Header image alt text

நிலவெடிப்பு இடம்பெற்ற பிரதேசங்களை பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் பார்வையிட்டார்-(படங்கள் இணைப்பு)

navakiri (2)யாழ்ப்பாணம் அச்சுவேலி நவகிரி பகுதியில் ஏற்பட்டுள்ள நில தாழிறக்கம் குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை என புவி சரிதவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்குடா நாட்டின் நிலத்தின் தன்மையை பொருத்தவரையில், இவ்வாறான சிறு சம்பவங்கள் ஏற்படுவது சாதாரணமான விடயம் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவிசரிதவியல் துறையின் பேராசிரியர் எஸ்.ரி.பீ. இராஜேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, நிலாவரைக் கிணறை அண்மித்த நவகிரி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் நிலத்துக்கடியில் காணப்படும் சுண்ணாம்புக் கற்பாறைகள் கரைவதால் இவ்வாறான நில தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இது நிலநடுக்கம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறான சிறு சம்பவங்கள் கடந்த காலங்களிலும் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நவகிரி பகுதியில் நேற்றுமுன்தினம் (23.01.2016) அதிகாலை 1மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டிருந்தது. இதனை கேள்வியுற்ற யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் உடன் அப்பிரதேசத்திற்கு விஜயம்செய்து பாதிக்கப்பட்ட வீடு உள்ளிட்ட பிரதேசங்களைப் பார்வையிட்டதோடு, இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அறிவித்திருந்தார். Read more

தனது கடப்பாட்டினை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும்-

human rightயுத்தகால துஷ்பிரயோகங்களிற்கு பொறுப்புக்கூறும் நடைமுறைகளில் சர்வதேச நீதிபதிகளும், வழக்கு தொடுநர்களும் குறிப்பிடத்தக்க பங்காற்றுவதை உறுதிசெய்வதன் மூலம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கான தனது கடப்பாட்டை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த ஜனவரி 21ம் திகதி வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பை ஏற்கப் போவதில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார். உள்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க போதுமான வல்லுனர்கள், நிபுணர்கள் மற்றும் புத்திஜீவிகள் இலங்கைக்குள்ளேயே உள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்காக இலங்கையரசு சர்வதேச பங்களிப்பை கோரியது, எனவே அதிலிருந்து தற்போது பின்வாங்க கூடாது என, சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர் பிரட் அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச பங்களிப்பு குறித்து ஐக்கிய நாடுகளிற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி நிச்சயமில்லாத ஒன்றல்ல மாறாக பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களுக்கு அளிக்கப்பட்ட உறுதியான வாக்குறுதி என்பதை ஜனாதிபதி மைத்திரிபால புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

லலித் கொத்தலாவல ஊழல் மோசடி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்-

kothalawalaபிரபல வர்த்தகர் லலித் கொத்தலாவல பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளார். பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வாக்குமூலம் பதிவு செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஸவிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் , இன்று ஆஜராக முடியாது என அவர் அறிவித்துள்ளார். வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடி குறித்து வாக்கு மூலம் பதிவு செய்வதற்கே முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் லெஷில் டி. சில்வா குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பிரபல வர்த்தகர் லலித் கொத்தலாவல பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளார். கொள்ளுபிட்டி காலி வீதியில் நிர்மானிக்கப்படும் கட்டமொன்றின் நிர்மானப்பணியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடி குறித்து வாக்கு மூலம் அளிப்பதற்கே அவர் வருகை தந்துள்ளதாக லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் குழுவின் விஜயம்-

Zeid Raad al-Husseinமூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சஹிட் அல் ஹ_சைன் தலைமையிலான குழு பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. உள்ளக நல்லிணக்கப்பொறிமுறையின் முன்னேற்றங்கள் மற்றும் பொறுப்புக்கூறும் கடப்பாடு என்பவை மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சஹிட் அல் ஹ_சைனின் இலங்கை விஜயத்தின் முக்கிய விடயங்களாக கருதப்படும் என ஐ நா அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் மனித உரிமைகள் ஆணையாளர், ஆளும் மற்றும் எதிர் த்தரப்பு சந்திப்புகளுக்கு அப்பால் வடக்கு விஜயம், சிவில் சமூக சந்திப்புகள், வடக்கு மற்றும் கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட சில பகுதிகளுக்கான விஜயத்தையும் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.

