Header image alt text

முன்னாள் அமைச்சர்கள், ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் விளக்கம்-

mahinda desapriya (3)தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் விளக்கமளித்துள்ளார். இதன்போது, வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஒரு கட்சியையோ முன்னாள் அமைச்சர்களையோ அடிப்படையாகக் கொண்டு அவ்வாறு முன்னெடுக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அத்துடன், 2015ம் ஆண்டு ஜூன் 30ம் திகதி பொலிஸ் மாஅதிபருடனும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருடனும் தாம் கலந்துரையாடிய பின்னரே பாதுகாப்பு நீக்கம் தொடர்பிலான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். கடந்த தேர்தலில் பேரணிகளைத் தாம் தடுத்தவிதம் தொடர்பில் விளக்கமளித்த தேர்தல்கள் ஆணையாளர், இம்முறை கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் இந்த வார இறுதியில் ஆராய்ந்து பொலிஸ் திணைக்களத்திடம் ஒப்படைக்க எண்ணியுள்ளதாகவும் தெரிவித்தார். ஏதேனும் தவறொன்று இழைக்கப்படும் பட்சத்தில் அது தொடர்பில் தமக்கு முறைப்பாட்டை முன்வைக்காது, பொலிஸ் மாஅதிபரும் தேர்தல்கள் ஆணையாளரும் உறக்கத்திலா உள்ளார்கள் என பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டாம் என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

Read more

கூட்டமைப்பு பலவீனப்பட்டால் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதை அரசு தட்டிக்கழிக்க ஏதுவாகிவிடும்-த.சித்தார்த்தன், பா.கஜதீபன்-

tsயாழ். சுதுமலை மத்திய சனசமூக நிலையம் மற்றும் வாசிகசாலை ஆகியவற்றின் அழைப்பின்பேரில் சுதுமலை மத்திய சனசமூக நிலைய மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கருத்தரங்கொன்று இன்று நடைபெற்றது. இக் கருத்தரங்கில் புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினரும், யாழ் மாவட்ட வேட்பாளருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை உறுப்பினர் திரு. பா.கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள். இங்கு உரையாற்றிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் திரு.பா கஜதீபன் ஆகிய இருவரும், பாராளுமன்றத் தேர்தலிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தினை விளக்கிக் கூறினார்கள். அத்துடன் இன்றிருக்கின்ற நிலையிலே தமிழ் மக்களின் வாக்குகள் பிரிந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலவீனப்பட்டு போகுமானால் வர இருக்கின்ற அரசு மிகவும் இலகுவாகவே தமிழ் மக்களுடைய பிரச்சினையைத் தீர்ப்பதைத் தட்டிக்கழிப்பதற்கு ஏதுவாகிவிடும். எனவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஓர் பலமான அமைப்பாக பாராளுமன்றம் செல்கின்றபோதுதான் சர்வதேசம்கூட தமிழ் மக்கள் தங்களுடைய பிரச்சினையில் தொடர்ந்தும் உறுதியாகவே இருக்கின்றார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அரசுமீது அழுத்தங்களைக் கொடுப்பதற்கு உதவியாக இருக்கும். ஆகவே தமிழ் மக்கள் ஒன்றுபட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டியது மிகமிக அவசியமாகும் என்று வலியுறுத்திக் கூறினார்கள். இத் தேர்தல் பிரசாரக் கருத்தரங்கில் சனசமூக நிலையத்தைச் சேர்ந்த இளைஞர்களும் யுவதிகளும் கலந்துகொண்டிருந்தார்கள்.

ஏழாலை வாழ் இளைஞர்கள் திரு.சித்தார்த்தன் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பு-

ststஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் புளொட் தலைவரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களை இன்று ஏழாலை வாழ் இளைஞர்கள் சந்தித்து பாராளுமன்றத் தேர்தலில் அவருக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் கலந்துரையாடியுள்ளனர். (இதன்போது எடுக்கப்பட்ட படம்)

