Header image alt text

இலங்கை-இந்தியாவுக்கு இடையில் 4 ஒப்பந்தங்கள் கைச்சாத்து-

modi meetings.இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 4 ஒப்பந்தங்கள் இன்று கைச்சாத்திடப்பட்டன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழுவினருக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளை அடுத்தே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. இராஜதந்திர மற்றும் அதிகாரிகள் பயணிக்கும்போது விசா இன்றி பயணிப்பதற்கான ஒப்பந்தம், சுங்க நடவடிக்கைகளின் போது இருநாடுகளுக்கும் இடையில் உதவி செய்துகொள்வதற்கான ஒப்பந்தம், இளைஞர் முன்னேற்றத்துக்கான ஒப்பந்தம் மற்றும் ரவிநாத் தாகூர் மன்றத்தை ருகுணு பல்கலைக்கழகத்தில் நிறுவுவதற்கான ஒப்பந்தம் ஆகியனவே இன்று கைச்சாத்திடப்பட்டன.

ஜெயக்குமாரி விடுதலை செய்யப்பட்டமைக்கு அமெரிக்கா வரவேற்பு-

americaதடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்ட ஜெயக்குமாரி பாலேந்திரனின் விடுதலையை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இது தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களப் பேச்சாளர் ஜென் பஸ்கி நேற்று தெரிவித்துள்ளதாவது, தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரியும் ஏனைய எட்டுபேரும் இந்த வாரத்தில் விடுதலை செய்யப்பட்டனர். ஜெயக்குமாரியின் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதை நாம் விளங்கிக் கொண்டுள்ளோம். இலங்கையில் தடுப்பு காவலில் உள்ள ஏனையோரையும் சட்டரீதியில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை நாம் ஊக்குவிக்கின்றோம். மனித உரிமை மற்றும் அடிப்படை சுதந்திரத்தினை அனைத்து இலங்கையர்களும் பெறக்கூடிய வகையில் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்வதை தாம் பாராட்டுகின்றோம் என்று தெரிவித்துள்ளார். புலிகளின் முன்னாள் போராளி என்று கூறப்படும் கோபி என்பவருக்கு புகலிடம் வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரி பாலேந்திரன், 10ஆம் திகதி நிபந்தனைகளுடனான பிணையில் விடுவிக்கப்பட்டார். இதேவேளை, ஜெயக்குமாரியுடன் கைதுசெய்யப்பட்ட பத்மாவதி மகாலிங்கம் உள்ளிட்ட இன்னும் 8பேருக்கும், சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கு அமைவாக கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டது.

விபூசிகாவை விடுவிப்பதில் சிக்கல் உள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவிப்பு-

porvikaபிணையில் விடுவிக்கப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரியை நம்பி, அவரது மகள் விபூசிகாவை சிறுவர் இல்லத்திலிருந்து வெளியில் எடுப்பதால், எதிர்காலத்தில் சிறுமி பாதிக்கப்படலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக ஜெயக்குமாரி சார்பாக நேற்று நீதிமன்றத்தில் வாதாடிய சட்டத்தரணிகளில் ஒருவர் கூறினார். புலிகளின் முன்னாள் போராளி என்று கூறப்படும் கோபி என்பவருக்கு புகலிடம் வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை (10) பிணையில் விடுவிக்கப்பட்ட ஜெயக்குமாரி, இன்று கிளிநொச்சிக்கு செல்கிறார். இந்நிலையில், அவரது மகள் விபூசிகாவை மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் இருந்து விடுவித்து தாயாருடன் இணைப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் சட்டத்தரணிகள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தர்கள், வியாழக்கிழமை (12) மாலை கூடி ஆராய்ந்தனர். ஜெயக்குமாரி விடுதலையாகவில்லை. பிணையில் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் மீண்டும் கைது செய்யப்பட முடியும் என்ற நிலையுள்ளது. அவசரப்பட்டு சிறுமியை சிறுவர் இல்லத்திலிருந்து விடுவித்து, அந்தச் சிறுமியை நடுத்தெருவில் விடவேண்டிய நிலையொன்று உருவாகும். இதனால் அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு செயற்படவேண்டியுள்ளதாக அந்த சட்டத்தரணி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெற்றோலிய உப மையம் அமைக்க இந்தியா உதவும்-இந்தியப் பிரதமர்-

modi2Mode in Srilankaதிருகோணமலையில் பெற்றோலிய உப மையத்தை அமைப்பதற்கான உதவிகளை செய்வதற்கு இந்தியா தயார் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று அதிகாலை இலங்கை வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழுவினருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின்போதே இந்தியப் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதேவேளை ஜனாதிபதி செயலக முன்றலில் இடம்பெற்ற வரவேற்று வைபவத்தைத் தொடர்ந்து மேற்படி சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதேவேளை இன்று அதிகாலையில் இலங்கையை வந்தடைந்த இந்தியப் பிரதமரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வரவேற்றிருந்தார். தொடர்ந்து இந்திய பிரதமருக்கு, காலி முகத்திடலில் வைத்தும் 19 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டிருந்தது. அவருக்கு கடற்படையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து குதிரைப்படை சகிதம் ஜனாதிபதி செயலகத்துக்கு அவர் அழைத்துவரப்பட்டார். அங்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.