ஷிராந்தி ராஜபக்ஷ ஆணைக்குழுவில் ஆஜராகவில்லை-

shranthiமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷவை இன்று பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் இன்று ஆணைக்குழுவின் முன் ஆஜராகவில்லை என, தெரியவந்துள்ளது. இவர் தனது சட்டத்தரணி மூலம் பிறிதொரு தினத்தை இதற்காக கோரியுள்ளதாக, ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டீ சில்வா தெரிவித்துள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும் தாம் அவருக்கு வேறொரு நாளை வழங்கவில்லை எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் ஊடக இணைப்பாளர் என கூறப்படும் மஹிந்த ரத்நாயக்கவுக்கு வீடு ஒன்றை வாங்கிக் கொடுத்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறவே ஷிராந்தி, ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டதாகவும் லெசில் டீ சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுபலசேனா செயலாளர் ஞானசார தேரரை கைதுசெய்ய உத்தரவு-

gnanasaraபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை கைதுசெய்ய ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றவேளை, நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னலிகொடவை (பிரகீத் எக்னலிகொடவின் மனைவி) அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகநபரான தேரர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக சட்டத்தரணிகளால் நீதவானிடம் தெரியப்படுத்தப்பட்டது. இதன்படி ஞானசார தேரரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, ஹோமாகம பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகருக்கு, நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் தண்ணீர் இறைக்கும் மோட்டார் அன்பளிப்பு-

rவட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் ஜெகதீஸ்வரன் என்பவருக்கு தண்ணீர் இறைக்கும் நீர் இறைக்கும் உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கபட்டன.

ஜெகதீஸ்வரன் கடந்த கால யுத்தத்தின்போது தலையில் ஏற்பட்ட காயத்தினால் தனது இரு கண்களின் பார்வையையும் இழந்துள்ளார்.

இவர் அன்றாடம் தமக்கு தண்ணீர் எடுப்பதற்கான பிரச்சனை தொடர்பாக எமக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே 29,298 ரூபா பெறுமதியான உபகரணங்கள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் புலம்பெயர்வு உறவுகள் வழங்கிய நிதியில் இருந்து அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளன. (வட்டு. இந்து வாலிபர் சங்கம்)

ஈழ மகா காவியம் எழுதுவேன்! முல்லைத்தீவில் உருக்கமான பேச்சு – கவிஞர் வைரமுத்து

vairamuthtuமுல்லைத்தீவில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் உழவர் பெருவிழா கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராகக் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டார். இதன்போது சிறப்புரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து ‘ஈழ மகாகாவியம் எழுதுவதை என் வாழ் நாளின் பெரும்பணியாகக் கருதுகிறேன்’ என, குறிப்பிட்டார்.

கவிஞர் வைரமுத்து பேசியதாவது, Read more

மலையக மக்களை இலக்கு வைக்கும் ‘சிறுநீரக வியாபாரக் கும்பல்கள்’

kidneyஇலங்கையின் மலையகத்தில் வறுமையில் பிடியில் வாடும் தோட்டத் தொழிலாளர்களை குறிவைத்து சட்டவிரோத சிறுநீரக வியாபாரத்தில் சிலர் ஈடுபட்டுவருவதாக மலையகத்தைச் சேர்ந்த அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்களை இலக்குவைத்து இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்துவருவதை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏற்கனவே உறுதிசெய்திருப்பதாகவும் கல்வி அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் பிபிசி தமிழோசையிடம் கூறினார். Read more

ஈழத்துப் பாடல்கள் – பகுதி ஒன்று – சீவகன் (BBC)

tamilஎழுபதுகளில் இலங்கையில் இருந்து ஒலித்த தமிழ் பொப்பிசை பாடல்கள் அந்த நாட்டின் கடல்களைக் கடந்தும் அந்த சின்னத் தீவை திரும்பிப் பார்க்க வைத்தவை. துள்ளல் இசை என்றால் இலங்கை இசைதான் என்ற அளவுக்கு அவை பலரையும் ஈர்த்திருந்தன. ஆனால், மேற்கத்தை பாணி இசையாக கருதப்படும் பொப் இசையை மையமாகக் கொண்ட இப்படியான பாடல்கள் மாத்திரந்தான் இலங்கை தமிழர்களின் இசையின் அடையாளம் என்று சொல்லிவிட முடியாது. Read more

ஆசியாவின் பல பகுதிகளில் கடுமையான குளிர், போக்குவரத்து பாதிப்பு
 
snowஆசியாவின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிர் காரணமாக பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
தென் கொரியத் தீவான ஜேஜூவில் கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுகு பனிப்பொழிவு ஏற்பட்டதால அப்பகுதியில் இரண்டாவது நாளாக விமான சேவைகள் ரத்தாகியுள்ளன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பல இடங்களில் சிக்கியுள்ளனர்.

 தென் கொரியாவில் வீசும் கடும் பனிப் புயலால் பலர் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
கடும் பனி மற்றும் வேகமாக வீசும் காற்றின் காரணமாக ஜப்பானிலும் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
 
மிதமான வெப்ப நிலைக்கு பழக்கமான ஹாங்காங் வாசிகளும் வெப்பநிலை மூன்று டிகிரிகளுக்கு குறைந்ததை அடுத்து குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். சீனாவின் பல இடங்களில் தொடரும் பனிப் பொழிவு கடந்த 60 ஆண்டுகளில் இந்த அளவுக்கு அங்கு வெப்பம் குறைந்தது இல்லை.