வீரமக்கள் தின இறுதிநாள் நிகழ்வுகள்-

26V.M-Postr-300x232தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தின 03ம் நாளான இன்றும் வவுனியா கோவில்குளம், புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரன் நினைவில்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. வீரமக்கள் தினமானது கடந்த 13ம்திகதி முதல் நாளை 16ம்திகதி வரையான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம்திகதி முதல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம்திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி வருடாந்தம் அனுஷ்டித்து வருகின்றது. இம்முறை 26ஆவது வீரமக்கள் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. வீரமக்கள் தின இறுதிநாளான நாளை மாலை 4மணியளவில் செயலதிபர் உமாமகேஸ்வரன் இல்லத்தில் மலராஞ்சலி மற்றும் மௌனஅஞ்சலி என்பன இடம்பெறவுள்ளதுடன் அஞ்சலிக் கூட்டமும் இடம்பெறவுள்ளதாக புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவுமான க. சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் அறிவித்துள்ளதுடன், அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் அஞ்சலிக் கூட்டத்தில் பங்குகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுதந்திரக் கட்சி மத்திய செயற்குழு கூட்டத்திற்கு தடை-

SLFPகட்சித் தலைவரின் அனுமதியின்றி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெறுவதற்கு நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது ஜனாதிபதியின் நேற்றைய உரை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக இக்கூட்டம் நடைபெறவிருந்தது. எனினும் ஜனாதிபதி இக்கூட்டத்தை ரத்து செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையிலேயே நீதிமன்றம் மேற்படி கூட்டத்துக்கு தடை விதித்துள்ளது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைகளுக்கான குழுவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாக பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலமையகத்தில் இடம்பெற்ற கூட்டமைப்பில் உள்ள கட்சிகளின் தலைவர்களின் சந்திப்பின்பின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஐரோப்பிய ஒன்றியம்-

european unionஇலங்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலை கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம் வெளியிட்டுள்ளது. இலங்கை விடுத்த கோரிக்கைக்கு அமையவே எதிர்வரும் பொதுத் தேர்தலை கண்காணிக்க தாம் இனங்கியதாக ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரங்களுக்கான உயர் பிரதிநிதியும், ஐரோப்பிய ஆணைக்குழுவின் உபதலைவருமான பெட்ரிகா மொகிஹிரினி குழுவொன்றை நியமித்துள்ளார். கிரிஸ்டினா பிரடா தலைமையிலான இந்த குழுவில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர், தேர்தல் கண்காணிப்பு பணியகத்தின் பிரதானி ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக உபதலைவருமான பெட்ரிகா மொகிஹிரினி தெரிவித்தார். இதன்படி, இலங்கை தேர்தலை கண்காணிப்பதன் பொருட்டு 8 தேர்தல் ஆய்வாளர்கள் மற்றும் 18 நீண்டகால அவதானிப்பாளர்கள் முதற்கட்டமாக இலங்கை வரவுள்ளனர். தேர்தல் நடைபெறவுள்ள காலப்பகுதிக்கு அண்மித்த காலப்பகுதியில் 28 குறுகிய கால அவதானிப்பாளர்களும், தேர்தல் தினத்திலும் ஒரு தொகுதி கண்காணிப்பாளர்களும் இலங்கை வரவுள்ளதாக அவர் கூறினார்.

விருப்பு இலக்கங்கள் நாளை வெளியிடப்படும்-தேர்தல் ஆணையாளர்

mahindaபொதுத் தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளருக்கான விருப்பு இலக்கம் நாளை மதியம் 12 மணிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பான பணிகள் தற்சமயம் விரைவாக இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் பொதுத் தேர்தலின் பொருட்டு 6 ஆயிரத்து 151 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனிடையே, பொதுத் தேர்தல் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தின் அதிகாரிகள் மற்றும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் தேர்தல் கண்காணிப்பு பிரிவு மற்றும் காவல்துறை அதிகாரிகளும் இணைந்திருந்தனர். இதேவேளை கடந்த முறை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியலில் வாய்ப்பு கிடைக்கப்பெற்ற 9 உறுப்பினர்களுக்கு இந்த முறை அந்த வாய்ப்பு கிடைக்காது போயுள்ளது. இந்த பட்டியலில் முன்னாள் பிரதமர்களான டி எம் ஜயரத்ன மற்றும் ரட்ணசிறி விக்ரமநாயக்கவும் உள்ளடங்குகின்றனர். அதுபோல், கடந்த முறை தேசிய பட்டியலில் தெரிவான 10 உறுப்பினர்கள் இந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பொதுத் தேர்தல் தொடர்பில் 195 முறைப்பாடுகள் பதிவு-

