Header image alt text

தமிழ் கைதிகளின் உறவினர்கள் வடக்கு முதல்வரிடம் மகஜர் கையளிப்பு-

dfdfdffffதமது உறவுகளை விரைவில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து தமிழ் கைதிகளின் உறவினர்கள் சிலர் இன்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுதலை தொடர்பில் ஜனாதிபதியை நேரில் சந்திப்பதற்கு முதலமைச்சர் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தே கைதிகளின் உறவினர்கள் மகஜரை கையளித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்திற்கு சென்று முதலமைச்சரை சந்தித்து மகஜரை கையளித்ததாக மன்னார் பிரஜைகள் குழுவின் உப தலைவர் எந்தனி சகாயன் குறிப்பிட்டார். சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை விரைவில் விடுவிக்குமாறு தமிழ் கைதிகளின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் கண்டிக்கு விஜயம்-

fdfgfஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப் இன்று கண்டி தலதாமாளிகைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்டவர்கள் பாகிஸ்தான் பிரதமரை வரவேற்றனர். பாகிஸ்தான் பிரதமருக்கு செங்கம்பள வரவேற்பு அளித்ததுடன் தலதா மாளிகை தியவடன நிலமே பிரதிப் நிலங்க தேல பாரம்பரிய ஆடை அணிந்து விசேட வரவேற்பு செய்தார்.

சேனாநாயக்க வீதியில் அமைந்துள்ள முன்னாள் பாகிஸ்தானின் பிரதமர் அலி ஜின்னா ஞாபகார்த்த மண்டபத்தையும் நவாஸ் ஷரிப் பார்வையிட்டுள்ளார். இதன்பின் தேசிய அருங்காட்சிசாலையில் உள்ள பாகிஸ்தானின் பண்டை கால பொக்கிஷங்களை பார்வையிட்டதுடன், பேராதனை தேசிய பூங்காவில் கண்டி விஜயத்திற்கான ஞாபகார்த்த மரநடுகை நிகழ்விலும் ஈடுப்பட்டுள்ளார். இவர் கண்டி தலதா மாளிகை மற்றும் மீரா மக்கம் முஸ்லிம் பள்ளிவாசலுக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, பாகிஸ்தான் பிரதமர் இன்றுமாலை நாடு திரும்புவார் என வெளிவிவகார அமைச்சு கூறுகின்றது.

மன்னாரில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு-

dfdfdமன்னார் பொதுவிளையாட்டு மைதானத்துக்கு முன்பாக உள்ள வீடொன்றிலிருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவருடைய சடலத்தை மன்னார் பொலிஸார், இன்றுகாலை மீட்டுள்ளனர். மன்னார், சின்னக்கடையைச் சேர்ந்த பி.யூட் கோடிஸ்வரன்(வயது 48) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் மனைவி மற்றும் பிள்ளை ஆகியோர் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும்; குறித்த நபர் வெளிநாட்டில் இருந்து கடந்த 8 வருடங்களுக்கு முன் இலங்கைக்கு வந்து மன்னாரில் வீடொன்றை வாடகைக்கு பெற்று தனிமையில் வசித்து வந்ததாகவும் பாடசாலை மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஆங்கில பாடம் நீண்ட காலமாக கற்பித்து வந்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த நிலையிலேயே குறித்த நபர் மர்மமான முறையில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு பாகிஸ்தான் 8 ஜெட் விமானங்கள் விற்பனை-

rertrஇலங்கைக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் விஜயம் செய்துள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில், நேற்று எட்டு முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இதுகுறித்து, கொழும்பில் செய்தியாளர்களிடம் நவாஸ் ஷெரீஃப் பேசியபோது, “’அண்டை நாடு என்பதையும் தாண்டி, இலங்கையுடனான பாகிஸ்தானின் உறவு உணர்வுப்பூர்வமானது. பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களில் பாகிஸ்தானுடன் தோளோடு தோள் நின்று இலங்கை உதவி புரிந்திருக்கிறது. இந்த உறவை மேலும் பலப்படுத்தும் வகையில், பல்வேறு துறைகள் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் தற்போது கையெழுத்தாகியுள்ளன. இரு நாடுகள் இடையேயான வர்த்தகம், கலாசாரம், சுகாதாரம், நகை-நவரத்தினங்கள், கல்வி, அறிவியல்-தொழில்நுட்பம், வேளாண்மை ஆகிய துறைகள் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் விமானப் படையில் பயன்படுத்தப்பட்டு வரும் “ஜே.எஃப்.17 தண்டர்´ ரக ஜெட் போர் விமானங்களை இலங்கைக்கு விற்பனை செய்யவும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்படி, இலங்கைக்கு 8 ஜெட் விமானங்கள் விற்பனை செய்யப்படும். இந்த ஒப்பந்தங்களை விரைவில் செயல்படுத்தும் நடவடிக்கைகளை இரு நாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இராணுவ வீரர்மீது இனந்தெரியாதோர் தாக்குதல்-

