி மேலும் கூறியுள்ளார்.

வட்டு தெற்கு முதலி கோவிலடிப்பகுதி அரசடி வீதி புனரமைப்பு-

vattu thetku muthali koviladi veethi (4)மிக நீண்ட காலமாக புனரமைப்புக்கு உட்படாது இருந்த யாழ்ப்பாணம் வட்டு தெற்கு முதலி கோவிலடிப்பகுதியில் உள்ள அரசடி வீதி தொடர்பில் அப்பகுதி மக்கள் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி. ஐங்கரன் அவர்கட்கு அறியத்தந்ததை அடுத்து தவிசாளர் இவ் வீதி தொடர்பில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ.ஈ. சரவணபவன் அவர்கட்கு அறியத்தந்திருந்தார். இதனை அடுத்து பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலமாக ஒதுக்கீடு வழங்கப்பட்டு தற்போது வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய மீனவர்களுக்கு மன்னிப்பு வழங்க தீர்மானமில்லை-

india meenavarkalukku mannippuசர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என இனங்காணப்பட்ட நிலையில், கொழும்பு மேல் நிதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படாது என ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். தி இந்து பத்திரிகைக்கு தகவல் வழங்கியுள்ள அவர், இந்திய மீனவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதான தீர்மானமொன்று இதுவரையில் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார். எவ்வாறாயினும், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவார் என பிரதியமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்ததாக தி இந்து பத்திரிகை, நேற்று செய்தி வெளியிட்டிருந்த நிலையிலேயே, மொஹான் சமரநாயக்க இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கை அகதிகளை நாடு திரும்புமாறு நிர்பந்திக்கக் கூடாது-

ilankai akathikalai naadu thirumpumaaruதமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை நாடு திரும்புமாறு நிர்பந்திக்கக் கூடாது என இந்திய மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் இலங்கையில் தமிழர்களுக்கு உரிமை மற்றும் பாதுகாப்பு இன்றும் கிடைக்கவில்லை என்று அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். பாதுகாப்பு இல்லாத காரணத்தினாலேயே இலங்கை அகதிகள் நாடு திரும்ப அச்சமடைகிறார்கள், இலங்கையில் மறுவாழ்வுத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டியது அவசியமாகும் என வாசன் மேலும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

மொரித்தானியா ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்-

இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு, மொரித்தானிய ஜனாதிபதி முஹமட் அப்துல் அசிஸ் இன்று இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இவரின் இந்த விஜயத்தின்போது, இரு நாடுகளுக்கிடையிலான இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2012ம் ஆண்டில் இருந்து, மொரித்தானியா நாட்டுடன் இலங்கை முறையான தூதரக உறவுகளை பேணி வருகின்றன. மேலும் ஐக்கிய நாடுகள் சபையில் 2012 மற்றும் 2013ம் ஆண்டு காலப்பகுதிகளில் இலங்கைக்கு சார்பாக இருந்த நாடுகளில் மொரித்தானிய அரசாங்கமும் ஒன்று என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கொள்கலன் ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது-

Contenerகொள்கலன் சாரதிகள் மற்றும் ஊழியர்கள் மேற்கொண்டிருந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளதாக, துறைமுகம் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார். கொள்கலன் வாகனங்களை கொழும்பு துறைமுகத்திற்குள் அனுமதிப்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறி நேற்றிரவு முதல் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இந்த விடயம் தொடர்பில் எழுத்துமூலமான உறுதிமொழி வழங்கப்பட்டதை அடுத்தே ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதாக தெரியவந்துள்ளது.