election violenceபொதுத் தேர்தல் தொடர்பில் 195 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத நியமனங்கள், பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் குறித்து அதிகபடியாக 96 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதனைத் தவிர தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் காட்சிபடுத்தப்பட்டமை தொடர்பாகவும் தேர்தல்கள் செயலகத்திற்கு 24 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. வாக்காளர்களுக்கு பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டமை தொடர்பில் 23 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அரச சொத்துக்கள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் 22 முறைப்பாடுகளும், அரச ஊழியர்கள் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டமை குறித்து ஆறு முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் அதிகபடியாக 22 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதனைத் தவிர ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 12 முறைப்பாடுகளும், பதுளை மாவட்டத்தில் 10 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இதேவேளை பொதுத் தேர்தலுக்கான உத்தியாகபூர்வ வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் இன்று காலை 9.30 அளவில் ஆரம்பிக்கப்பட்டதாக, அரச அச்சகர் காமினி பொன்சேகா தெரிவித்துள்ளார். சுமார் இரண்டு வாரங்களில் குறித்த வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடையலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

யாழ். நீதிமன்றத் தாக்குதல், முப்பது பேருக்கு விளக்கமறியல்-

courtsயாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கைதுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, 30 சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடிக்குமாறும், யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதான 31 சந்தேகநபர்கள், இன்று யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, பாடசாலை மாணவர் ஒருவர் 5 இலட்சம் ஷரூபா பெறுமதியான 3 சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த சந்தேகநபரை ஞாயிறு தினங்களில் யாழ். பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடவேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏனைய 30 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உதயவாழ்வு நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக ஊன்றுகோல் வழங்கிவைப்பு-(படங்கள் இணைப்பு)

P1060658யாழ். வட்டுக்கோட்டை தழிழரசுக் கட்சி அலுவலகத்தில் உதயவாழ்வு நிகழ்சிக்கூடாக சுழிபுரம் மேற்கு பிரதேசத்தைச் சேர்ந்த திரு பெரியதம்பி குலசிங்கம் என்ற பயனாளிக்கு வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவாகள் கைத்தாங்கி ஊன்று கோல் ஒன்றினை வழங்கி வைத்தார். இதன்போது வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் செயலாளர் திருமதி. சிவலிங்கம் அவர்களும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more

கோப்பாய் பிரதேச இளைஞர் கழகங்களிடையேயான விளையாட்டுப் போட்டி-2015 (படங்கள் இணைப்பு)

SAM_2737யாழ். கோப்பாய் பிரதேச இளைஞர் கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் சம்பியன் வெற்றிக்கிண்ணப் போட்டி 12.07.2015 ஞாயிற்றுக்கிழமை திரு. சயூட்டன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினரும், பாராளுமன்றத் தேர்தலின் யாழ் மாவட்ட வேட்பாளருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும்,

சிறப்பு விருந்தினர்களாக தேசிய இளைஞர் சம்மேளன வடபிராந்திய இயக்குநர் திரு. தவேந்திரன், திரு. சமன் ஜயசிங்க (பொறுப்பதிகாரி, பொலிஸ் நிலையம், அச்சுவேலி), திரு. சண்முகவடிவேலு (இளைஞர் உத்தியோகத்தர், யாழ். மாவட்டம்), திரு. விஜிதரன் (உபதலைவர், இலங்கை இளைஞர் சம்மேளனம்), திரு. அனுஷன் (கிராம உத்தியோகத்தர்), திரு. கோபாலதாஸ் (கிராம உத்தியோகத்தர்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேற்படி இறுதிநாள் சம்பியன் வெற்றிக் கிண்ணப் போட்டிகளாக ஆவரங்கால் கிழக்கு மற்றும் புத்தூர் வடக்கு அணிகளின் பெண்களுக்கான கயிறிழுத்தல் மற்றும் ஆண்களுக்கான உதைபந்தாட்டம் ஆகியன இடம்பெற்றன. மேற்படி கயிறிழுத்தல் மற்றும் உதைபந்தாட்டம் ஆகிய போட்டிகள் இரண்டிலும் ஆவரங்கால் கிழக்கு அணியினர் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தைப் வென்றதுடன், அவர்கள் மாவட்ட ரீதியிலான போட்டிக்கும் தெரிவுசெய்யப்பட்டனர். இவர்களுக்கான பரிசில்களை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்த திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வழங்கிவைத்தார்கள்.