பிரித்தானியா செல்ல முற்பட்ட இளைஞர்கள் கைது-

பிரித்தானியாவுக்கு செல்வதற்கு முற்பட்ட மூன்று தமிழ் இளைஞர்கள் நேற்றையதினம் )12.03.2015) வியாழக்கிழமை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போலியான வீசாவைக் கொண்டு அவர்கள் பிரித்தானியா செல்வதற்கு முற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட மூவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

வவுனியாவில் வீட்டுத்திட்டம் கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம்-(படங்கள் இணைப்பு)

IMG_7521வவுனியாவில் வழங்கப்பட்ட இந்திய வீட்டுத் திட்டத்தில் முறைகேடுகள் இருப்பதாக தெரிவித்தும் யுத்தத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கக் கோரியும் ஆர்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளது. நேற்று (11.03.2015)புதன்கிழமை காலை மீள்குடியேறியோர் நலன்பேணும் அமைப்பு மற்றும் வவுனியா பிரஜைகள் குழு ஆகியோரின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில் ஒன்றுகூடிய வீட்டுத்திட்டம் இன்றி பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தமக்கு வீட்டுத்திட்டம் வழங்கக் கோரியும், வீட்டுத்திட்ட முறைகேடுகள் தொடர்பாக கவனம் செலுத்துமாறு கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து ஏ9 வீதி வழியாக ஊர்வலமாக சென்று மாவட்ட அரசாங்க அதிபர் எம்.கே.பந்துல ஹரிச்சந்திரவிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர். Read more

வலி மேற்கில் எழுச்சியுடன் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினம்-(படங்கள் இணைப்பு)

m00கடந்த 08.03.2015 அன்று வலி மேற்கு பிரதேச சபையில் மிகுந்த எழுச்சியுடன் சர்வதேச மகளிர் தினம். இடம்பெற்றது. குறித்த நிகழ்வானது வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது தலைமையில் காலை 10.00 மணியளவில் வலிமேற்கு பிரதேச சபை கலாசசர மண்பத்தில் வேள்ட் விசன் நிறுவன அனுசரணையுடன் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் விருந்தினர்களாக சங்கானை பிரதேசசெயலக உதவிப் பிரதேசசெயலர் திருமதி. கிருஸ்ணவதனா செந்தூரன், வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி திருமதி. றதினி காந்தநேசன், சங்கானைப் பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளர் செல்வி. சாந்தா மரியாம்பிள்ளை, நல்லூர் பிரதேச சபையின் உப தவிசாளர் திருமதி. கோமதி ரவிதாஸ், சமூகசேவகியும் சமாதான நீதவானுமாகிய திருமதி. சிவசுப்பிரமணியம் புனிதவதி, வலிமேற்கு பிரதேசத்தின் சிரேஸ்ட முன்பள்ளி ஆசிரியர் செல்வி. லீலாவதி மாரிமுத்து, பிரபல சட்டத்தரணியும் நொத்தரிசும் ஆகிய செல்வி. சாருஜா சிவநேசன் ஆகியோர் கலந்து சிறப்பித்துக் கொண்டனர் Read more

நிதி மோசடி தொடர்பில் சரண குணவர்த்தன கைது-

விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தன கைது செய்யப்பட்டுள்ளார்.. 96 இலட்சம் ரூபா நிதி மோசடி மற்றும் நம்பிக்கையை மீறியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமாக ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக பாராளுமனற உறுப்பினர் சரண குணவர்தான குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். விசாரணைகளின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யபட்டுள்ளதுடன் அவரை அத்தனகல்ல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான இரும்பு மோசடி சம்பவங்கள் தொடர்பில் அவருக்கு எதிராக செய்யப்பட்டிருந்த முறைப்பாடு தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு, நேற்றையதினம் சமுகமளிக்குமாறு அவர் அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர், நேற்று சமுகமளிக்கவில்லை என்பதுடன் இன்றையதினம் சமூகமளித்திருந்தார்.

