Header image alt text

வாள், கத்தி உற்பத்தி செய்வதற்கு தடை-

fdவாள்கள், ஆபத்தான கத்திகள் என்பவற்றை தொழிற்சாலைகள் உற்பத்தி செய்வதற்குத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள யாழ். மேல் நீதிமன்றம், அவற்றை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உடனடியாக கையளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பங்கள் அதிகரித்துள்ளதுடன் ஆபத்தான கத்திகளைக் காட்டி, அச்சுறுத்தி கொள்ளைகள் இடம்பெறுவதையடுத்தே இந்த உத்தரவை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், நேற்று பிறப்பித்துள்ளார். அவ் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘சட்டத்துக்கு முரணான வகையில் வாள்கள் வைத்திருப்பதும் ஆபத்தான கத்திகளை வைத்திருப்பதும் சட்டப்படி குற்றமாகும். இவற்றை உடைமையில் வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். பொலிஸார்; நடத்தும் தேடுதல் நடவடிக்கைகளின்போது, இந்த ஆயுதங்களை உடைமையில் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இத்தகைய ஆபத்தான ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் உடனடியாக யாழ்ப்பாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். அவற்றை அந்தந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். Read more

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் கோத்தாபய இன்றும் ஆஜர்-

gotabayaமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று மீண்டும் ஆஜராகியிருந்தார். பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மூன்று சம்பவங்கள் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் ஆஜராகியிருந்ததாக ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் எஸ்.சண்முகநாதன் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு பயணம், பாதுகாப்புக்கு அளவுக்கு அதிகமான இராணுவத்தினரை இணைத்துக் கொண்டமை மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவிற்கான விமான பயணம் போன்றவை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 9.30 அளவில் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரான முன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் எஸ்.சண்முகநாதன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். தாக்குதல் தொடர்பில் ஐவர் கைது-

arrest (9)யாழ்ப்பாணத்தில் அண்மையில் சுற்றுலா பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். நகரில் நேற்றுமாலை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மானிப்பாய், கல்வியங்காடு, கோப்பாய், உரும்பிராய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 9 பாரிய குற்றச் செயல்களுடன் சந்தேகநபர்கள் தொடர்புபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்களிடமிருந்து வாள், கோடரி, கத்தி உள்ளிட்ட பல கூரிய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், அண்மையில் வாள் வெட்டு தாக்குதலில் ஈடுபட்டு சந்தேகநபர்களால் திருடப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் தலைமையக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கேபி குறித்த வழக்கு எதிர்வரும் 30ம் திகதிக்கு ஒத்திவைப்பு-

KPபுலிகள் அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தரான கேபி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 30ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தபோது, குமரன் பத்மநாதன் தொடர்பில் தற்போது பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, குறித்த மனுவை இம்மாதம் 30ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

காணி அபகரிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது-

wsererereகிளிநொச்சி, பூநகிரி பிரதேச செயலகத்துக்குட்பட்ட வெட்டுக்காடு கிராமத்தில் ஒரு பகுதியை இராணுவம் அபகரித்து, அவர்களது இராணுவத் தேவைக்காகப் பல வருடங்கள் உபயோகித்து வந்துள்ளது.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை காலை, குறித்த பகுதியை இராணுவம் பதிவுசெய்யும் முயற்சியில் இறங்கியபோது, அது அப்பிரதேச பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோரின் தலையீடு காரணமாக அந்நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சுமார் 22 ஏக்கர் காணி அபகரிப்பு முயற்சியே இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வவுனியா தோணிக்கல் அம்மன் விளையாட்டுக் கழக புது வருட விளையாட்டு விழா-(படங்கள் இணைப்பு)-

