மன்னாரில் குடும்பஸ்தர் ரி.ஐ.டியினரால் கைது-
 மன்னார் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு விசாரணைகளுக்காக சென்று விட்டு வெளியில் வந்த மன்னார் பனங்கட்டுக்கோட்டு கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை வவுனியாவில் இருந்து வருகை தந்த பயங்கரவாத புலனாய்வுத்துரையினர் கைது செய்து வவுனியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். பனங்கட்டுக்கோட்டைச் சேந்த 5 பிள்ளைகளின் தந்தையான தங்கத்துரை ஜெயின்ஸ்(வயது-38) என்பவரே கைது செய்யப்பட்டவராவார். பயங்கரவாத புலனாய்வுத்துரையினர் தனக்கு துண்டொன்றையும் தந்துள்ளதாக அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார். எனது கணவருக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் முன்னர் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணைக்காக அவர் நேற்று மன்னார் நீதிமன்றத்திற்கு சென்றார். விசாரணை நிறைவடைந்து வீடு திரும்புவதற்காக நீதிமன்றத்திலிருந்து வெளியில் வந்தபோது வெளியில் நின்றுக்கொண்டிருந்த பயங்கரவாத புலனாய்வுத்துறையினர் அவரை கைதுசெய்து வவுனியாவிற்கு அழைத்துச் சென்றனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், எனது கணவரை கைது செய்ததாகவும், அவருக்கு புனர்வாழ்வு வழங்கவேண்டுமெனவும் பயங்கரவாத புலனாய்வுத்துரையினர் தொலைபேசியில் என்னிடம் தெரிவித்தனர். எனது கணவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பே புலி இயக்கத்தில் இணைந்திருந்தார். பின் திருமணம் முடித்து தற்போது குடும்ப வாழ்வில் ஈடுபட்டுவரும் நிலையிலேயே அவர்; கைது செய்யப்பட்டுள்ளார் என அவரது மனைவி மேலும் கூறியுள்ளார்.
மன்னார் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு விசாரணைகளுக்காக சென்று விட்டு வெளியில் வந்த மன்னார் பனங்கட்டுக்கோட்டு கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை வவுனியாவில் இருந்து வருகை தந்த பயங்கரவாத புலனாய்வுத்துரையினர் கைது செய்து வவுனியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். பனங்கட்டுக்கோட்டைச் சேந்த 5 பிள்ளைகளின் தந்தையான தங்கத்துரை ஜெயின்ஸ்(வயது-38) என்பவரே கைது செய்யப்பட்டவராவார். பயங்கரவாத புலனாய்வுத்துரையினர் தனக்கு துண்டொன்றையும் தந்துள்ளதாக அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார். எனது கணவருக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் முன்னர் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணைக்காக அவர் நேற்று மன்னார் நீதிமன்றத்திற்கு சென்றார். விசாரணை நிறைவடைந்து வீடு திரும்புவதற்காக நீதிமன்றத்திலிருந்து வெளியில் வந்தபோது வெளியில் நின்றுக்கொண்டிருந்த பயங்கரவாத புலனாய்வுத்துறையினர் அவரை கைதுசெய்து வவுனியாவிற்கு அழைத்துச் சென்றனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், எனது கணவரை கைது செய்ததாகவும், அவருக்கு புனர்வாழ்வு வழங்கவேண்டுமெனவும் பயங்கரவாத புலனாய்வுத்துரையினர் தொலைபேசியில் என்னிடம் தெரிவித்தனர். எனது கணவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பே புலி இயக்கத்தில் இணைந்திருந்தார். பின் திருமணம் முடித்து தற்போது குடும்ப வாழ்வில் ஈடுபட்டுவரும் நிலையிலேயே அவர்; கைது செய்யப்பட்டுள்ளார் என அவரது மனைவி மேலும் கூறியுள்ளார்.