ஆதாரங்கள் உறுதியானால் கோட்டாபயவை கைதுசெய்ய வேண்டிவரும்-விக்கிரமபாகு-

எவன்காட் நிறுவன சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைதுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று கூடிய தேசிய நிறைவேற்று சபையில் பேசப்பட்டதாக சபையின் உறுப்பினர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், நிறைவேற்று சபை கூட்டத்தில் எவன்காட் நிறுவனம் குறித்து பேசப்பட்டது. அது மிகவும் கடுமையான அமைப்பு. சர்வதேச அளவில் பல செயற்பாடுகளை செய்து நிதி சேகரித்துள்ளது. ஆனால் அந்த பணத்திற்கு என்ன நடந்தது என்று சரியாகக் கூறப்படவில்லை. இவ்வாறான அமைப்பு ஒன்றை ஏற்படுத்தியது எப்படி? எந்த அடிப்படையில் என்றும் இன்னும் தெளிவில்லை. இராணுவத்தினரை எடுத்து இவ்வாறானதொரு இராணுவ அமைப்பை ஏற்படுத்தி சர்வதேச தர செயற்பாடுகளை செய்தது எப்படி என்று தெளிவில்லை. இது குறித்து விசேட கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். கோட்டாபய ராஜபக்ஷதான் இதில் குற்றவாளியாக இருப்பார். ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டால் கோட்டாபயவை கைது செய்ய வேண்டிவரும் என்பது குறித்து இங்கு பேசப்பட்டது என விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் என அறிவிக்குமாறு திஸ்ஸ கோரிக்கை-

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலரும், பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க, கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டமைக்கு எதிராக அவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொதுச் செயலர் கபீர் ஹாசிம் ஆகியோரும், செயற்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். போலி ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டில் தாம் விளக்கமறியலில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டமைக்கான கடிதம் தமக்கு கிடைத்ததாக திஸ்ஸ அத்தநாயக்க தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இதுதொடர்பிலான விடயங்களை தெளிவுபடுத்துதற்கு தமக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் எனவே, இவ்விடயத்தில் கட்சி எடுத்த தீர்மானத்தை இரத்துச்செய்யுமாறும், தாம் தொடர்ந்தும் ஐ.தே.கட்சியின் உறுப்பினர் என அறிவிக்குமாறும் தனது மனுவின் ஊடாக திஸ்ஸ அத்தநாயக்க நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் எதிர்வரும் 19ஆம் திகதி மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது.

தேர்தல் முறைமை திருத்தப்பட வேண்டும்-எதிர்க்கட்சித் தலைவர்-

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ரத்து செய்யப்படுவதுடன், தேர்தல் முறைமையும் திருத்தப்பட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் நிமால ;சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பில் வேட்பாளர்களை தெரிவு செய்யும்போது, அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய எட்டு அறிவுறுத்தல்கள் அடங்கிய “மார்ச் 12 பிரடனம்” இன்று பெப்ரல் அமைப்பினால் வெளியிடப்பட்டது. கொழும்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய நிமால் சிறிபால டி சில்வா, தேர்தல் முறையில் மாற்றம் செய்யப்பட்டதன் பின்னரே தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டிருந்தார். அவர் உரையாற்றும்போது, தாம் தற்போதும் தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த அடிப்படை இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதாக கூறினார். அதேநேரம் தேர்தலுக்காக வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படும்போது, ஒழுக்க விதிகளை பின்பற்றினால், நாடாளுமன்றம் சுத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளார். தற்போது நாடாளுமன்றத்தில் உள்ளவர்கள் பலருக்கு எதிராக மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றமையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை இங்கு குறிப்பிடக்கூடிய ஒன்றாகும்.

கிழக்கு முதலமைச்சர் மீது குற்றச்சாட்டு-

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் ஹமட் உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸ், தாம் உள்ளிட்ட முன்னாள் மாகாண அமைச்சர்களை ஏமாற்றி இருப்பதாக, முன்னாள் அமைச்சர் விமலவீர திசாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 14 உறுப்பினர்கள் ஆதரவளித்திருந்தனர். இதற்கு, மாகாண முதலமைச்சர் பதவி மாத்திரமே மாற்றப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிடம் இருந்து 3 அமைச்சுப் பதவிகளில் மாற்றம் ஏற்படாது என்றும் முஸ்லிம் காங்கிரஸ் தங்களிடம் உறுதியவழங்கிதாக அவர் கூறியுள்ளார். எனினும் ஆட்சி அமைத்த பின்னர், இந்த இணக்கப்பாட்டை புறந்தள்ளி தங்களை ஏமாற்றி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மத்திய மாகாண சபைக்கும் புதிய முதலமைச்சர்-

மத்திய மாகாண முதலமைச்சராக திலின பண்டார தென்னக்கோனை நியமிக்குமாறு கோரி மாகாண சபையின் 30 ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளுநரிடம் சத்திய கடதாசி கையளித்துள்ளனர். சத்திய கடதாசி வழங்கிய உறுப்பினர்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களும் அடங்குவதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் திலின பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். சத்திய கடதாசிகளை கையளிக்கும்போது மத்திய மாகாண எதிர்கட்சித் தலைவர் வசந்த அலுவிஹாரேயும் பிரசன்னமாகியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய மாகாண சபையில் மொத்தமாக 58 உறுப்பினர்கள் உள்ளதுடன் மாகாண முதலமைச்சராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் சரத் ஏக்கநாயக்க பதவி வகித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் இவ்விடயம் குறித்து ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்வதாக மத்திய மாகாண ஆளுநர் சுரங்கனி எல்லாவெல கூறியுள்ளார்.