சீனாவின் பல பகுதிகளிலும் கடுமையான காலநிலை நிலவி வருவதால், அரசு இரண்டாவது அதியுச்ச வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அமெரிக்க பனிப்புயலில் 18 பேர் வரை பலி

us_stormஅமெரிக்காவின் அண்மைய வரலாற்றில் மிகப்பெரிய பனிப்புயலில் ஒன்றாக கருதப்படும் குளிர்கால பனிப்புயல் தாக்கியதில் கிழக்கு கடற்கரையோரப் பிராந்தியத்தின் அன்றாட வாழ்க்கை ஸ்திம்பித்துள்ளது. அமெரிக்காவில் பயங்கரமான காற்று மற்றும் பனிப்பொழிவுடன் சம்பந்தப்பட்டதாக 18 மரணங்கள் பதிவாகியுள்ளன.

லட்சக்கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது. சில இடங்களில் படிந்த ஒரு மீட்டர் உயரம் வரையிலான பனி காரணமாக ரயில்களும், பஸ்களும் மற்றும் விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

நியூயார்க்கில் முழுமையான பயணத்தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. கடைகள், அருங்காட்சியகம் மற்றும் திரையரங்குகள் மூட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. சூதாட்ட மையங்களும் மூடப்பட்டன.
 
இப்போது இந்த பனிப்புயல் குறைந்து அத்திலாந்திக் கடலை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்ற போதிலும் அதன் தாக்கம் இன்னும் சில நாட்களுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதே நேரம் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 பதிவாகியிருப்பதாக அமெரிக்க நிலவியல் ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் போரில் தோற்றாலும் அவர்களின் சிந்தனை தோற்கவில்லை’

maithripala_sirisenaஇலங்கையில் விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டாலும், அவர்களின் பிரிவினைவாத சிந்தனை, கருத்து ரீதியில் தோற்கடிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

அரசியலமைப்பு வழியாக நாட்டின் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒன்பதாம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். Read more

‘சர்வதேசத்துக்கு அளித்த வாக்குறுதியிலிருந்து மைத்திரி பின்வாங்குகிறார்’
 
presidentகடந்த ஆண்டு ஐநா பொதுச் சபை அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால கலந்துகொண்டிருந்தார்
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிபிசிக்கு அளித்துள்ள பிரத்தியேக நேர்காணலில் வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பில் சர்வதேச உண்மை மற்றும் நீதி வேலைத்திட்டம் என்ற தென்னாப்பிரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் அமைப்பு பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான நீதி விசாரணையில் ‘சர்வதேசத்தின் தலையீட்டை’ அனுமதிக்கப் போவதில்லை என்று மைத்திரிபால சிறிசேன பிபிசியிடம் தெரிவித்திருந்தார். Read more

ஆயுத மோசடி புகாரின் முக்கிய சாட்சி இலங்கையை விட்டு வெளியேறினார்
 
lankaஇலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் தற்போதைய செயலாளருமான தமயந்தி ஜயரட்ன, இரகசியமாக இலங்கையைவிட்டு வெளியேறியிருப்பது ரக்னா லங்கா விசாரணைகளுக்கு பாதகமாக அமையாது என்று ஜனாதிபதி விசேட விசாரணைப் பிரிவின் செயலாளர் லெசில் டி சில்வா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

ரக்னா லங்கா நிறுவனத்தின் ஆயுத மோசடி விவகாரம் தொடர்பில், ஜனாதிபதி விசேட விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணையின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான தமயந்தி ஜயரட்ன, நாட்டைவிட்டு இரகசியமாக வெளியுள்ளார் என தகவல் வெளியானதன் பின்னணியில், அது தொடர்பில் லெசில் த சில்வாவிடம் பிபிசி தொடர்புகொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

ரக்னா லங்கா நிறுவனத்திற்கு ஆயுதங்கள் விநியோகத்தது தொடர்பான விசாரணையில், தமயந்தி ஜயரட்னவிடம் ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், வெளிநாடு செல்ல விடுமுறைக்கு விண்ணப்பித்திருந்த தமயந்தி மேலிடத்திலிருந்து அனுமதி வழங்கப்படுவதற்கு முன்னரே நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார் என்றும் தெரிவித்தார். விசாரணைக்கு அவரது ஒத்துழைப்பு மேலும் தேவைப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் லெசில் த சில்வா விளக்கமளித்தார்.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவருடன் பிரதமர் சந்திப்பு

Ranilஇலங்கையுடன் தொழில்நுட்ப ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள எதிர்பார்ப்பதாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் ஜோன் பிலிப் கோடீஷ் கூறியுள்ளார்.

உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் இதனை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்படுத்தப்படவுள்ள ஒப்பந்தத்தினூடாக, இலங்கையின் அபிவிருத்திக்காக புதிய சந்ததியினருக்கு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கும், தகவல் தொழில்நுட்பம், கல்வி மற்றும் சமூக பாதுகாப்பு துறைகளை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கும் பூரண ஒத்துழைப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் கண்காணிப்பு செய்வதற்கு விஷேட குழுவொன்றை விரைவில் இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.