அச்சுவேலி முக்கொலை சந்தேகநபர் தற்கொலை முயற்சி-
யாழ். அச்சுவேலி பகுதியில் இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். சிறைச்சாலையில் விளக்கமறியலில் உள்ள இவர், நேற்று நள்ளிரவு மருந்து வில்லைகளை உட்கொண்டு, தற்கொலைக்கு முயன்றுள்ளார். குறித்த சந்தேகநபர், கடந்த மே மாதம் தனது மனைவி, மாமியார், மனைவியின் சகோதரி மற்றும் அவரது கணவர் உள்ளிட்டோர் மீது வாளால் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதில் மூவர் பலியான நிலையில், இருவர் காயமடைந்தனர். இதனையடுத்து அச்சுவேலிப் பொலிஸாரால் சந்தேகநபருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இவர் சிறையில் இருந்தபோது, ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார். அப்போது வழங்கப்பட்ட மருந்து வில்லைகளை உட்கொண்டு நேற்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். குறித்த நபரை யாழ். சிறைச்சாலை காப்பாளர்கள் சிறை அத்தியட்சகரின் அனுமதியுடன், வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
யாழில் அடையாள அட்டையின்றி 46,000 பேர்-
யாழ்ப்பாணத்தில் தேசிய அடையாள அட்டை அல்லாதவர்கள் 46 ஆயிரம் பேர் இருப்பதாக, யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பொன்னுத்துரை குகநாதன் நேற்று தெரிவித்துள்ளார். 2014ம் ஆண்டிற்கான வாக்களார் இடாப்பிற்கான பி.சி படிவம் நிரப்பப்பட்டு, 4 இலட்சத்து 50 ஆயிரத்து 132 பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், 46 ஆயிரத்து 838 பேர் தேசிய அடையாள அட்டை இன்றி இருப்பதுடன், 7 ஆயிரத்து 126 பேர் தவறான தேசிய அடையாள அட்டை வைத்திருக்கின்றார்கள். அந்த வகையில், அடையாள அட்டை இன்றியும், தவறான அடையாள அட்டை வைத்திருப்பவர்களாக 53 ஆயிரத்து 964 பேர் யாழ். மாவட்டத்தில் உள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தேர்தல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உதவித் தேர்தல் ஆணையாளர் மேலும் கூறியுள்ளார்.
மக்களின் சொத்துக்களை தமதாக்குவது நியாயமற்றது-சீ.வி.கே.சிவஞானம்-
1995, 1996ம் ஆண்டு காலப்பகுதிகளில் மக்களால் யாழ். வங்கிகளில் விட்டுச் செல்லப்பட்ட நகைகள் உள்ளிட்ட பொருட்களை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண சபை கோரிக்கை விடுத்துள்ளது. வட மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த காலப்பகுதியில் இடம்பெற்ற பாரிய இடப்பெயர்வு காரணமாக அரச மற்றும் தனியார் வங்கிகளில் இருந்து கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்ட மக்களின் நகைகள் உள்ளிட்ட பொருட்கள் குறித்தே இந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மக்களால் கைவிடப்பட்ட சொத்துக்களை வங்கிகள் தமதாக்கிக் கொள்வது நியாயமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தோனேஷியாவில் சுனாமி எச்சரிக்கை, இலங்கைக்கு பாதிப்பில்லை-
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இந்தோனோஷியாவின் கிழக்குப் பிராந்தியக் கடற்பரப்பில் 7.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இப் பகுதியை சூழ 300 கிலோமீற்றர் தூரத்திற்கு அசூர அலைகள் ஏற்படக் கூடிய சாத்தியம் உள்ளதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது. இதேவேளை 2004ம் ஆண்டு இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சுனாமித் தாக்கம் ஏற்பட்டிருந்தது. இதனால் 250,000 பேர் வரையில் உயிரிழந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகள் அதிகரிப்பு-
உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்துள்ளார். இதன்படி மன்றங்களின் உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு 7,000 இருந்து 20,000 வரையும் பிரதி நகரசபைத்தலைவர்களுக்கான கொடுப்பனவு 10,000 இருந்து 25,000 வரையிலும் நகரசபைத்தலைவர்களுக்கான கொடுப்பனவு 15,000 இருந்து 30,000 வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலர் திருமலைக்கு விஜயம்-
சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலாளர் மஹிந்த பாலசூரிய, இன்று திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது, திருகோணமலை பொலிஸாரினால், கடற்கரை முன்றலில் அவருக்கு மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கபில ஜெயசேகர, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அன்ரனி மார்க், ஆகியோரின் வழிநடத்தலில் பொலிஸ் அத்தியட்சகர் சிறிலால் தலைமையில் இவ் மரியாதை அணிவகுப்பு நடைபெற்றுள்ளது. திருகோணமலை தலைமையக பொலிசாருடன் இணைந்து விசேட அதிரடிப்டையினரும் இவ் அணிவகுப்பில் பங்கு கொண்டிருந்தனர்.