நான்கு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது-

சட்டவிரோதமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு துப்பாக்கிகளுடன் ஒருவர் புத்தளம் பொலிஸ் மோட்டார் வாகனப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்றில் துப்பாக்கிகளை கொண்டு சென்றபோதே, நேற்றுமாலை புத்தளம் – கல்குளிய பிரதேசத்தில் வைத்து இவர் கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபரை கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளுடன் புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகள் புத்தளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பேலியகொடை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்-

கொழும்பு, பேலியகொட – நுகேவீதி சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்றுகாலை 10.30 அளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் சிறிது தூரம் நடந்து சென்று பின்னர் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறி தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் காலி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் சிறு சிறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர் எனவும் தெரியவந்துள்ளது. இதேவேளை வயிற்றுப் பகுதியில் காயமேற்பட்ட நிலையில் இவர் வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீனவர்களின் மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல்-

meenavarkalin marana thandanaiyaiமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து, இலங்கை நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மியான்மருக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடியின் குழுவில் இடம்பெற்றுள்ள வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன், இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த மீனவர்கள் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்பதில் மத்திய அரசு உச்சபட்ச கவனம் செலுத்தி வருவதாகவும், இதற்குத் தேவையான சட்டரீதியான மற்றும் தூதரக ரீதியான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சையத் அக்பருதீன் தெரிவித்தார். தமிழக மீனவர்களான எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத் மற்றும் லாங்லெட் ஆகியோர் மீது போதைப் பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், இலங்கை நீதிமன்றம் கடந்த 30ம் திகதி தூக்குத் தண்டனை விதித்தது. 5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனையை எதிர்த்து இலங்கை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான 20 லட்சம் ரூபாயை தமிழக அரசின் சார்பில் கடந்த சனிக்கிழமை இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இலங்கை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சிங்கள மொழியில் இருந்தால், அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து இலங்கை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. மேல்முறையீட்டு வழக்கில் மீனவர்கள் சார்பில் ஆஜராவதற்காக இலங்கை Read more

சுழிபுரம் கல்விழான் பகுதிக்கு வேள்ட் விசன் திட்டப்பணிப்பாளர் விஜயம்-

chulipuram kalvilaan pakuthikku world vision (5)வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் கௌரவ.திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது விசேட அழைப்பின் பெயரில் 07.11.2014 வெள்ளிக்கிழமை அன்று காலை வலி மேற்கு பிரதேசத்தின் சுழிபுரம் கல்விழான் பகுதிக்கு வேள்விசன் அமைப்பின் அவுஸ்ரேலிய திட்டமிடல் பணிப்பாளர் திரு ஆன்று மற்றும் யாழ் மாவட்ட வேள் விசன் திட்டப்பணிப்பாளர் திரு அன்டனி ஆகியோர் விஜயம் மேறற்கொண்டனர். இப் பகுதியில் மக்கள் அன்றாடம்; குடிநீர் பெறுவதற்கு பெரும் கஸ்டங்களை அனுபவித்து வருவது அறிந்த விடயம். இவ் விடயும் தொடர்பில் மக்களது நிலையினை எடுத்து விளக்கவே இவ் விஜயம் ஏற்பாடாகி இருந்தது. முன்னதாhக அப் பகுதியில் பல காலத்திற்கு முன்னதாக அமைக்கப்பட்ட பிரதேச சபைக்கு சொந்த மான கினறுகள் பார்வையிடப்பட்டு அவை மக்கள் பயன் பாட்டிற்கு ஏற்றதா என்பது தொடர்பில் ஆராயப்பட்டது. இதன் பின்னர் கல்விழான் காந்திஜி சன சமூக கட்டிடத்தில் பயனாளிகளுடன் சந்திப்பு இடம் பெற்றது. இவ்நிகழ்வில் வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் கௌரவ. திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும் போது எமது வலி மேற்கு பிரதேச அபிவிருத்தியில் வேள் விசன் நிறுவனத்தின் பங்கு மிக முக்கிய இடத்தினை வகிக்கின்றது. இந்த வகையில் 2015ம் ஆண்டின் இறுதியில் பிரதேசத்தில் நீர் தெடர்பில் சகல தேவைகளையும் பூர்த்தி செய்யும் நோக்கிற்காக செயற்பட்டு வருகின்றேன். கடந்த ஆண்டில் கூட இவ் நிறுவனத்தினால் எமது பிரதேசத்தில் நீர்த்ததேவை பல வடிவங்களிலும் பூர்த்தி செய்யப்பட்டது. இந்த வகையில் இவ் கல்விழான் பகுதியில் நீர் தொடர்பிலான தேவைகள் மற்றும் சுகாதாரம் தெடர்பிலான தேவைகள் நிறைவு செய்யும் பொருட்டே இத்திட்டம் இங்கு நடை முறைபபடுத்தப்பட உள்ளது. இத் திட்டத்திற்கு மக்களது ஆதரவு கிடைக்கும் சந்தர்ப்த்தில் இப்பகுதியில் முழுமையாக ஒர் சிறு கட்டனத்துடன் நீர் வினயோகமும் மலசல கூட வசதி அற்றவர்கட்கு மல சல கூட வசதியும் முழுமையாக கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். Read more

