ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மரநடுகை நிகழ்வு-(படங்கள் இணைப்பு)
ஜனாதிபதி மைத்திபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்று ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரநடுகை நிகழ்வு நேற்றுக்காலை 9.30மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன்(பவன்),
மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.