 
		     ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, தான் அமைச்சு பதவியே ஏற்று அமைச்சராக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். எந்த காரணத்துக்காகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணையமாட்டேன் என்றும் அமைச்சு பதவிக்காக பேச்சு நடைபெறுவதாக கூறப்படுவதில் எவ்விதமான உண்மையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் எந்தவொரு அமைச்சரையும் நான் சந்திக்கவில்லை என்று தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, எதிர்காலத்தில் ஆட்சியமைக்கவிருக்கின்ற ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான அரசாங்கத்திலேயே நான் அமைச்சராக இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, தான் அமைச்சு பதவியே ஏற்று அமைச்சராக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். எந்த காரணத்துக்காகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணையமாட்டேன் என்றும் அமைச்சு பதவிக்காக பேச்சு நடைபெறுவதாக கூறப்படுவதில் எவ்விதமான உண்மையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் எந்தவொரு அமைச்சரையும் நான் சந்திக்கவில்லை என்று தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, எதிர்காலத்தில் ஆட்சியமைக்கவிருக்கின்ற ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான அரசாங்கத்திலேயே நான் அமைச்சராக இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
 மன்னார் – வெள்ளாங்குளம் கணேசபுரம் பகுதியில் வீடொன்றில் நேற்றிரவு 8.50 மணியளவில் புகுந்த ஆயுததாரிகள், வீட்டிலிருந்தவரை சுட்டுக்கொன்றுள்ளதாக இலுப்பைக்கடவை பொலிஸார் தெரிவித்துள்ளனர் அதேயிடத்தை சேர்ந்த கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் (வயது 40) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் முன்பு புலிகள் இயக்கத்தின் பொலிஸ் பிரிவில் கடமையாற்றியவர் என்றும் பின்னர் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று வெளியேறியவர் என்றும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர். மேசன் வேலை செய்து வாழ்க்கையை நடத்திவரும் இவர், சம்பவதினம் இரவு, தனது வீட்டு முற்றத்தில் சீமெந்துக் கற்களை வெட்டிக்கொண்டிருந்தபோது ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மன்னார் – வெள்ளாங்குளம் கணேசபுரம் பகுதியில் வீடொன்றில் நேற்றிரவு 8.50 மணியளவில் புகுந்த ஆயுததாரிகள், வீட்டிலிருந்தவரை சுட்டுக்கொன்றுள்ளதாக இலுப்பைக்கடவை பொலிஸார் தெரிவித்துள்ளனர் அதேயிடத்தை சேர்ந்த கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் (வயது 40) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் முன்பு புலிகள் இயக்கத்தின் பொலிஸ் பிரிவில் கடமையாற்றியவர் என்றும் பின்னர் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று வெளியேறியவர் என்றும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர். மேசன் வேலை செய்து வாழ்க்கையை நடத்திவரும் இவர், சம்பவதினம் இரவு, தனது வீட்டு முற்றத்தில் சீமெந்துக் கற்களை வெட்டிக்கொண்டிருந்தபோது ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
 யாழ். வலி மேற்கு பிரதேசத்தில் பல இலட்சங்கள் செலவில் வீதிகள் வலி மேற்கு பிரதேச சபையால் புனரமைக்கப்படுகின்றது. மிக நீண்ட யுத்தத்தின் பின் வலி மேற்கு பிரதேசத்தில் மக்கள் மீளக் குடியமர்ந்த பகுதிகளில் காட்டுப்புலம் பிரதேசமும் ஒன்றாகும். இப் பிரதேசத்தில் வீதிகள் மற்றும் மதவுகள் அமைக்கும் பணியில் வலி மேற்கு பிரதேச சபை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த வகையில் மேற்படி வீதி மாகாண சபை நிதி மூலம் 6.5 மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்டு வருவது குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். இதேவேளை இப்பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இலவசமான முறையில் குடிநீர் விநியோகம் வலிமேற்கு பிரதேச சபையால் மேற்கொள்ளப்படுவதும் குறிப்பிக்கூடிய ஒன்றாகும்.
யாழ். வலி மேற்கு பிரதேசத்தில் பல இலட்சங்கள் செலவில் வீதிகள் வலி மேற்கு பிரதேச சபையால் புனரமைக்கப்படுகின்றது. மிக நீண்ட யுத்தத்தின் பின் வலி மேற்கு பிரதேசத்தில் மக்கள் மீளக் குடியமர்ந்த பகுதிகளில் காட்டுப்புலம் பிரதேசமும் ஒன்றாகும். இப் பிரதேசத்தில் வீதிகள் மற்றும் மதவுகள் அமைக்கும் பணியில் வலி மேற்கு பிரதேச சபை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த வகையில் மேற்படி வீதி மாகாண சபை நிதி மூலம் 6.5 மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்டு வருவது குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். இதேவேளை இப்பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இலவசமான முறையில் குடிநீர் விநியோகம் வலிமேற்கு பிரதேச சபையால் மேற்கொள்ளப்படுவதும் குறிப்பிக்கூடிய ஒன்றாகும். வடக்குக்கான தபால் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்தில் ஒரு கோடியே 70 இலட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என்று யாழ். புகையிரத நிலைய பொறுப்பதிகாரி டி.பிரதீபன் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 14ஆம் திகதி முதல் வடக்குக்கான இரவு நேர தபால் சேவை ஆரம்பிக்கப்பட்டது. தெற்கிலிருந்து வடக்குக்கு 21 ஆயிரம் பயணிகளும் வடக்கிலிருந்து தெற்குக்கு 28 ஆயிரம் பயணிகளும் முதல் மாதத்தில் பயணித்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். வடக்கு ரயில் சேவைக்கான சாதாரண கட்டணம் 320 ரூபாயாகும். யாழில் உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்கள், ரயில் சேவை மூலம் கொழும்புக்கு கொண்டு செல்லப்படுகின்றன என யாழ். புகையிரத நிலைய பொறுப்பதிகாரி மேலும் கூறியுள்ளார்.