555 (5)யாழ்ப்பாணம் கைதடி பிரதேசத்தில் வைத்து இராணுவ வீரர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி குறித்த இராணுவ வீரர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது கைதடி பாலத்தில் வைத்து இடைமறித்த இனந்தெரியாத குழு அவரை கொட்டன்களால் தாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கே.கே.எஸ். இராணுமுகாமில் பணியாற்றும் மறவன்புலவைச் சேர்ந்த சிவராசா சிவதாஸ் என்பவரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். காயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சீரற்ற வானிலையால் வவுனியாவில் 6 குடும்பங்கள் இடம்பெயர்வு-

ddfdfவவுனியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 6 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

வவுனியா வடக்கு கனகராயன்குளத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா மாவட்ட உதவி பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர்ந்தவர்கள், கனகராயன்குளம் வடக்கு பொதுநோக்கு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான சமைத்த உணவு வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் துறைமுக ஊடக காரியாலயத்துக்கு சீல் வைப்பு-

sealஇலங்கை துறைமுக அதிகாரசபையின் ஊடக காரியாலயத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

நேற்றுமாலை முதல் இந்த காரியாலயத்தின் நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக, இலங்கை துறைமுக அதிகாரசபையின் அகில இலங்கை பொது சேவைகள் சங்கத்தின் தலைவர் சந்திரசிறி மாஹாகமகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அந்நடவடிக்கைக்கு எதிராக உடனடியாக செயற்படுமாறு கோரியும், இலங்கை துறைமுக அதிகாரசபையின் அகில இலங்கை பொதுசேவைகள் சங்கம், இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நிதி மோசடியை காரணம் காட்டியே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் முச்சக்கர வண்டிகளை தடை செய்யத் திட்டம்-

AUTOகொழும்பு நகருக்குள் முச்சக்கர வண்டிகளைத் தடை செய்வது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக சுய தொழிலாளர்கள் சங்கத்தின் முச்சக்கர வண்டிக்கான பிரிவின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அவ்வாறான ஒரு நிலை வந்தால் தாம் பலத்த எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் நடாத்துவதற்குத் தயாராகி வருவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்புக்குள் முச்சக்கர வண்டிகள் நுழைவது மற்றும் போக்குவரத்தில் ஈடுபடுவதைத் தடுக்க முனையும் அரசு அதற்குப் பதிலாக சிறிய ரக நனோ வாகனங்களைப் பயன்படுத்துவதற்குத் திட்டமிடுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் 1 மில்லியனுக்கும் அதிகமானோர் முச்சக்கரவண்டி செலுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசியல் தொடர்புகளை மீளப் புதுப்பிக்க நோர்வே அமைச்சர் வருகை-

NORWAYஅரசியல் தொடர்புகளை மீளப் புதுப்பிக்கும் நோக்குடன், அடுத்த வாரமளவில் நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரென்டே இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது சமாதான முயற்சிகளில் நோர்வே ஈடுபட்டிருந்தது.

எனினும் அந்த முயற்சிகள் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து 2006ம் ஆண்டுக்கு பின்னர் இலங்கைக்கு வருகைதரும் முதல் நோர்வே அமைச்சர் இவர் என அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சு சுட்டக்காட்டியுள்ளது.

தமிழ் மக்கள் பேரவை புதிய குழு நியமனம்-

sivajiபுதிய அரசியலமைப்பு குறித்த யோசனைகளை முன்வைப்பதற்காக வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான, தமிழ் மக்கள் பேரவை புதிய குழுவொன்றை நியமித்துள்ளது.