அகதிகள் தொடர்பான குற்றச்சாட்டை ஏற்க முடியாது-அவுஸ்திரேலியா-

imagesஇலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் தமது நாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என்பதை விளக்கியுள்ள தென்னிந்தியாவிலுள்ள அவுஸ்திரேலியா தூதரக பிரதிநிதி சீன்கெலி இதனைக் கூறியுள்ளார். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு வரும் நபர்கள் தொடர்பில் அவுஸ்திரேலியா கடுமையான கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறது. கடந்த சில வருடங்களில் சுமார் 1200பேர் கடல் வழியாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முற்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு உண்மையானது என நிரூபிக்கப்பட்டால், அவர்களை நாவுரு தீவில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோதமின்றி சரியான வழியில் அவுஸ்திரேலியாவுக்கு வரும் நபர்களை வரவேற்க அவுஸ்திரேலியா என்றும் தயாராகவே உள்ளது என சீன்கெலி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத குடியேற்றவாசிகள் உள்ள முகாம்களை கண்காணிக்க விசேட குழு-

sattavirothaசட்டவிரோத குடியேற்றவாசிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களை கண்காணிப்பதற்கான குழுவொன்றை அவுஸ்திரேலியா நியமித்துள்ளது. இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முயற்சித்த பலர் இந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்கள் நடத்தப்படுகின்ற விதம் மற்றும் அங்கு துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக குறித்த குழுவை அவுஸ்திரேலிய அரசாங்கம் நியமித்துள்ளது. அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை முதலில் அவுஸ்திரேலிய பெருநிலப்பரப்புக்கு வெளியேயிருக்கும் முகாம்களில் தடுத்து, வைத்து முடிவெடுக்கும் நடவடிக்கை தொடர்பில் தொடர்ந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த தடுப்பு முகாம்கள் சிறப்பாக நடத்தப்படுகின்றன என்பதை பக்கச்சார்பற்ற முறையில் உறுதி செய்யக்கூடிய திறன் அரசுக்கு இருக்க வேண்டும் என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சலுகைகளை எதிர்பார்க்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள்-

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் புகலிடம் கோரியுள்ளவர்களுக்கான சில கொடுப்பனவுகளை மறுப்பதற்கான அதிகாரமுள்ளதாக ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் சலுகைகளை எதிர்பார்த்து காத்திருக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொழில்களில் ஈடுபடுவதில்லை என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களின் குழந்தைகளுக்கான சலுகைகள் உள்ளிட்ட அவர்கள் தொழில்களில் இணையும் வரை அரசாங்கத்தினால் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. எனினும் அண்மைக்காலமாக புகலிடம் கோரி செல்கின்றவர்கள் அதனை மாத்திரமே நம்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவில் தஞ்சம் அடைபவர்கள் மூன்று மாத காலம் வரை தங்கியிருக்க வேண்டும் எனவும் அதன்பின்னரே அரசாங்கத்தினால் சலுகைகள் வழங்கப்படும் என பிரித்தானியா கட்டுப்பாடுகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