வடக்குக்கான தபால் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்தில் ஒரு கோடியே 70 இலட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என்று யாழ். புகையிரத நிலைய பொறுப்பதிகாரி டி.பிரதீபன் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 14ஆம் திகதி முதல் வடக்குக்கான இரவு நேர தபால் சேவை ஆரம்பிக்கப்பட்டது. தெற்கிலிருந்து வடக்குக்கு 21 ஆயிரம் பயணிகளும் வடக்கிலிருந்து தெற்குக்கு 28 ஆயிரம் பயணிகளும் முதல் மாதத்தில் பயணித்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். வடக்கு ரயில் சேவைக்கான சாதாரண கட்டணம் 320 ரூபாயாகும். யாழில் உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்கள், ரயில் சேவை மூலம் கொழும்புக்கு கொண்டு செல்லப்படுகின்றன என யாழ். புகையிரத நிலைய பொறுப்பதிகாரி மேலும் கூறியுள்ளார். மிக நீண்ட காலமாக புனரமைப்புக்கு உட்படாது இருந்த யாழ்ப்பாணம் வட்டு தெற்கு முதலி கோவிலடிப்பகுதியில் உள்ள அரசடி வீதி தொடர்பில் அப்பகுதி மக்கள் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி. ஐங்கரன் அவர்கட்கு அறியத்தந்ததை அடுத்து தவிசாளர் இவ் வீதி தொடர்பில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ.ஈ. சரவணபவன் அவர்கட்கு அறியத்தந்திருந்தார். இதனை அடுத்து பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலமாக ஒதுக்கீடு வழங்கப்பட்டு தற்போது வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மிக நீண்ட காலமாக புனரமைப்புக்கு உட்படாது இருந்த யாழ்ப்பாணம் வட்டு தெற்கு முதலி கோவிலடிப்பகுதியில் உள்ள அரசடி வீதி தொடர்பில் அப்பகுதி மக்கள் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி. ஐங்கரன் அவர்கட்கு அறியத்தந்ததை அடுத்து தவிசாளர் இவ் வீதி தொடர்பில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ.ஈ. சரவணபவன் அவர்கட்கு அறியத்தந்திருந்தார். இதனை அடுத்து பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலமாக ஒதுக்கீடு வழங்கப்பட்டு தற்போது வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என இனங்காணப்பட்ட நிலையில், கொழும்பு மேல் நிதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படாது என ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். தி இந்து பத்திரிகைக்கு தகவல் வழங்கியுள்ள அவர், இந்திய மீனவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதான தீர்மானமொன்று இதுவரையில் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார். எவ்வாறாயினும், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவார் என பிரதியமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்ததாக தி இந்து பத்திரிகை, நேற்று செய்தி வெளியிட்டிருந்த நிலையிலேயே, மொஹான் சமரநாயக்க இவ்வாறு கூறியுள்ளார்.
சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என இனங்காணப்பட்ட நிலையில், கொழும்பு மேல் நிதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படாது என ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். தி இந்து பத்திரிகைக்கு தகவல் வழங்கியுள்ள அவர், இந்திய மீனவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதான தீர்மானமொன்று இதுவரையில் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார். எவ்வாறாயினும், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவார் என பிரதியமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்ததாக தி இந்து பத்திரிகை, நேற்று செய்தி வெளியிட்டிருந்த நிலையிலேயே, மொஹான் சமரநாயக்க இவ்வாறு கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை நாடு திரும்புமாறு நிர்பந்திக்கக் கூடாது என இந்திய மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் இலங்கையில் தமிழர்களுக்கு உரிமை மற்றும் பாதுகாப்பு இன்றும் கிடைக்கவில்லை என்று அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். பாதுகாப்பு இல்லாத காரணத்தினாலேயே இலங்கை அகதிகள் நாடு திரும்ப அச்சமடைகிறார்கள், இலங்கையில் மறுவாழ்வுத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டியது அவசியமாகும் என வாசன் மேலும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை நாடு திரும்புமாறு நிர்பந்திக்கக் கூடாது என இந்திய மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் இலங்கையில் தமிழர்களுக்கு உரிமை மற்றும் பாதுகாப்பு இன்றும் கிடைக்கவில்லை என்று அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். பாதுகாப்பு இல்லாத காரணத்தினாலேயே இலங்கை அகதிகள் நாடு திரும்ப அச்சமடைகிறார்கள், இலங்கையில் மறுவாழ்வுத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டியது அவசியமாகும் என வாசன் மேலும் வலியுறுத்திக் கூறியுள்ளார். கொள்கலன் சாரதிகள் மற்றும் ஊழியர்கள் மேற்கொண்டிருந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளதாக, துறைமுகம் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார். கொள்கலன் வாகனங்களை கொழும்பு துறைமுகத்திற்குள் அனுமதிப்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறி நேற்றிரவு முதல் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இந்த விடயம் தொடர்பில் எழுத்துமூலமான உறுதிமொழி வழங்கப்பட்டதை அடுத்தே ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதாக தெரியவந்துள்ளது.