Read more

சங்கரத்தை சின்னம்மா வித்தியாசாலை மாணவர்களுக்கு உதவி-(படங்கள் இணைப்பு)

unnamed (2)யாழ். வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது அழைப்பின் பிரகாரம் வலி மேற்கு பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய நாளிதழான உதயன் பத்திரிகை நிறுவனப் பணிப்பாளருமான கௌரவ. ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்கள் சங்கரத்தை சினனம்மா வித்தியாசாலைக்கு விஜயம் மேற்கொண்டு உதயன் பத்திரிக்கையின் 30ஆவது ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு மாணவர்கட்கு அப்பியாசக் கொப்பிகளை வழங்கி வைத்தார்.

Read more

196 உறுப்பினர்களை தெரிவுசெய்ய 300 கட்சிகள், 201 சுயேட்சைகள் களத்தில்-

electionஎதிர்வரும் ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று 13ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில் பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலின் ஊடாக 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து நாடாளுமன்றத்துக்கு 196 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இம்முறை 300, அரசியல் கட்சிகளும் 201, சுயேட்சை குழுக்களும் களத்தில் குதித்துள்ளன. அரசியல் கட்சிகளின் சார்பில் 312 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன அதில் 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. சுயேட்சைக்குழுக்கள் சார்பில் 225 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன அதில் 36 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு தேசிய பட்டியல் ஊடாக 29 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். 196 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக அரசியல் கட்சிகளின் சார்பில் 3,653 பேரும் சுயேட்சை குழுக்களின் சார்பில் 2,498 பேரும் என மொத்தமான 6,151 பேர் இம்முறை தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். Read more

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 177 முறைப்பாடுகள்-

electionதேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 177 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத நியமனங்கள் மற்றும் பதவியுயர்வுகள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறான 87 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. தேர்தல் நெருங்கும் காலப்பகுதியில் சுவரொட்டிப் பிரசாரம் மற்றும் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் 24 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் பொருட்கள் விநியோகித்தமை தொடர்பில் 21 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. அரச சொத்துகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் 20 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரச அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான 6 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இதேவேளை தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் இதுவரை 16பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டம் மீறப்பட்டமை தொடர்பில் 23 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறியுள்ளார். Read more

தர்மபுரம் மத்திய கல்லூரியில் “கலைச்சோலை” நூல் வெளியீட்டு விழா-(படங்கள் இணைப்பு)

20150713_113136கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றான தர்மபுரம் மத்திய கல்லூரி உயர்தர வகுப்பு மாணவர்களின் “கலைச்சோலை” என்னும் 29ஆவது நூல் வெளியீட்டு விழா நேற்று (13.07.2015) திங்கட்கிழமை கல்லூரியின் அதிபரும், பழைய மாணவருமாகிய திரு. பூலோகராஜா அவர்களின் நெறிப்படுத்தலின்கீழ் நடைபெற்றது. இந்நிகழ்வின் வெளியீட்டு உரையினை பழைய மாணவரான க.மகேந்திரன் அவர்களும், ஏற்புரையினை பழைய மாணவரான மாணிக்கம் ஜெகன் அவர்களும் வழங்கினார்கள். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக வைத்திய அதிகாரி திரு. சத்தியமூர்த்தி அவர்கள் கலந்துகொண்டிருந்தார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை நலன்விரும்பிகள், அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்விச் சமூகம் சார்ந்தோர் கலந்துகொண்டு நிகழ்வினை வெகுவாகச் சிறப்பித்திருந்தனர்.

Read more

போரினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் கல்விக்கு உதவி-(படங்கள் இணைப்பு)

455665யாழ்ப்பாணம் வலி தென்மேற்கில் போரினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் கல்விக்கான வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் உதவித்திட்டத்தின்கீழ் ஏற்கனவே உள்ள 60 பிள்ளைகளுடன் நேற்றையதினம் வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் வலி தென் மேற்கு பிரதேச செயலக பிரவுக்குட்பட்ட சுமார் 20 பிள்ளைகளின் வங்கிக்கணக்கில் தலா 1000 ரூபா வைப்பிலிடப்பட்டது. இதன்படி அவர்களுக்கு மாதாந்தம் 1000 ரூபா கல்விக்கான கொடுப்பனவு செயற்திட்டத்தினை வட்டு இந்து வாலிபர் சங்கத் தலைமைக் காரியாலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி அனுசரனையை இ.சரவணபவன் அவர்கள் வழங்கியுள்ளார்.

Read more