7dcde135-060f-4cb9-8e2b-16d036a4b639வவுனியா தோணிக்கல் அம்மன் விளையாட்டுக் கழகத்தின் புதுவருட விளையாட்டு விழா 07.05.2016 சனிக்கிழமை அன்று கழகத்தின் தலைவர் திரு இ.நிசாந்தன் தலைமையில் தோணிக்கல் மேட்டுத்தெரு மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. கழகத்தின் புது வருட விளையாட்டு விழாவின் காலை நிகழ்வில் பிரதம அதிதியாக வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்திய கலாநிதி திரு வ.சுரேந்திரன் , சிறப்பு அதிதியாக வட மாகாண சபை உறுப்பினர் ம.தியாகராஜா, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஜெ.முரளிதரன், சமூர்த்தி உத்தியோகத்தர் காமினி மல்காந்தி ஆகியோர் கலந்து கொண்டதுடன், மாலை நிகழ்வுகளுக்கு சிறப்பு அதிதிகளாக வட மாகாண சபை உறுப்பினர் திரு எம்.பி.நடராஜா, வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு எ.சோமரத்ன விஜயமுனி, வவுனியா பிரதேச செயலக நிர்வாக அலுவலர் மு.விஜெயரத்தினம், Read more

வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் கலாசார நிகழ்வுகள்-(படங்கள் இணைப்பு)-

f6f6241f-8871-4447-88fd-e7220d0272d6வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் அங்கம் வகிக்கும் வவுனியா பிரதேச சம்மேளன கழகங்களின் ஒத்துழைப்புடன் மாபெரும் கலாசார மற்றும் புதுவருட விளையாட்டு விழா இளைஞர் கழகத்தின் மாவட்ட சம்மேளன முன்னாள் தலைவர் திரு ரி.அமுதராஜ் அவர்களது தலைமையில் நேற்று (07.05.2016) சனிக்கிழமை சிதம்பரபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வின் இறுதி நிகழ்வான பரிசளிப்பு நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தார். நிகழ்வில் கருத்து தெரிவித்த தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், எமது பிரதேச இளைஞர்களின் ஆக்கமும், ஊக்கமும் தான் இன்றைய கலாசார நிகழ்வின் வெற்றியின் திறவுகோல். இளைஞர்களின் மூலமே சிறந்த சமூதாய கட்டமைப்பை நாங்கள் எமது கிராமங்களில் தோற்றுவித்து வளமான எதிர்காலத்தினை நாம் உருவாக்க என்றும் முயற்சி உள்ளவர்களாக திகழ வேண்டும். அத்துடன் தமிழ் தேசிய இளைஞர் கழகம் தனது உயரிய சிந்தனையுடன் தொடர்ந்தும் இளைஞர்களின் முன்னேற்ற பாதைக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.
Read more

வட்டு. இந்து வாலிபர் சங்கத்தினால் வீடு புனரமைப்பிற்காக 50,000 பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)-

0ed847a7-0272-410c-989d-0b2d2fb657f3வட்டுக்கோட்டை இந்த வாலிபர் சங்கத்தினால் கடந்தகால யுத்தத்தினால் தனது இரு கண்களையும் இழந்து நான்கு பிள்ளைகளுடன் பல இன்னல்களுடன் வாழ்ந்து வரும் கீரிமலை வீதி சித்தங்கேணியைச் சேர்ந்த மா.குணரத்தினம் என்பவருக்கு வீடு புனரமைப்பிற்கான உதவி இன்று வழங்கப்பட்டுள்ளது. மா.குணரத்தினம் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் விடுத்த விண்ணப்பத்திற்கு அமைவாக அவரது வீடு புனரமைப்பிற்காக நேற்று சனிக்கிழமை (07.05.2016) அவரது வீட்டில் வைத்து கூரைத்தகடுகள், சீமெந்து பைகள், கம்பிகள் மற்றும் அதற்கான கூலி உட்பட சுமார் 50,083 ரூபா வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி அன்பளிப்பினை எமது புலம்பெயர் உறவான அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த மாணிக்கவாசகர் ஆரூரன் அவர்கள் வழங்கியுள்ளார். இவருக்கு எமது சங்கத்தின் சார்பிலும் பயனாளி சார்பிலும் மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கின்றோம். மேலும் குணரத்தினத்தின் பிள்ளைகளின் எதிர்கால கல்வியை கவனத்தில் கொண்டு எமது மாதாந்த கல்வி உதவித் தொகை கொடுப்பனவு திட்டத்தில்லும் சேர்க்கப்பட்டுள்ளனர். (வட்டு. இந்து வாலிபர் சங்கம்)
Read more

தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன-வியாழேந்திரன் எம்.பி-(படங்கள் இணைப்பு)