90,000 தற்காலிக அடையாள அட்டைகளை கையளிக்க தீர்மானம்-

தேர்தல்கள் செயலகத்தினால் விநியோகிக்கப்பட்ட 90,000 தற்காலிக அடையாள அட்டைகளை எதிர்வரும் தேர்தலை இலக்காகொண்டு மீண்டும் உரியவர்களிடம் கையளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பிற்கு அமைய இந்த தற்காலிக அடையாள அட்டை விநியோகிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது. மாகாண சபை தேர்தலுக்காக பல சந்தர்ப்பங்களில் தேர்தல்கள் செயலகத்தினால் தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன. மேலும் தேவை ஏற்பட்டால் தேர்தல்களின் போது தற்காலிக அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அதனை பெற்றுக்கொடுப்பதற்கான விசேட செயற்றிட்டம் ஒன்றை ஆட்பதிவு திணைக்களம் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விசேட தேவையுடையோருக்கு தொழில் பயிற்சி-

விசேட தேவையுடையவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கும் திட்டத்தை மேலும் விரிவுப்படுத்துவதற்கு சமூக சேவைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது இதற்கமைய மாவட்ட மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில் பயிற்சி மத்திய நிலையங்களுக்கு சேர்த்துக்கொள்ளப்படுகின்ற பயிலுநர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக சேவை பணிப்பாளர் அனுஷா கோக்குல குறிப்பிட்டுள்ளார். 18க்கும் 35க்கும் இடைப்பட்ட திருணமாகாத விசேட தேவையுடையோர் இந்த பாடநெறிக்காக விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்கப்பட வேண்டும் என சமூக சேவை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி வெடித்து இராணுவ வீரர் காயம்-

வவுனியா மாவட்டத்தின் பூவரசன்குளம், பெரியவேலன்குளம் பகுதியில் இன்றுகாலை இராணுவ வீரர் ஒருவரின் ரி-56 ரக துப்பாக்கி தவறுதலாக வெடித்தமையால், காயமடைந்த அந்த இராணுவ வீரர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெரியவேலன்குளம் பகுதியில்; அமைந்துள்ள 612ஆவது படைத் தலைமையகத்தின் இராணுவத்தளத்தில் கடமையாற்றும் லயன்ஸ் கோப்ரல் தரங்க (வயது 25) என்பவரே காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

யாழில் சிறுமியை துன்புறுத்திய தாய், சிறிய தந்தை கைது-

யாழ். சாவகச்சேரி பகுதியில் சிறுமி ஒருவரை கொடூரமான முறையில் துன்புறுத்தியதாக கூறப்படும் தாயும் சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் தாய் மற்றும் சிறிய தந்தை தொடர்பில் பொலிஸாருக்கு ஏற்கனவே முறைப்பாடு கிடைத்திருந்ததாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இதற்கமைய நீதிமன்றத்தின் அனுமதியுடன் சிறுமி அவரது பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நேற்று சந்கேநபர்களை கைது செய்ததாக பதில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார். சந்தேகநபர்களை இன்றையதினம் சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது.

அமரர் தோழர் மகேஸ் அவர்களுக்கு இதய அஞ்சலிகள்-

mahesபுங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட சந்திரன் என்கின்ற செல்லத்துரை மகேந்திரராஜா (தோழர் மகேஸ்) அவர்கள் நேற்று முன்தினம் 09.11.2014 ஞாயிற்றுக்கிழமை சுகயீன காரணத்தினால் மரணமெய்தியுள்ளார் என்பதை புளொட் அமைப்பினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மூத்த உறுப்பினரான தோழர் மகேஸ் கழகப்பணிகளில் தனது சிறப்பான செயற்திறனை வெளிப்படுத்தி தோழர்கள் மற்றும் மக்களின் மத்தியில் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தவர். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு, துயரத் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம். அன்னாரின் இறுதிக் கிரியைகள் வவுனியா வைத்தியசாலைச் சுற்றுவட்டத்தில் அமைந்துள்ள அவரது உறவினர் இல்லத்தில் இன்று (11.11.2014)மதியம் 1மணியளவில் நடைபெறவுள்ளது என்பதை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் தோழர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்