குறித்த குழுவில் 15 பேர் அடங்குவதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தக் குழுவினர் புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளை முன்வைக்க விரைவில் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஓமந்தை மத்திய கல்லூரி மாணவி மாவட்டத்தில் முதல் நிலை-

studentவெளியாகிய உயர்தர பரீட்சையில் நுண்கலைப்பிரிவில் செல்வி இராஜகோபால் சுதர்சினி வவுனியா மாவட்டத்தில் முதல் நிலையை பெற்றுள்ளதுடன்,

அகில இலங்கை ரீதியில் 70ம் நிலையை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொடிய போரால் பொருளாதாரத்தில் நலிவடைந்த சமூகமாக தமிழர்கள் நாங்கள் இருந்தாலும்,

தளராத மன நிலையுடன் கல்வியில் அக்கறை செலுத்தியதால் தான் இந்த நிலைமைக்கு உயர்ந்ததாக மாணவி சுதர்சினி தெரிவித்துள்ளார்.

 

ஓம் நமச்சிவாய சிவ ஆராதனையும் சிவ ஆன்மீக யாத்திரையும்-(படங்கள் இணைப்பு)

P1110521சித்தன்கேணி வீணாகாண குருபீடம் குரு முதல்வர்களது நல் ஆசிகளுடன் ஓம் நமச்சிவாய சிவ ஆராதனையும் சிவ ஆன்மீக யாத்திரையும் கடந்த 02.01.2016 அன்று வீணாகாண குருபீட அமைப்பாளர் சந்நிதாச்சாரியார் சிவஸ்ரீ சபா. வாசுதேவக்குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், அந்தன சிவாச்சாரியர்கள், சிம்யா மிசன் வதிவிட சுவாமிகள் யாக்றீட் சைத்தன்யா, பாடசாலை மாணவர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

நல்லூர் வீரமகாகாளி அம்மன் கோவிலில் காலை 8.00 மணி முதலாக சிவ ஆராதனை இடம்பெற்று தொடர்ந்து ஓம் நமச்சிவாய ஆன்மீக யாத்திரை 2.30 மணியளவில் ஆரம்பமாகி பரித்தித்துரை வீதி வழியாக

ஆரியகுளம் சந்தி – வேம்படிச்சந்தி –ஆஸ்பத்திரி வீதி – சத்திரத்துச் சந்தி –முட்டாஸ் கடை சந்தி – ஊடாக வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் ஆலயத்தில் நிறைவடைந்தது.
Read more

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு- (படங்கள் இணைப்பு)

IMG_3221தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் ஒரு தொகுதியினரான 90 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு. சு.காண்டீபன் தலைமையில், கோவில்குளம் உமாமகேஸ்வரன் ஞாபகார்த்த பொது நூலகத்தில் இன்றுமாலை (05.01.2016) நடைபெற்றது. இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசிய இளைஞர் கழக ஸ்தாபகரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும், இளைஞர் சேவைகள் மன்றத் தலைவர் திரு. அமுதன், தமிழ் தேசிய இளைஞர் கழக உப தலைவர்களில் ஒருவரும், வயம்பா பல்கலைக்கழக மாணவனுமான திரு இ.சாருஜன், கழக இணைப்பாளர்களில் ஒருவரும் பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல்பீட மாணவனுமான சி.இந்துஜன், கழக உறுப்பினர் பி.கெர்சோன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் 3வது பொதுக்கூட்டம் கடந்த 27.12.2015 அன்று வன்னி இன் விருந்தினர் விடுதியில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டிற்கான செயற்றிட்டத்தில் குறிப்பிடப்பட்டதன் பிரகாரம், எமது மாணவர்களின் கல்வி அபிவிருத்தி தொடர்பில் கழகத்தின் செயற்றிட்ட ஆண்டறிக்கையில் கழகம் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. Read more

