கொக்குத்தொடுவாய், அம்பலவன்பொக்கனை, கருநாட்டுக்கேணி சனசமூக நிலையங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு-(படங்கள் இணைப்பு)-

20151204_124422[1]மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன்(பவன்) அவர்களின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து பெறப்பட்ட கதிரைகள், மேசைகள் மற்றும் அலுமாரி உள்ளிட்ட உபகரணங்கள் நேற்றையதினம் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இதன்படி கொக்குத்தொடுவாய் சனசமூக நிலையம், அம்பலவன்பொக்கனை சனசமூக நிலையம் கருநாட்டுக்கேணி சனசமூக நிலையம் ஆகியவற்றிற்கு மேற்படி கதிரைகள் வாசிப்புக்கான மேசைகள் மற்றும் அலுமாரி என்பன உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன்(பவன்), வன்னி மேம்பாட்டுக்கழக தலைவர் திரு. தவராஜா மாஸ்டர், கட்சியின் முக்கியஸ்தர் திரு சிவபாலசுப்பிரமணியம், திரு. யசோதரன் உள்ளுராட்சி பிரதி ஆணையாளர், கரைதுரைப்பற்று பிரதேசசபை செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர். 20151204_124422[1] 20151204_124436[1] 20151204_124439[1] 20151204_124521[1] 20151204_124559[1] 20151204_124634[1] 20151204_124636[1]