கூடுதல் அதிகாரப் பகிர்வு குறித்து வடக்கு முதல்வர் கருத்து-

13ம் திருத்தச் சட்டத்திற்கு பதிலாக, மிகச்சிறந்த அதிகாரப் பகிர்வு முறைமை ஒன்றை முன்வைக்க வேண்டிய காலம் வந்திருப்பதாக, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். தமிழ் மக்களுக்கு 13ம் திருத்தச் சட்டம் இறுதி தீர்வாக அமையாது. இந்த நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் வகையிலான அதிகாரப் பகிர்வு திட்டம் ஒன்று குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும். இலங்கைக்கு விஜயம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் போது, இந்த விடயத்தை அவரது கவனத்துக்கு கொண்டுவரவிருப்பதாகவும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

சஜின் வாஸ் குணவர்தனவிடம் விசாரணை-

நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மோசடியான முறையில் சொத்துக்களை சேகரித்ததாக அவர்மீது முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது. இதன் பொருட்டு அவர் நேற்றைய தினமே அழைக்கப்பட்டிருந்தார். எனினும் சுகவீனம் காரணமாக அவர் சமுகமளித்திருக்கவில்லை. இதற்கு முன்னர் கடந்த 3ம் திகதியும் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். அதேநேரம், பெப்ரவரி மாதம் 25ம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தது.

பொலனறுவை மாவட்டத்தில் நிலஅதிர்வு-

பொலனறுவை மாவட்டத்தின் பல பிரதேசங்களில், 3 விநாடிகளுக்கு சிறியளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கிரிதலே, பகமுன, கதுருவெல மற்றும் தியபெதும ஆகிய பிரதேசங்களிலே இந்த அதிர்வு ஏற்பட்டதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. மேல் வானிலிருந்து அதிக வெளிச்சத்துடன் பூமியை நோக்கி வந்த மர்ம பொருள் காரணமாக, அதிர்வு ஏற்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சிறு நில அதிர்வு தொடர்பில் ஆராய்வுகள் முன்னெடுக்கப்படுவதாக புவிசரிதவியல் அளவை மற்றும் சுங்கப் பணியகம் அறிவித்துள்ளது. இந்த சிறு நில அதிர்வு நேற்றிரவு 8.31க்கு இடம்பெற்றது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இந்திய மீனவர்கள் 86 பேரையும் விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு-

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 86 பேரையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக செயலகம் அறிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனைப் போன்று இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதி ஊடக செயலகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக ருவான் குணசேகர நியமனம்-

புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை பொலிஸ் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கொழும்பு வடக்கு பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் இன்றையதினம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது,

seddikulzm seddikulzm4சூடுவெந்தபுலவு கிராமத்தில் இந்தியன் வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவு தொடர்பான கூட்டத்தில் பிரதேச செயலாளர், கிராம சேவையாளரை அவதூறாக பேசியமை மற்றும் அரச ஊழியர்களை தாக்க முற்பட்டமை போன்றவற்றினை கண்டித்து , வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலக ஊழியர்கள்  அடையாள பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடுவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“வன்முறையை கையில் எடுக்காதீர்” , “மக்கள் சேவைக்கு மதிப்பளியுங்கள்” , “அரச ஊழியர் மீது வன்முறை வேண்டாம்” , “நியாயமற்ற கோரிக்கையை நிறைவேற்ற நிர்ப்பந்திக்காதீர்” , “அரச ஊழியர் மீது அவதூறு தெரிவிக்காதீர்” , “அரச ஊழியர் மீது அழுத்தங்களை பிரயோகிக்காதீர்” போன்ற பல பதாதைகளை தாங்கிய வண்ணம் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வலிமேற்கில் மகளிர் எழுச்சி வாரத்தின் ஏழாம்நாள் நிகழ்வுகள்-

makleerthinam02makleerthinam01makleerthinam10makleerthinam11makleerthinam12யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளார் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்ட மகளிர் எழுச்சி வாரத்தின் ஏழாம் நாள் நிகழ்வான makleerthinam13பாடசாலை மாணவிகளை வலுவூட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் வலி மேற்கு பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் நடை பெற்றது. இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் நிகழ்வுகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைததது நிகழ்வுகளில் மாணவர்களை ஊக்குவித்தார். பாரம்பரியமான போலம் போடுதல் மற்றும் பூமாலை கட்டுதல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன. இவ் நிகழ்வுகளின் போது பாடசாலை மாணவர்களும் கலந்து சிறப்பித்தமை இங்கு குறிப்பிடக்கூடிய ஒன்றாகும்.