பிரித்தானிய முன்னாள் பிரதமர் இரா. சம்பந்தன் சந்திப்பு-

sampanthan Doniஇலங்கை வந்துள்ள பிரித்தானிய முன்னாள் பிரதமர் டொனி பிளேயருக்கும், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனுக்கும் இடையேயான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் சமர்பிக்கப்பட்ட பிரேரணை குறித்து இந்த சந்திப்பின்போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மீள்குடியேற்றம், பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு, தமிழர்களின் வாழ்விடங்களில் அவர்களை மீளகுடியேற்றுதல் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் அழைப்பிற்கமைய பொருளாதார மாநாடொன்றில் உரையாற்றுவதற்கு டொனி பிளேயர் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரப்பாங்கண்டல் பாலைத்தாழ்வில் வெடிபொருள் மீட்பு-

mannarமன்னார் பரப்பாங்கண்டல் பாலைத்தாழ்வு கிராமத்தில் உள்ள தனியார் ஒருவரின் காணியில் இருந்து சக்தி வாய்ந்த வெடிபொருள் ஒன்று மீட்டுள்ளது. தோட்டச் செய்கைகாக குறித்த காணியில் உள்ள மேட்டு நிலப்பகுதியை உழவு இயந்திரத்தினால் உழுது கொண்டிருந்த போது புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடி பொருள் வெளிப்பட்டுள்ளது. இது தொடர்பில், உடனடியாக மன்னார் காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய நிலையில் மன்னார் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வெடிபொருளை மீட்டனர். மீட்கப்பட்ட வெடி பொருள் சுமார் 10 கிலோ கிராம் எடை கொண்டது எனவும், மிகவும் சக்தி வாய்ந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவன்கார்ட் தலைவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் இன்றும் ஆஜர்-

avangardபாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதிக்கு இன்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரக்னா லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்கே அவரை அழைத்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா கூறினார் அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதி இது தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக நேற்றைய தினமும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். நேற்று மாலை 6 மணிவரை அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் – இலங்கையிடையே எட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்து-

sri lanka pakistanஇலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளன. இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் நேற்று மாலை இலங்கையை வந்தடைந்தார். அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் இரு நாடுகளுக்கு இடையிலும் கலாசார மேம்பாடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு உட்பட 8 உடன்படிக்கைகள் இன்று கைச்சாத்தாகியுள்ளன. இதன்படி பணச்சலவை, பொருளாதார, வர்த்தக மற்றும் தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்ட சில உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. நிகழ்வில் உரையாற்றிய பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், எதிர்காலத்தில் இலங்கையின் மேம்பாடுகள் தொடர்பாக தமது அரசாங்கம் ஒத்துழைப்புடன் செயற்படும் என குறிப்பிட்டார். இதேவேளை, கடந்த யுத்தகாலத்தில் பாக்கிஸ்தான் அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது என, ஜனாதிபதி மைத்திரிபால கூறினார்.

தமது விடுதலைக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ் கைதிகள் கோரிக்கை-

jail-002தைப்பொங்கல் பண்டிகையைப் புறக்கணித்து தமது விடுதலைக்கான அழுத்தத்தை கொடுக்குமாறு தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வழக்கு விசாரணைக்காக இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 21 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இன்று புதிதாக மூன்று கைதிகள் வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டதுடன் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுவதாக பங்கரவாத தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்தனர். சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை சமர்ப்பிக்கப்படாத நிலையில் அரசியல் கைதிகளை இம்மாதம் 13ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கடந்த ஒக்டோபர் 12ம் திகதி தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். Read more

தமிழ் மக்கள் பேரவையின் இலக்கு குறித்து தெளிவுபடுத்த வேண்டும்!

ANANDASANGAREEஅரசியல் ரீதியான கட்சியாக தமிழ் மக்கள் பேரவை செயற்படாது எனக் கூறப்பட்டுள்ள நிலையில், பேரவையின் இலக்கு என்ன என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்களின் இனப் பிரச்சினை சம்பந்தமாக மிக அவதானமாகவும் புரிந்துணர்வோடும் செயற்பட வேண்டிய காலம் இதுவென நினைக்கின்றேன். Read more

எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் – டோனி பிளயருக்கும் இடையில் பேச்சுவார்த்தை

doni_pleyarஐக்கிய நாடுகள் அமைப்பின் தீர்மானம் குறித்து முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி பிளயருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

அண்மையில் இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணை அனுசரணை வழங்கிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானம் குறித்து இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றம், குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல், அரசியல் தீர்வுத் திட்டம், தமிழ் மக்களின் காணிகளை மீள வழங்குதல், காணாமல் போனவர்கள் போன்ற விடயங்கள் பற்றியும் இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் அடிப்படையில் டோனி பிளயர் பொருளாதார மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

எம்பிலிபிடிய மோதலில் 4 பொலிஸார் உட்பட ஏழ்வர் காயம்

 policeஎம்பிலிபிடிய புதிய நகர் பகுதியில் இடம்பெற்ற மோதலில் நான்கு பொலிஸார் மற்றும் மூன்று பொது மக்களும் காயமடைந்துள்ளனர்.