கொள்கலன் சாரதிகள் மற்றும் ஊழியர்கள் மேற்கொண்டிருந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளதாக, துறைமுகம் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார். கொள்கலன் வாகனங்களை கொழும்பு துறைமுகத்திற்குள் அனுமதிப்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறி நேற்றிரவு முதல் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இந்த விடயம் தொடர்பில் எழுத்துமூலமான உறுதிமொழி வழங்கப்பட்டதை அடுத்தே ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதாக தெரியவந்துள்ளது.  த
த வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் கௌரவ.திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது விசேட அழைப்பின் பெயரில் 07.11.2014 வெள்ளிக்கிழமை அன்று காலை வலி மேற்கு பிரதேசத்தின் சுழிபுரம் கல்விழான் பகுதிக்கு வேள்விசன் அமைப்பின் அவுஸ்ரேலிய திட்டமிடல் பணிப்பாளர் திரு ஆன்று மற்றும் யாழ் மாவட்ட வேள் விசன் திட்டப்பணிப்பாளர் திரு அன்டனி ஆகியோர் விஜயம் மேறற்கொண்டனர். இப் பகுதியில் மக்கள் அன்றாடம்; குடிநீர் பெறுவதற்கு பெரும் கஸ்டங்களை அனுபவித்து வருவது அறிந்த விடயம். இவ் விடயும் தொடர்பில் மக்களது நிலையினை எடுத்து விளக்கவே இவ் விஜயம் ஏற்பாடாகி இருந்தது. முன்னதாhக அப் பகுதியில் பல காலத்திற்கு முன்னதாக அமைக்கப்பட்ட பிரதேச சபைக்கு சொந்த மான கினறுகள் பார்வையிடப்பட்டு அவை மக்கள் பயன் பாட்டிற்கு ஏற்றதா என்பது தொடர்பில் ஆராயப்பட்டது. இதன் பின்னர் கல்விழான் காந்திஜி சன சமூக கட்டிடத்தில் பயனாளிகளுடன் சந்திப்பு இடம் பெற்றது. இவ்நிகழ்வில் வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் கௌரவ. திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும் போது எமது வலி மேற்கு பிரதேச அபிவிருத்தியில் வேள் விசன் நிறுவனத்தின் பங்கு மிக முக்கிய இடத்தினை வகிக்கின்றது. இந்த வகையில் 2015ம் ஆண்டின் இறுதியில் பிரதேசத்தில் நீர் தெடர்பில் சகல தேவைகளையும் பூர்த்தி செய்யும் நோக்கிற்காக செயற்பட்டு வருகின்றேன். கடந்த ஆண்டில் கூட இவ் நிறுவனத்தினால் எமது பிரதேசத்தில் நீர்த்ததேவை பல வடிவங்களிலும் பூர்த்தி செய்யப்பட்டது. இந்த வகையில் இவ் கல்விழான் பகுதியில் நீர் தொடர்பிலான தேவைகள் மற்றும் சுகாதாரம் தெடர்பிலான தேவைகள் நிறைவு செய்யும் பொருட்டே இத்திட்டம் இங்கு நடை முறைபபடுத்தப்பட உள்ளது. இத் திட்டத்திற்கு மக்களது ஆதரவு கிடைக்கும் சந்தர்ப்த்தில் இப்பகுதியில் முழுமையாக ஒர் சிறு கட்டனத்துடன் நீர் வினயோகமும் மலசல கூட வசதி அற்றவர்கட்கு மல சல கூட வசதியும் முழுமையாக கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் கௌரவ.திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது விசேட அழைப்பின் பெயரில் 07.11.2014 வெள்ளிக்கிழமை அன்று காலை வலி மேற்கு பிரதேசத்தின் சுழிபுரம் கல்விழான் பகுதிக்கு வேள்விசன் அமைப்பின் அவுஸ்ரேலிய திட்டமிடல் பணிப்பாளர் திரு ஆன்று மற்றும் யாழ் மாவட்ட வேள் விசன் திட்டப்பணிப்பாளர் திரு அன்டனி ஆகியோர் விஜயம் மேறற்கொண்டனர். இப் பகுதியில் மக்கள் அன்றாடம்; குடிநீர் பெறுவதற்கு பெரும் கஸ்டங்களை அனுபவித்து வருவது அறிந்த விடயம். இவ் விடயும் தொடர்பில் மக்களது நிலையினை எடுத்து விளக்கவே இவ் விஜயம் ஏற்பாடாகி இருந்தது. முன்னதாhக அப் பகுதியில் பல காலத்திற்கு முன்னதாக அமைக்கப்பட்ட பிரதேச சபைக்கு சொந்த மான கினறுகள் பார்வையிடப்பட்டு அவை மக்கள் பயன் பாட்டிற்கு ஏற்றதா என்பது தொடர்பில் ஆராயப்பட்டது. இதன் பின்னர் கல்விழான் காந்திஜி சன சமூக கட்டிடத்தில் பயனாளிகளுடன் சந்திப்பு இடம் பெற்றது. இவ்நிகழ்வில் வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் கௌரவ. திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும் போது எமது வலி மேற்கு பிரதேச அபிவிருத்தியில் வேள் விசன் நிறுவனத்தின் பங்கு மிக முக்கிய இடத்தினை வகிக்கின்றது. இந்த வகையில் 2015ம் ஆண்டின் இறுதியில் பிரதேசத்தில் நீர் தெடர்பில் சகல தேவைகளையும் பூர்த்தி செய்யும் நோக்கிற்காக செயற்பட்டு வருகின்றேன். கடந்த ஆண்டில் கூட இவ் நிறுவனத்தினால் எமது பிரதேசத்தில் நீர்த்ததேவை பல வடிவங்களிலும் பூர்த்தி செய்யப்பட்டது. இந்த வகையில் இவ் கல்விழான் பகுதியில் நீர் தொடர்பிலான தேவைகள் மற்றும் சுகாதாரம் தெடர்பிலான தேவைகள் நிறைவு செய்யும் பொருட்டே இத்திட்டம் இங்கு நடை முறைபபடுத்தப்பட உள்ளது. இத் திட்டத்திற்கு மக்களது ஆதரவு கிடைக்கும் சந்தர்ப்த்தில் இப்பகுதியில் முழுமையாக ஒர் சிறு கட்டனத்துடன் நீர் வினயோகமும் மலசல கூட வசதி அற்றவர்கட்கு மல சல கூட வசதியும் முழுமையாக கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.   இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் தமது நாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என்பதை விளக்கியுள்ள தென்னிந்தியாவிலுள்ள அவுஸ்திரேலியா தூதரக பிரதிநிதி சீன்கெலி இதனைக் கூறியுள்ளார். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு வரும் நபர்கள் தொடர்பில் அவுஸ்திரேலியா கடுமையான கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறது. கடந்த சில வருடங்களில் சுமார் 1200பேர் கடல் வழியாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முற்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு உண்மையானது என நிரூபிக்கப்பட்டால், அவர்களை நாவுரு தீவில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோதமின்றி சரியான வழியில் அவுஸ்திரேலியாவுக்கு வரும் நபர்களை வரவேற்க அவுஸ்திரேலியா என்றும் தயாராகவே உள்ளது என சீன்கெலி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் தமது நாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என்பதை விளக்கியுள்ள தென்னிந்தியாவிலுள்ள அவுஸ்திரேலியா தூதரக பிரதிநிதி சீன்கெலி இதனைக் கூறியுள்ளார். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு வரும் நபர்கள் தொடர்பில் அவுஸ்திரேலியா கடுமையான கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறது. கடந்த சில வருடங்களில் சுமார் 1200பேர் கடல் வழியாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முற்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு உண்மையானது என நிரூபிக்கப்பட்டால், அவர்களை நாவுரு தீவில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோதமின்றி சரியான வழியில் அவுஸ்திரேலியாவுக்கு வரும் நபர்களை வரவேற்க அவுஸ்திரேலியா என்றும் தயாராகவே உள்ளது என சீன்கெலி மேலும் குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத குடியேற்றவாசிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களை கண்காணிப்பதற்கான குழுவொன்றை அவுஸ்திரேலியா நியமித்துள்ளது. இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முயற்சித்த பலர் இந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்கள் நடத்தப்படுகின்ற விதம் மற்றும் அங்கு துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக குறித்த குழுவை அவுஸ்திரேலிய அரசாங்கம் நியமித்துள்ளது. அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை முதலில் அவுஸ்திரேலிய பெருநிலப்பரப்புக்கு வெளியேயிருக்கும் முகாம்களில் தடுத்து, வைத்து முடிவெடுக்கும் நடவடிக்கை தொடர்பில் தொடர்ந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த தடுப்பு முகாம்கள் சிறப்பாக நடத்தப்படுகின்றன என்பதை பக்கச்சார்பற்ற முறையில் உறுதி செய்யக்கூடிய திறன் அரசுக்கு இருக்க வேண்டும் என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோத குடியேற்றவாசிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களை கண்காணிப்பதற்கான குழுவொன்றை அவுஸ்திரேலியா நியமித்துள்ளது. இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முயற்சித்த பலர் இந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்கள் நடத்தப்படுகின்ற விதம் மற்றும் அங்கு துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக குறித்த குழுவை அவுஸ்திரேலிய அரசாங்கம் நியமித்துள்ளது. அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை முதலில் அவுஸ்திரேலிய பெருநிலப்பரப்புக்கு வெளியேயிருக்கும் முகாம்களில் தடுத்து, வைத்து முடிவெடுக்கும் நடவடிக்கை தொடர்பில் தொடர்ந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த தடுப்பு முகாம்கள் சிறப்பாக நடத்தப்படுகின்றன என்பதை பக்கச்சார்பற்ற முறையில் உறுதி செய்யக்கூடிய திறன் அரசுக்கு இருக்க வேண்டும் என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட சந்திரன் என்கின்ற செல்லத்துரை மகேந்திரராஜா (தோழர் மகேஸ்) அவர்கள் நேற்று முன்தினம் 09.11.2014 ஞாயிற்றுக்கிழமை சுகயீன காரணத்தினால் மரணமெய்தியுள்ளார் என்பதை புளொட் அமைப்பினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மூத்த உறுப்பினரான தோழர் மகேஸ் கழகப்பணிகளில் தனது சிறப்பான செயற்திறனை வெளிப்படுத்தி தோழர்கள் மற்றும் மக்களின் மத்தியில் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தவர். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு, துயரத் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம். அன்னாரின் இறுதிக் கிரியைகள் வவுனியா வைத்தியசாலைச் சுற்றுவட்டத்தில் அமைந்துள்ள அவரது உறவினர் இல்லத்தில் இன்று (11.11.2014)மதியம் 1மணியளவில் நடைபெறவுள்ளது என்பதை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் தோழர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்
புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட சந்திரன் என்கின்ற செல்லத்துரை மகேந்திரராஜா (தோழர் மகேஸ்) அவர்கள் நேற்று முன்தினம் 09.11.2014 ஞாயிற்றுக்கிழமை சுகயீன காரணத்தினால் மரணமெய்தியுள்ளார் என்பதை புளொட் அமைப்பினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மூத்த உறுப்பினரான தோழர் மகேஸ் கழகப்பணிகளில் தனது சிறப்பான செயற்திறனை வெளிப்படுத்தி தோழர்கள் மற்றும் மக்களின் மத்தியில் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தவர். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு, துயரத் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம். அன்னாரின் இறுதிக் கிரியைகள் வவுனியா வைத்தியசாலைச் சுற்றுவட்டத்தில் அமைந்துள்ள அவரது உறவினர் இல்லத்தில் இன்று (11.11.2014)மதியம் 1மணியளவில் நடைபெறவுள்ளது என்பதை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் தோழர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்
 வேள்ட் விசன் நிறுவனத்தின் அவுஸ்ரேலிய பிரதிநிதி 07.11.2014 வெள்ளிக்கிழமை அன்று வலி மேற்கு பிரதேசசபைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு வலி மேற்;கு பிரதேச சபை தவிசாளார் கௌரவ.திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களுடன் கலந்துரையாடினார். அவரது வருகையின்போது பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள் மாலை அணிவித்து அவரை வரவேற்றனர். பின்னர் தவிசாளருடன் உத்தியோகபூர்வ சந்திப்பினை அவர் நிகழ்தினார் இதேவேளை யாழ். சங்கானைப் பகுதியில் நெல்சிப் திட்டத்தின் கீழ் வலி மேற்கு பிரதேச சபையால் 32 மில்லியன் ரூபாய் செலவில் அதி நவீன வசதிகள் கொண்ட மீன் சந்தை அமைப்பு வேலைகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. மிக நீண்டகாலமாக சங்கானைப் பகுதி மக்களது கோரிக்கைகள் நிறைவேற்ப்ப்படாது இருந்தநிலையில் இவ் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதை இட்டு மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
வேள்ட் விசன் நிறுவனத்தின் அவுஸ்ரேலிய பிரதிநிதி 07.11.2014 வெள்ளிக்கிழமை அன்று வலி மேற்கு பிரதேசசபைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு வலி மேற்;கு பிரதேச சபை தவிசாளார் கௌரவ.திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களுடன் கலந்துரையாடினார். அவரது வருகையின்போது பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள் மாலை அணிவித்து அவரை வரவேற்றனர். பின்னர் தவிசாளருடன் உத்தியோகபூர்வ சந்திப்பினை அவர் நிகழ்தினார் இதேவேளை யாழ். சங்கானைப் பகுதியில் நெல்சிப் திட்டத்தின் கீழ் வலி மேற்கு பிரதேச சபையால் 32 மில்லியன் ரூபாய் செலவில் அதி நவீன வசதிகள் கொண்ட மீன் சந்தை அமைப்பு வேலைகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. மிக நீண்டகாலமாக சங்கானைப் பகுதி மக்களது கோரிக்கைகள் நிறைவேற்ப்ப்படாது இருந்தநிலையில் இவ் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதை இட்டு மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். சர்வதேச கைகழுவுதல் தினம் வலி மேற்கு பிரதேசத்தின் விக்டோறியாக் கல்லூரி மண்டபத்தில் கடந்த 07.11.2014 வெள்ளிக்கிழமை அன்று மாலை 2.00 மணிக்கு வேள்விசன் நிறுவனத்தினரால் அவ் அமைப்பின் திட்டபணிப்பளர் அன்டனி தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் வேள்விசன் நிறுவனத்தின் அவுஸ்ரேலிய திட்டமிடல் பணிப்பாளர் திரு ஆன்று அவர்கள் பிரதம விருந்தினராகவும் சிறப்பு விருந்தினர்களாக வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ.திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், சங்கானை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு.வீ.சிவகுமார், சங்கானைக் கோட்;டக் கல்விப்பணிப்பாளர் செல்வி. மரியாம் பிள்ளை, பிரதேச வைத்திய அதிகாரி, பொதுச்சுகாதார பரிசோதகர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இவ் நிகழ்வினை ஒட்டி நடாத்தப்பட்ட போட்டிகளில் கலந்து வெற்றி பெற்ற 175 பிரதேச மாணவர்கட்கு இவ் நிகழ்வில் பரிசில்கள் வழங்கப்பட்டது.