இலங்கையில் நல்லிணக்கம், ஒத்துழைப்பு ஏற்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது-ஐ.நா-சபை-

jefry beltmanகடந்த தேர்தலுக்குப் பின் இலங்கையில் ஜனநாயகம், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் நம்பகத்தன்மையை ஏற்படுத்த வரலாற்று வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளதென ஐ.நா சபை தெரிவித்துள்ளது. சர்வதேசத்தின் ஆதரவுடன் இலங்கை மக்கள் நன்மை அடையக்ககூடிய அளவு சந்தர்ப்பம் தற்போது அமைந்துள்ளதென ஐ.நா செயலாளர் நாயகத்தின் அரசியல் துறை பொறுப்பாளர் ஜெப்ரி பெல்ட்மென் தெரிவித்துள்ளார். ஐ.நா சபை தலைமையகத்தில் இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தனது இலங்கை விஜயம் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கடந்த வாரமளவில் இலங்கைக்கு விஜயம் செய்த ஜெப்ரி பெல்ட்மென், இலங்கை ஜனாதிபதி, பிரதமர், வெளியுறவு அமைச்சர், தமிழ்க் கூட்டமைப்பு தலைவர்கள் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களையும் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்திருந்தார். யுத்தக் குற்றம் குறித்து இலங்கையரசு சர்வதேச தரம்வாய்ந்த உள்நாட்டு விசாரணை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இலங்கையில் நல்லிணக்க ஒத்துழைப்பு குறித்து புதிய நம்பிக்கை பிறந்துள்ளதாக ஜெப்ரி பெல்ட்மென் நேற்றைய ஊடக சந்திப்பில கூறியுள்ளார். ஆனாலும் இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலை தொடர்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவ குறைப்பு, காணி மீள ஒப்படைப்பு போன்ற விடயங்களில் இலங்கையரசுக்கு ஆலோசனை வழங்கியதாக ஜெப்ரி பெல்ட்மென் கூறியுள்ளார். இலங்கையில் வடக்கு பிரச்சினை தீர்வுக்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஐ.நா சபை உதவத் தயார் என்றும் அது இலங்கை மக்களுக்கு நன்மையாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் சுஷ்மாவிடம் வருத்தம் தெரிவிப்பு-

ranil sushmaaதமிழக மீனவர்களை சுட்டுக்கொல்வோம் என்று கூறியதற்கு இலங்கை பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறினார். தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கசெல்லும்போது அடிக்கடி இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுகிறார்கள். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ´எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்ல சட்டம் அனுமதி அளிக்கிறது´ என்று கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு, தமிழக அரசியல் கட்சி தலைவர்களும், மீனவர் அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், டெல்லியில் மக்களவை உறுப்பினர்கள் இந்த பிரச்சினையை நேற்று எழுப்பினர். அப்போது, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து பேசும்போது, ´´தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும். இரு நாடுகளும் அடுத்தவரது மீனவர்களை சுட்டுக்கொல்வது உரிய தீர்வு அல்ல. கடந்த வாரம் இலங்கை சென்றிருந்த நான், அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தபோது, அவரது கருத்துக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தேன். அவர், தமிழக மீனவர்களையும், கேரளாவில் மீனவர்களை சுட்டுக்கொன்று கைதுசெய்யப்பட்ட இத்தாலி கப்பல் மாலுமிகளையும் ஒப்பிட்டு இருப்பது சரியல்ல என்றும் அவரிடம் கூறினேன். அதற்கு, தான் உண்மை நிலவரம் தெரியாமல் பேசி விட்டதாகவும், அப்படி பேசி இருக்கக்கூடாது என்றும் ரணில் விக்ரமசிங்க என்னிடம் வருத்தம் தெரிவித்தார். மேலும், ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மாறுவது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். பணம் ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக, சிறப்பு திட்டம் ஒன்றை விரைவில் மத்திய அரசு உருவாக்கும். ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மாறும்வரை, இந்தப் பிரச்சினை மனிதாபிமானத்துடன் அணுகப்பட வேண்டும்” என்றார்.

 சஜின் வாஸ், பிரியந் பந்துவிக்ரம ஆகியோரது மனைவியரிடம் வாக்குமூலம்-

வெளிவிவகார அமைச்சின் முன்னாள் கண்காணிப்பு எம்.பி.யும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ் குணவர்தன, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு இன்று புதன்கிழமை சமூகமளிக்கவில்லை சுகயீனம் காரணமாக தன்னால் இன்று சமூகமளிக்க முடியாது என்று அவர், அறிவித்துள்ளார் என்று ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, அவருடைய மனைவியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கை துறைமுக அதிகார சபையின் முன்னாள் தலைவர் பிரியந்த பந்துவிக்ரமவின் மனைவியிடமும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று வாக்குமூலம் பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக முறைப்பாடு-