இதன்போது காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவரை எம்பிலிபிடிய வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எம்பிலிபிடிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பீ.ஆர்.எஸ்.டப்ளியூ.பெரமுன தெரிவித்துள்ளார்.

வீடொன்றில் நேற்று இரவு இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த விருந்து நிகழ்வின் போது, அங்கு சென்ற பொலிஸார் மதுபானம் வேண்டும் என கோரியுள்ளதாகவும், இதனையடுத்து ஏற்பட்ட முரண்பாடே சம்பவத்துக்குக் காரணம் எனவும் சம்பந்தப்பட்ட வீட்டினர் குறிப்பிட்டுள்ளதாக, எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

இதன்பின்னர் குறித்த பகுதிக்கு மேலும் சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் சென்றுள்ளதாகவும் இதனால் முரண்பாடு மேலும் அதிகரித்ததாகவும் தெரியவந்துள்ளது. இதேவேளை இந்த மோதலால் அருகிலுள்ள வீட்டுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இது இவ்வாறு இருக்க இந்த விடயம் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்திடம் வினவியபோது, சம்பந்தப்பட்ட வீட்டில் மோதல் ஏற்பட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலின் பிரகாரம் பொலிஸார் அங்கு சென்றதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இவ்வாறு சென்ற பொலிஸார் மீது வீட்டில் இருந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் மோதல் அதிகரித்ததாகவும் இதனையடுத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு 12.30 அளவில் இந்த மோதல் ஏற்பட்டதாகவும் இது குறித்த மேலதிக விசாரணைகளை எம்பிலிபிடிய பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

வில்பத்து காடழிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் மீது தவறாக குற்றச்சாட்டு – ஜனாதிபதி

maiththiriவில்பத்து காடழிப்பு தொடர்பில் சிலர் தற்போதைய அரசாங்கத்தின் மீது தவறாக குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்றத்திற்காக பிற பகுதிகளில் இடங்களை வழங்கக் கூடியதாக இருக்கின்ற போதும், கடந்த ஆட்சிக் காலத்தில் பாரிய காடழிப்பு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

2020ம் ஆண்டளவில் புகையிலைச் செய்கை முற்று முழுதாக நாட்டில் தடைசெய்யப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

 சவுதியை விட்டு இரான் ராஜீய அதிகாரிகள் வெளியேற 48 மணி நேரம் கால அவகாசம்

saudi_iran_nimrஷியா முஸ்லிம் மதகுரு ஒருவரின் மரண தண்டனையை சவுதி அரசாங்கம் நிறைவேற்றியது தொடர்பில் இரானுடன் ஏற்பட்டுள்ள பிரச்சனையை அடுத்து, சவுதியை விட்டு இரானிய ராஜீய அதிகாரிகள் வெளியேறுவதற்கு சவுதி அரசாங்கம் நாற்பத்தெட்டு மணிநேரம் அவகாசம் கொடுத்துள்ளது.

பயங்கரவாதம் தொடர்பிலான குற்றங்களுக்காக கடந்த சனிக்கிழமையன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நாற்பத்தேழு பேரில் ஷேக் நிம்ர் அல் நிம்ரும் ஒருவர்.

தெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகத்தினுள் ஆர்ப்பாட்டக்காரர்கள் புகுந்ததையடுத்து இரானுடனான உறவுகளை சவுதி முறித்துக்கொண்டுள்ளது.

தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை காரணங்காட்டி, ஏற்கனவே இருந்துவரும் பதற்றங்களை சவுதி அதிகரிக்கச் செய்துள்ளதாக இரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்ஹ லே: ‘இனத்துவ மேலாதிக்க சிந்தனையை தூண்டும் முயற்சி’

sinhale_CI 2இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகரான நுகேகொட பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில வீடுகளின் மதில் சுவர்களின் மீது ‘சிங்ஹ லே’ (தமிழில்- சிங்கத்தின் இரத்தம்) என்ற சிங்கள வாசகங்களை எழுதியவர்களை கண்டுபிடிப்பதற்காக விசாரணை நடந்துவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Read more

கரவை சிந்தாமணி விநாயகர் முன்பள்ளியின் கலைவிழாவும், பரிசளிப்பும்-(படங்கள் இணைப்பு)

20160102_153326_resizedயாழ். கரவெட்டி சிந்தாமணி விநாயகர் முன்பள்ளியின் கலைவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும் முன்பள்ளியின் தலைவர் திரு. ந.சிறீகாந்த் அவர்களது தலைமையில் நேற்று (02.01.2016) நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வைத்தியக்கலாநிதி ஆ.கேதீஸ்வரன், திரு. க.பொன்னையா (கோட்டக்கல்விப் பணிப்பாளர்) ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். விருந்தினர்கள் வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து முன்பள்ளிச் சிறார்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று, அதனைத் தொடர்ந்தும் பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது.

இங்கு உரைநிகழ்த்திய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்,
Read more

கரவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கு பல்லூடக எறியீ கையளிப்பு-(படங்கள் இணைப்பு)

20160102_135543_resizedயாழ். கரவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கு பல்லூடக எறியீ (multimedia projector) வழங்கும் நிகழ்வு நேற்று (02.01.2016) இடம்பெற்றது.

வைத்தியக்கலாநிதி சுதாகுமார் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு பல்லூடக எறியீ இனை வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் வைத்தியக்கலாநிதி சுதாகுமார் அவர்களுடன், வைத்தியக்கலாநிதி மங்கையர்மணி, வைத்தியக்கலாநிதி கேதீஸ்வரன்(வட மாகாண சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர்) ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

மேற்படி பல்லூடக எறியீயானது கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் வட மாகாணசபை பிரமாண அடிப்படையிலான நிதியிலிருந்து பெற்றுக்கொடுக்கப்பட்டது.
Read more

சம்பூர் மகா வித்தியாலயத்தை கையளிக்கும்படி கோரிக்கை-

dgfgfகடற்படையினரின் வசமுள்ள சம்பூர் மகாவித்தியாலயத்தை மக்களிடம் கையளிக்க வேண்டும் என கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக, அதன் பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாணக் கல்வி அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 2006ம் ஆண்டு திருகோணமலை மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் இடம்பெற்ற ஆயுத மோதல்களால் சம்பூர் பிரதேச மக்கள் தமது பூர்வீக இடங்களை விட்டு இடம்பெயர நேரிட்டது. அதன் பின்னர் இன்றுவரை கடந்த 10 வருடங்களாக சம்பூர் மகாவித்தியாலயமும், அதனைச் சூழவுள்ள பெருந்தொகையான குடிநிலப்பரப்பும் கடற்படை முகாமாகவும் கடற்படையினரின் ஏனைய தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் 2015ஆம் ஆண்டு அதிகாரத்துக்கு வந்த நல்லாட்சிக்கான அரசாங்கம், மக்களுக்குச் சொந்தமான காணிகளை அந்த மக்களுக்கே வழங்க வேண்டும் என்பதில் சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. Read more

தோழர் சுந்தரம் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவுதினம்-

vcvcvcvcvvvதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகர்களுள் ஒருவரும், தளபதியும், புதியபாதை ஆசிரியருமான தோழர். ச.சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்) அவர்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட 34ஆவது ஆண்டு நினைவுதினம் 02.01.2016 ஆகும்

அன்னாரின் நினைவுகூரல் நிகழ்வுகள் புளொட் அமைப்பின் மாவட்ட அலுவலகங்களில் நேற்று நடைபெற்றுள்ளது. சிறந்த தலைமைப் பண்பும், துணிச்சலும், போராட்ட தெளிவும் மிக்க பொதுவுடைமைவாதியான தோழர் சுந்தரம் அவர்கள்

02.01.1982ல் யாழ்ப்பாணம் சித்திரா அச்சகத்தில் ~~புதியபாதை~~ பணியில் ஈடுபட்டிருந்தபோது, அச்சகத்தின் பின்புறமாக மறைந்திருந்து வேலுப்பிள்ளை பிரபாகரன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார்.