சர்வதேச கைகழுவுதல் தினம் வலி மேற்கு பிரதேசத்தின் விக்டோறியாக் கல்லூரி மண்டபத்தில் கடந்த 07.11.2014 வெள்ளிக்கிழமை அன்று மாலை 2.00 மணிக்கு வேள்விசன் நிறுவனத்தினரால் அவ் அமைப்பின் திட்டபணிப்பளர் அன்டனி தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் வேள்விசன் நிறுவனத்தின் அவுஸ்ரேலிய திட்டமிடல் பணிப்பாளர் திரு ஆன்று அவர்கள் பிரதம விருந்தினராகவும் சிறப்பு விருந்தினர்களாக வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ.திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், சங்கானை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு.வீ.சிவகுமார், சங்கானைக் கோட்;டக் கல்விப்பணிப்பாளர் செல்வி. மரியாம் பிள்ளை, பிரதேச வைத்திய அதிகாரி, பொதுச்சுகாதார பரிசோதகர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இவ் நிகழ்வினை ஒட்டி நடாத்தப்பட்ட போட்டிகளில் கலந்து வெற்றி பெற்ற 175 பிரதேச மாணவர்கட்கு இவ் நிகழ்வில் பரிசில்கள் வழங்கப்பட்டது.  வட மாகாண சபையின் வேண்டுகோளின்பேரில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் இவ் கார்த்திகை மாதத்தில் 5000 பனம் விதைகளை நடும் திட்டத்தினை கடந்த 08.11.2014 சனிக்கிழமை அன்றுகாலை வலி மேற்கு பிரதேசத்தின் வட்டுக்கோட்டை கொத்தந்துறை மயானப்பகுதியில் ஆரம்பித்து வைத்தார். வடமாகாண விவசாய, கால்நடை மற்றும் சுற்றுப்புற சூழல் அமைச்சர் கௌரவ. பொ.ஐங்கரநேசன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு இந்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இவ் நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் வட்டுக்கோட்டைப் பிரதேச மக்கள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர். இதன்படி குறித்த தினத்தில் மேற்படி மயானப் பகுதியில் 1500 பனம் விதைகள் நாட்டப்பட்டது. இத் திட்டம் தொடர்பாக வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் குறிப்பிடுகையில் கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட இடப் பெயர்வுகள் மற்றும் யுத்தங்களால் எமது தேசத்தின் அடையாளமான பனை பல அழிக்கப்பட்டு விட்டன. இவ் நிலையில் எமது தேசத்தின் கற்பக தருவாகவும் அட்சய பாத்திரமாகவும் உள்ள இவ் பனைகளை மீளவும் நடவேண்டிய தேவை உள்ளது. இந்த 5000 பனை மரங்களை நடும் திட்டம் இம் மாதம் முழுவதும் இடம்பெறும் எனக் குறிப்பிட்டார்.
வட மாகாண சபையின் வேண்டுகோளின்பேரில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் இவ் கார்த்திகை மாதத்தில் 5000 பனம் விதைகளை நடும் திட்டத்தினை கடந்த 08.11.2014 சனிக்கிழமை அன்றுகாலை வலி மேற்கு பிரதேசத்தின் வட்டுக்கோட்டை கொத்தந்துறை மயானப்பகுதியில் ஆரம்பித்து வைத்தார். வடமாகாண விவசாய, கால்நடை மற்றும் சுற்றுப்புற சூழல் அமைச்சர் கௌரவ. பொ.ஐங்கரநேசன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு இந்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இவ் நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் வட்டுக்கோட்டைப் பிரதேச மக்கள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர். இதன்படி குறித்த தினத்தில் மேற்படி மயானப் பகுதியில் 1500 பனம் விதைகள் நாட்டப்பட்டது. இத் திட்டம் தொடர்பாக வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் குறிப்பிடுகையில் கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட இடப் பெயர்வுகள் மற்றும் யுத்தங்களால் எமது தேசத்தின் அடையாளமான பனை பல அழிக்கப்பட்டு விட்டன. இவ் நிலையில் எமது தேசத்தின் கற்பக தருவாகவும் அட்சய பாத்திரமாகவும் உள்ள இவ் பனைகளை மீளவும் நடவேண்டிய தேவை உள்ளது. இந்த 5000 பனை மரங்களை நடும் திட்டம் இம் மாதம் முழுவதும் இடம்பெறும் எனக் குறிப்பிட்டார்.