வேள்ட் விசன் பிரதிநிதி வலி மேற்கு பிரதேச சபைக்கு விஜயம்-

world vision pirathinith vali west kku vijayam (2)world vision pirathinith vali west kku vijayam (1)வேள்ட் விசன் நிறுவனத்தின் அவுஸ்ரேலிய பிரதிநிதி 07.11.2014 வெள்ளிக்கிழமை அன்று வலி மேற்கு பிரதேசசபைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு வலி மேற்;கு பிரதேச சபை தவிசாளார் கௌரவ.திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களுடன் கலந்துரையாடினார். அவரது வருகையின்போது பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள் மாலை அணிவித்து அவரை வரவேற்றனர். பின்னர் தவிசாளருடன் உத்தியோகபூர்வ சந்திப்பினை அவர் நிகழ்தினார் இதேவேளை யாழ். சங்கானைப் பகுதியில் நெல்சிப் திட்டத்தின் கீழ் வலி மேற்கு பிரதேச சபையால் 32 மில்லியன் ரூபாய் செலவில் அதி நவீன வசதிகள் கொண்ட மீன் சந்தை அமைப்பு வேலைகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. மிக நீண்டகாலமாக சங்கானைப் பகுதி மக்களது கோரிக்கைகள் நிறைவேற்ப்ப்படாது இருந்தநிலையில் இவ் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதை இட்டு மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

வலி மேற்கில் சர்வதேச கைகழுவுதல் தினம்-

ulaga kai kaluvuthal thinam (6)சர்வதேச கைகழுவுதல் தினம் வலி மேற்கு பிரதேசத்தின் விக்டோறியாக் கல்லூரி மண்டபத்தில் கடந்த 07.11.2014 வெள்ளிக்கிழமை அன்று மாலை 2.00 மணிக்கு வேள்விசன் நிறுவனத்தினரால் அவ் அமைப்பின் திட்டபணிப்பளர் அன்டனி தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் வேள்விசன் நிறுவனத்தின் அவுஸ்ரேலிய திட்டமிடல் பணிப்பாளர் திரு ஆன்று அவர்கள் பிரதம விருந்தினராகவும் சிறப்பு விருந்தினர்களாக வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ.திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், சங்கானை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு.வீ.சிவகுமார், சங்கானைக் கோட்;டக் கல்விப்பணிப்பாளர் செல்வி. மரியாம் பிள்ளை, பிரதேச வைத்திய அதிகாரி, பொதுச்சுகாதார பரிசோதகர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இவ் நிகழ்வினை ஒட்டி நடாத்தப்பட்ட போட்டிகளில் கலந்து வெற்றி பெற்ற 175 பிரதேச மாணவர்கட்கு இவ் நிகழ்வில் பரிசில்கள் வழங்கப்பட்டது. இவ் நிகழ்வின் பிரதம விருந்தினரான வேள்விசன் நிறுவனத்தின் அவுஸ்ரேலிய திட்டமிடல் பணிப்பாளர் Read more

ஜனாதிபதி ராஜபக்‌ஷவுக்கு மூன்றாவது முறை போட்டியிடலாம் – சபை முதல்வர்-

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால.டி.சில்வா தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அமர்வுகள் இன்று இடம்பெறும் வேளை அங்கு உரையாற்றும் போதே சபை முதல்வரான நிமல் சிறிபால.டி.சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு மூன்றாவது தடவை போட்டியிட முடியுமா என்பது தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குமாறு ஜனாதிபதி உயர் நீதிமன்றிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் ஜனாதிபதியின் கோரிக்கைக்கான உயர் நீதிமன்ற பதில் நேற்று அவரிடம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசிய அடையாள அட்டைகளை பெறுவதற்கான விழிப்புணர்வு-