arjuna mahendranமத்திய வங்கி ஒப்பந்த பத்திர மோசடி குறித்து லஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த அமரவீர மற்றும் ஜகத் புஸ்பகுமார ஆகியோர் இணைந்து இந்த முறைப்பாட்டை இன்று செய்துள்ளனர். மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் தனது மருமகனின் நிறுவனத்திற்கு லாபமீட்டும் வகையில் மத்திய வங்கி கடன் தொடர்பில் ஒப்பந்த பத்திரம் கைச்சாத்திட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதியின் பணிப்பின்பேரில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூவர் அடங்கிய விசாரணை குழுவொன்றை அமைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கொழும்புக்கான போக்குவரத்தில் மாற்றம்-

கொழும்பின் சில பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் எதிர்வரும் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என பொலிஸ் போக்குவரத்துப்பிரிவு அறிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தையொட்டியே இந்த மாற்றங்கள் செய்யப்படவிருக்கின்றன. “இவ்விரு நாட்களிலும் ஒரு குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சி நிரலை இலகுபடுத்தும் வகையிலேயே இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்” என பதில் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

திஸ்ஸவுக்கு எதிரான ஆவணங்கள் சட்டமா அதிபரிடம்-

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்கவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஆவணங்கள், சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்று குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸார், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி., கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, போலி ஆவணங்களை தயாரித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த போலி ஆவணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஆவணங்களே சட்டமா அதிபருக்கு கையளிக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டாளரின் இந்த விசாரணை ஜூன் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மடுவுக்கான பரீட்சாத்த தொடரூந்து சேவை-

madu trainதலைமன்னாருக்கான பரீட்சார்த்த தொடரூந்து சேவை இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. மதவாச்சியில் இருந்து மடுவிற்கு வந்த தொடருந்து, அங்கிருந்து தலைமன்னாருக்கு பயணித்துள்ளது. சுமார் 26 வருடங்களுக்கு பின்னர் இவ்வாறு தீவு பகுதிக்கு தொடரூந்து சேவை இடம்பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பித்தக்கது. இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள இந்திய பிரதமர் எதிர்வரும் 14ஆம் திகதி மன்னார் மடுவிற்கான தொடரூந்து சேவையை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்க உள்ளார். அதனை முன்னிட்டே இன்று இவ்வாறு மடுவிற்கான பரீட்சாத்த தொடரூந்து சேவை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் அதிகாரிகள் 34 பேருக்கு இடமாற்றம்-

police ...சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மூவர், பொலிஸ் அதிகாரிகள் மூவர், உதவி பொலிஸ் அதிகாரிகள் 21 பேர் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் எழுவர் அடங்களாக 34 பேருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது. சேவைகளின் தேவைகள் என்ற அடிப்படையிலேயே இந்த பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளதாகவும் இதற்கு பொதுமக்கள் சமாதானம், கிறிஸ்தவ விவகார மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளரினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தலைமை அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பு திருத்தம்: அவசர சட்டமூலத்தை சுதந்திரக்கட்சி எதிர்க்கும்-நிமல்-

அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் அவசர சட்டமூலமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமாயின் அதனை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கடுமையாக எதிர்க்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றுமுற்பகல் நடைபெற்றிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா ஜீனியஸ் பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா- (படங்கள் இணைப்பு)

IMG_7365IMG_7348வவுனியா பண்டாரிகுளத்தில் அமைந்துள்ள ஜீனியஸ் பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா நேற்று (09.03.2015) திங்கட்கிழமை மாலை 02.00 மணியளவில் திருமதி. கலைவாணி மனோகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவசக்தி ஆனந்தன் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தாலும் தவிர்க்க முடியாத சில காரணங்களினால் அவர் சமூகமளிக்க முடியவில்லை. சிறப்பு விருந்தினர்களாக புளொட் முக்கியஸ்தரும். வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதாவுமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்), உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.கோ.தர்மபாலன் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக Read more

 வலி மேற்கில் மகளீர் எழுச்சிவார ஆறாம்நாள் நிகழ்வுகள்-(படங்கள் இணைப்பு)

P1020031வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் 2015ம் ஆண்டிற்குரிய சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் மகளிர் எழுச்சி வாரத்தின் 6ம்நாள் நிகழ்வுகள் வலி மேற்கு பிரதேச சபையின் கலாச்சர மண்டபத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வானது வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் தலைமையில் இம்பெற்றது. .இவ் தினத்தினுடைய கருப்பொருளாக பெண்கள் தொடர்பான நோய்களும் உளத்தாக்கங்களும் எனும் தலைப்பில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட சமூதாய மருத்துவத்துறைத் தலைவர் வைததிய கலாநிதி எ.சுரேந்திரகுமார், யாழ் பல்கலைக்கழக மருத்துவத்துறை விரிவுரையாளர் கலாநிதி அ.கண்ணதாசன் வலி மேற்கு பிரதேச பொதுச் சுகாதார பரிசகர்களான கிருபன் மற்றும் தபேசன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். Read more

