Header image alt text

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் – இன்று கொழும்பில்

TNA meeting 04தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒன்றுகூடல் இன்று கொழும்பில் புளொட் அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது ஜெனீவா தீர்மானம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவ ஆக்கிரமிப்பின் கீழுள்ள காணிகளை விடுவித்தல், மீள்குடியேற்றம், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இராணுவ பிரசன்னத்தைக் குறைத்தல் உட்பட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு ஒழுங்காக கட்டமைக்கப்பட்ட அரசியல் அமைப்பு வடிவத்தை எடுப்பதற்கு இடையூறாக உள்ள விடயங்கள் தொடர்பாகவும் பேசப்பட்டது. இது தொடர்பாக ஆக்கபூர்வமான முடிவொன்றை எடுப்பதையிட்டு கலந்துரையாடுவதெனவும், தமிழரசுக் கட்சியிடம் கூட்டமைப்பின் ஏனைய அங்கத்துவக் கட்சிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாப்பு குறித்த தமிழரசுக் கட்சியின் யோசனைகள் தொடர்பாகவும் எதிர்வரும் 29ம் திகதி கட்சித் தலைவர்கள் கூடி பேசுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more

ஆனந்தசங்கரியுடன் இணைகிறார்? கருணா

karunaகருணா அம்மான எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் பிரதியமைச்சராக பதவிவகித்த விநாயகமூர்த்தி முரளிதரன், ஆனந்தசங்கிரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து இனிவரும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் கருணா அம்மான் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து கொள்வது தொடர்பில் தனக்கு அறியத்தரவில்லை என்று வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்களுக்கு இலக்கான இலங்கை இராணு வீரர்கள் இராணுத் தளபதியுடன் சந்திப்பு

D silvaஅரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்ட இலங்கை இராணுவப் படையின் வீரர்கள் சிலர் இன்று பிற்பகல் இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவை சந்திக்க உள்ளனர்.
இராணுவத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற இருக்கின்றது.
2010ம் ஆண்டு கட்டாயப்படுத்தல் காரணமாக ஓய்வுப் பெற்ற முப்படைகளி்ன வீரர்கள் 40 பேர் கடந்த தினங்களில் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விஷேட குழுவின் பரிந்துரைக்கமைய அவர்கள் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
அந்த 40 பேரில் இராணுவப் படையை சேர்ந்த 15 வீரர்கள் இருப்பதுடன் அவர்களில் பெரும்பாலானோர் இராணுவத்தில் உயர் பதவிகளில் இருக்கக்கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மூவின மக்களும் ஒன்றிணைந்து செயற்பட்டால் நாடு துரித வளர்ச்சியடையும்

எமது நாட்டின் இனத்தின் ஒற்றுமை மற்றும் அதன் சமத்துவ தன்மைக்காக மூவின மக்களும் ஒன்றினைந்து செயற்படவேண்டும்.

அப்போது நாடு துரித வளர்ச்சியினை பெற்றுக்கொள்ளும் என புனர்வாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.

இலங்கையின் ஒரே மக்கள் என்ற அமைப்பின்  எற்பாட்டில் புதிய இலங்கையினை (Unity Mission trust) உருவாக்கும் நோக்குடன் புதிய உலகம், புதிய இலங்கை, புதிய வழிகள் போன்ற எண்ணக்கருவில் அமைந்த எட்டாவது இளைஞர் மாநாடு நேற்று யாழ் சுண்டுக்குழி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. Read more