தேசிய தேர்தல்களில் தமது சுய அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் அத்தியாவசிய தேவைக்காக தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்களை தெளிவுபடுத்தும் வாரம் அமுலில் உள்ளது. நேற்று தொடக்கம் எதிர்வரும் 16ஆம் திகதிவரை இந்த தெளிவுபடுத்தல் நடவடிக்கை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கபே அமைப்பு மற்றும் இலங்கை மனிதவுரிமைகள் கேந்திர நிலையம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நிகழ்வு இன்று ஊவா பரணகம பிரதேச செயலாளர் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது தேர்தல்கள் திணைக்களம் மற்றும் ஆட்பதிவு திணைக்களம் ஆகியவற்றின் ஊடாக கபே அமைப்பு பொதுமக்களை தெளிவுபடுத்தி வருகின்றது. இதன்படி 2014ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலுக்கு அமைய எதிர்காலத்தில் இடம்பெறும் எந்தவொரு தேர்தலின்போதும் வாக்களிப்பதற்காக தகுதி பெற்றுள்ள 4 லட்சம் பேருக்கு எதிர்வரும் 2 மாதங்களுள் அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முறிகண்டி வாகன விபத்தில் பெண் உயிரிழப்பு-

ஏ9 வீதியின் முறிகண்டி பகுதியில் டிப்பர் வாகனம் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் படுகாயமடைந்துள்ளார். ஆடைத் தொழிற்சாலை ஒன்றுக்கு செல்வதற்காக குறித்த இருவரும் வீதியை கடக்க முற்பட்டபோது யாழ் நோக்கி சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனம் அவர்கள்மீது இன்றுமுற்பகல் 9.45 அளவில் மோதியுள்ளது. விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்ணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். விபத்துடன் தொடர்படைய டிப்பர் வாகன சாரதி தலைமறைவாகி உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சௌபாக்கியமான நாடுகளில் இலங்கை 62 வது இடம்-

உலகின் சௌபாக்கியமான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 62ம் இடம் கிடைத்துள்ளது. லெகோ என்ற சர்வதேச நிறுவனம் உலகின் சௌபாக்கியமான நாடுகளை ஆண்டு தோறும் வரிசைப்படுத்தி அறிக்கை வெளியிட்டு வருகின்றது. இந்த ஆண்டுக்கான பட்டியலில் இலங்கை 62 ஆம் இடத்தைப் பெற்றுள்ள்ளது. உலகின் மிகவும் சௌபாக்கியமான நாடுகளின் வரிசையில் நோர்வே முதலாம் இடத்தையும், சுவிட்சர்லாந்து இரண்டாம் இடத்தையும், நியூசிலாந்து மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. கடந்த 2013 ஆம் ஆண்டில் இலங்கை 60வது இடத்தில் இருந்த போதும் இந்த ஆண்டு சௌபாக்கியமான நாடுகளின் வரிசையில் 62ம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது. 142 நாடுகளில் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பொலிஸ் அதிகாரிகளின் ஆவணங்களைக் களவாடிய இருவர் கைது-

பொலிஸ் அதிகாரிகள் இருவரின் ஆவணங்களை களவாடிய குற்றச்சாட்டில் மட்டக்குளி பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றத் தடுப்புப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். மட்டக்குளி பொலிஸ் நிலைய விசேட பிரிவு பொலிஸ் அதிகாரிகள் இருவரின் ஆவணங்களை களவாடிச் சென்று எரித்ததாக பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 24ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அலுவலகத்தில் இலகுவாக விண்ணப்பம் பெறலாம் – பிரபா கணேசன்-