ஜெயகுமாரி பாலேந்திரன் பிணையில் விடுதலை-

rajakumariபுலிகளின் முன்னாள் போராளி என்று கூறப்படும் கோபி என்பவருக்கு புகலிடம் வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரி பாலேந்திரன், இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பிணை வழங்குமாறு கடந்த 6ஆம் திகதியன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை மார்ச் 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் பிணை மனுத் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிக்கையை எழுத்துமூலம் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அந்த மனு மீதான சட்டமா அதிபரின் அறிக்கை பரிசீலனைக்கு உட்படுத்தியபோதே ஜெயகுமாரியை நீதவான் பிணையில் விடுவித்துள்ளார். பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட அவர், 362 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்பில் இருக்கின்ற இந்த சந்தேக நபருக்கு பிணை வழங்குவது பற்றிய அவரின் கருத்தை எழுத்து வடிவில் சமர்ப்பிக்குமாறு நீதவான், சட்டமா அதிபருக்கு கடந்த 6ஆம் திகதி பணித்திருந்தார். பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் கோபி என்கிற புலிகளின் புலனாய்வுப் பிரிவை சேர்ந்தவருக்கு புகலிடம் கொடுத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் ஜெயக்குமாரி கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில் புலிகள் இயக்கத்திற்கு புத்துயிரளிக்க முயற்சித்தமை மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் கைதாகி, தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 சந்தேகநபர்களில் 8 பேருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

 மனிதவுரிமை மீறல்கள் குறித்த பொறுப்பு கூறலை டேவிட் கெமரூன் வலியுறுத்துவார்-

david_cameronஇலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கைக்கு வலியுறுத்தவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகளின் ஆண்டு விழா நிகழ்வில் கலந்துகொள்ளும் பொருட்டு பிரிட்டனுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றையதினம் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தாம் இந்த விடயத்தில் ஊக்கப்படுத்தவுள்ளதாக டேவிட் கெமரூன் குறிப்பிட்டுள்ளார். 2013ஆம் ஆண்டு இலங்கை வந்திருந்த போது வடக்கில் தாம் சந்தித்த மக்களின் கஷ்டங்களை மறக்க முடியாத நிலையில் உள்ளதாகவும், அதில் மாற்றம் ஏற்படவேண்டும் என டேவிட் கெமரூன் சுட்டிக்காட்டியுள்ளார். இப் பேச்சுவார்த்தையையடுத்து இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு துறைகள் தொடர்பிலும் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக தெரியவருகிறது.

கொள்கை திட்டமிடல்குழு தலைவியாக சந்திரிகா நியமனம்

chandrikaஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கை மற்றும் திட்டமிடல் குழுவின் தலைவியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், அக்குழுவின் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் என சுதந்திரக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ்.எம்.ஆரியசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சீர்த்திருத்தி புதிய திட்டமிடலின் கீழ் செயற்படுத்துவதற்காகவே இந்த கொள்கை மற்றும் திட்டமிடல் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் தேர்தல்களின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் இக்குழு ஆராயும் என்றும் எஸ்.எம்.ஆரியசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை வழக்கு ஒத்திவைப்பு-

காலி துறைமுகத்தில் வைத்து கைப்பற்றப்பட்ட மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை தொடர்பான வழக்கு மார்ச் மாதம் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் கடந்த 2ஆம் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது அவர், இந்த வழக்கை நேற்று 9ஆம் திகதி வரையிலும் ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில், அவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது வழக்கு விசாரணையை மார்ச் 12ஆம் திகதி வரையும் ஒத்திவைத்தார். இதேவேளை, காலி துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டிருந்த மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை விவகாரம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, கடற்படை முன்னாள் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க, மஞ்சுள குமார யாப்பா மற்றும் கருணாரத்ன பண்டார ஆகிய நால்வரும் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு நீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச சட்டத்தை மீறியதாக அவுஸ்திரேலியாமீது குற்றச்சாட்டு-