அரச தொடர்மாடி வீடுகளுக்கான விண்ணப்பங்களை தனது அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் தொலைத்தொடர்புகள், தகவல் தொழில்நுட்பவியல் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். நேற்றுமாலை வடகொழும்பில் இந்த விண்ணப்பங்களை மக்களுக்கு கையளிக்கவிருந்த போதிலும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்தமையால் அதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு மாற்றீடாக பம்பலப்பிட்டியிலுள்ள தனது அலுவலகத்தில் சனி ஞாயிறு தினங்களில் காலை 10மணிமுதல் மாலை 4.00 மணிவரை இலகுவான முறையில் விண்ணப்பங்களை பெறமுடியும் என அவர் கூறியுள்ளார். நேற்றுமாலை மட்டக்குளி சென்.ஜோன் தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டத்தின்போது விண்ணப்பப் படிவங்களை வழங்க நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரேப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து விளக்கம்- 

தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் எந்த வகையான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான தடை நீக்கப்பட கூடாது என ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு எதிராகவும், தாம் ஐரோப்பிய ஒன்றியத்திடம் விளக்கமளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீகோத்தா கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யாழ் தொடரூந்து சேவையில் 80 மில்லியன் ரூபா வருமானம்-

யாழ்ப்பாணம் கொழும்பு தொடரூந்து போக்குவரத்தின் மூலம் கடந்த 25 நாட்களில் 80 மில்லியன் ரூபா வருமானமாக கிடைக்கப்பபெற்றுள்ளது. இதன் மூலம் கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்தின் ஒரு நாள் வருமானம் ஒரு மில்லியனினால் அதிகரித்துள்ளது. அத்துடன், மக்களின் கோரிக்கையின் போரில் யாழ்ப்பாணத்திற்கான புதிய தொடரூந்து சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டையில் இருந்து முற்பகல் 10 மணிக்கும் இந்த தொடரூந்து தமது சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினராக உபேக்ஷா நியமனம்-
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினராக கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

vali metkil 5000 panam vithai naduthal (1)வட மாகாண சபையின் வேண்டுகோளின்பேரில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் இவ் கார்த்திகை மாதத்தில் 5000 பனம் விதைகளை நடும் திட்டத்தினை கடந்த 08.11.2014 சனிக்கிழமை அன்றுகாலை வலி மேற்கு பிரதேசத்தின் வட்டுக்கோட்டை கொத்தந்துறை மயானப்பகுதியில் ஆரம்பித்து வைத்தார். வடமாகாண விவசாய, கால்நடை மற்றும் சுற்றுப்புற சூழல் அமைச்சர் கௌரவ. பொ.ஐங்கரநேசன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு இந்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இவ் நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் வட்டுக்கோட்டைப் பிரதேச மக்கள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர். இதன்படி குறித்த தினத்தில் மேற்படி மயானப் பகுதியில் 1500 பனம் விதைகள் நாட்டப்பட்டது. இத் திட்டம் தொடர்பாக வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் குறிப்பிடுகையில் கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட இடப் பெயர்வுகள் மற்றும் யுத்தங்களால் எமது தேசத்தின் அடையாளமான பனை பல அழிக்கப்பட்டு விட்டன. இவ் நிலையில் எமது தேசத்தின் கற்பக தருவாகவும் அட்சய பாத்திரமாகவும் உள்ள இவ் பனைகளை மீளவும் நடவேண்டிய தேவை உள்ளது. இந்த 5000 பனை மரங்களை நடும் திட்டம் இம் மாதம் முழுவதும் இடம்பெறும் எனக் குறிப்பிட்டார்.

vali metkil 5000 panam vithai naduthal (21)vali metkil 5000 panam vithai naduthal (19)vali metkil 5000 panam vithai naduthal (16)vali metkil 5000 panam vithai naduthal (15)vali metkil 5000 panam vithai naduthal (13)vali metkil 5000 panam vithai naduthal (12)vali metkil 5000 panam vithai naduthal (11)vali metkil 5000 panam vithai naduthal (3)