அகதிகளுக்கான சர்வதேச உடன்படிக்கையையும், சட்டத்தையும் அவுஸ்திரேலியா மீறியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் புதிய அறிக்கையில் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. அகதிகள் நடத்தப்படும் விதம் சித்திரவதைகளுக்கு ஒப்பான முறையில் அமைந்திருப்பதாகவும், அது சர்வதேச சட்டத்தை மீறும் செயற்பாடாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் அவுஸ்திரேலியா மனித உரிமைகள் அமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கை வெளிவந்து ஒரு மாதத்திலேயே ஐ.நாவின் புதிய அறிக்கை வெளியாகியுள்ளது. இதேவேளை, அடைக்கலம் கோரி வருபவர்களை அவுஸ்திரேலியா நடத்தும் விதம் குறித்து ஐ.நாவின் சித்திரவதைகளுக்கான சிறப்புத் தூதுவர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தம்மை அதிருப்திக்கு உள்ளாக்கியிருப்பதாக அவுஸ்திரேலிய பிரதமர் டொனி அபொட் தெரிவித்துள்ளார். குறிப்பாக அவுஸ்திரேலியாவின் நாட்டுக்கு வெளியேயான தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கான தடுப்பு முகாம்களில் இருப்பவர்கள் நடத்தப்படும் விதம், சித்திரவதை குறித்த சர்வதேச சட்டங்களை மீறும் வகையில் இருப்பதாக ஐ.நா சபை குறிப்பிட்டுள்ளது. மனுஸ் தீவுகளில் உள்ள தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கான தடுப்பு முகாம்களின் நிலை குறித்து மனித உரிமைக் குழுக்களும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அறிக்கையில், 60 நாடுகளில் இடம்பெறும் சித்திரவதைகள் குறித்து சிறப்புத் தூதுவர் ஜோன் மெண்டஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். போதுமான அளவுக்க தடுப்பு முகாம் வசதிகளை மேற்கொள்ளாமை, சிறார்களை தடுத்து வைத்தல், மனுஸ் தீவுகளில் வன்செயல்கள், மனித நேயமற்ற வகையிலான நடத்தைகளை தடுக்க தவறியமை ஆகியவை குறித்து ஆஸி அரசுமீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த அறிக்கையை நிராகரித்துள்ளது.

 சீன நிறுவனங்களுக்கு முன்னுரிமை கிடையாது-நிதியமைச்சர்-

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்டதைப் போன்று முன்னுரிமைச் சலுகைகள், சீன நிறுவனங்களுக்கு இனிமேல் வழங்கப்படாது என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக தெரிவித்துள்ளார். இது குறித்து ´சவுத் சைனா மார்னிங் போஸ்ட்´ என்ற ஹாங்காங் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘கொழும்புத் துறைமுக நகர திட்டத்தை மேற்கொள்ளும் சீன நிறுவனத்திடம், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கம் குறித்த எந்த பதிவுகளோ, சாத்திய ஆய்வு குறித்த அறிக்கைகளோ, அரசாங்கம் அங்கீகாரம் அளித்தமைக்கான ஆவணங்களோ இல்லை. இவற்றை அவர்கள் செய்யத் தவறியதால் தான், ஏதாவது ஆவணங்கள் இருந்தால் அதைச் சமர்ப்பியுங்கள் என்று அவர்களிடம் நாங்கள் கேட்டிருக்கிறோம். இந்த நிறுவனம் ஏனைய நாடுகளில் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. நீங்கள் இந்தியப் பெருங்கடலில் குதித்து, அதை நிரவ முடியாது. இதுபோன்ற திட்டங்கள் குறித்து நாங்கள் சீனாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது. சீனாவுடனான எமது உறவுகள் 1950களை நோக்கிப் பின்சென்றுள்ளது. வேறெந்த முதலீடுகளையும் விட சீனாவின் முதலீடு நல்லது. ஆனால் அதற்காக அவர்களுக்கு முன்னுரிமை வசதிகளை அளிக்க முடியாது. முன்னைய அரசாங்கம் வழங்கியது போன்ற சலுகைகளைக் கோரிக் கொண்டு நீங்கள் இங்கு வரமுடியாது. இவை சீனாவின் முதலீடுகள் இல்லை. இவை கடன்கள். இவற்றை திருப்பிச் நாங்கள் செலுத்த வேண்டும். எமது அரசாங்கம் இந்த கடன்கள் தொடர்பாக சீனாவுடன் மீளப் பேச முயற்சிக்கிறது. நாங்கள் சீனாவிடம் கேட்பது என்னவென்றால், தயவுசெய்து எமக்கு உதவுங்கள் என்பதைத் தான். புதிய அரசாங்கம் சீனாவை மட்டும் இலக்கு வைத்துச் செயற்படவில்லை. முன்னைய அரசாங்கத்தின் ஊழல்களுக்கு எதிராகப் போராடுவதற்கு சீனா உதவ வேண்டும். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஊழலை ஒழிக்க எதைச் செய்தாரோ, அதையே தான் இலங்கையும் செய்ய முயற்சிக்கிறது. நாம் சீனாவுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், ராஜபக்ஷ ஆட்சியில் ஊழல் உடன்பாடுகளைச் செய்து கொண்ட சீன நிறுவனங்களுக்கு எதிரானவர்கள். அவை வரி செலுத்துவோரின் இரத்தத்தை உறிஞ்சுகின்றன. இங்குள்ள சீன நிறுவனங்களின் செயற்பாடுகளை சீன அரசாங்கம் அறியாமல் இருந்திருக்கக் கூடும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.