2343434வடக்கு கிழக்குக்கு அப்பால் உள்ள தமிழர்களின் வரலாற்று அடையங்கள் அழிக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகில் தமிழ்ப் புலவர் ஒளவையார் சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு வேல்முருகன் வர்த்தக நிறுவனத்தின் 40 ஆண்டுகால வர்த்தக நிறைவை பூர்த்தி செய்வதனை இட்டு வேல்முருகன் குடும்பத்தினரால் நேற்றுமாலை ஒளவையார் சிலை திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு வர்த்தக சங்கம் மற்றும் மட்டக்களப்பில் உள்ள வர்த்தக சங்களின் பூரண ஒத்துழைப்புடன் இந்த சிலை திறப்பு விழா சிப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அவர்கள், பண்பாட்டின் அடையாளங்கள் இன்று அழிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது. 30 வருட யுத்தத்திற்கு முன்பு மட்டுமல்ல 2009 யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னரும் தமிழர்களின் வரலாற்று அடையாளங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன, சிதைக்கப்பட்டு வருகின்றன என்பதை நினைக்கும்போது வேதனையாகவுள்ளது. வடகிழக்குக்கு அப்பால் தமிழர்களின் வரலாற்று அடையாளங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. Read more

யாழில் ரயிலில் மோதி இளம் யுவதி உயிரிழப்பு-

trainயாழ். – சுன்னாகம் பகுதியில் ரயிலில் மோதுண்டு 18 வயது யுவதியொருவர் நேற்று இரவு 8.00 மணியளவில் உயிரிழந்துள்ளார். சபாபதிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த லோரன்ஸ் றெஜின்ரினா என்ற யுவதியே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலிலேயே குறித்த யுவதி மோதுண்டுள்ளார். ரயிலில் மோதி படுகாயமடைந்த அவரை அங்கிருந்த ஊழியர்கள் அம்புலன்ஸ் மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் விபத்தா? அல்லது தற்கொலையா? என்பது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை மீதான இராணுவ கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியது-

rrtrtrநீண்டகாலமாக இலங்கைமீது அமெரிக்காவினால் விதிக்கப்பட்டிருந்த இராணுவ வர்த்தக கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியுள்ளது. இக் கட்டுப்பாடுகள் இம்மாதம் 04ம் திகதி முதல் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பாதுகாப்பு வர்த்தக பிரிவினால் தளர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது இலங்கையுடன் இராணுவ உபகரண கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட அமெரிக்கா இணங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. மூன்று தசாப்தங்களாக நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இலங்கைக்கு இராணுவ உபகரணங்கள் வழங்குவதை அமெரிக்கா நிறுத்தியிருந்தது. எனினும் மிதிவெடி அகற்றல், இடர் முகாமைத்துவ உதவிகள், வான் மற்றும் கடல் பாதுகாப்பு சேவைகளை அமெரிக்கா இலங்கைக்கு வழங்கியிருந்தது.

ஆசிய அபிவிருத்தி வங்கி 3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி-

eeweeeஇலங்கையின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை ஜேர்மனியில் நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் 67 நாடுகள் பங்கேற்றிருந்தன. இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மாநாட்டில் பங்கேற்றிருந்தார். அடுத்த மூன்று வருட காலத்திற்கு சலுகை வட்டி அடிப்படையில் இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக நேற்றையதினம் இரவு நாடு திரும்பிய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.

இலங்கையில் சித்திரவதை தொடர்கிறது-ஐ.நா-

asdsdsdsdsஇலங்கையில் உள்நாட்டுப்போர் முடிந்தும் தமிழர்கள் மீதான சித்திரவதை தொடர்கிறது என ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதை, ஏனைய வன்கொடுமை, மனிதாபிமானமற்ற தண்டனை சிறப்பு அறிக்கையாளர் ஜூவான் மெண்டஸ் தெரிவித்துள்ளார். எட்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்த அவர், கொழும்பில் நேற்று நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவருடன், நீதித்துறையின் சுதந்திரம் மீதான அறிக்கையாளர் மோனிகா பிண்டோவும் வருகை தந்திருந்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் (தமிழர்கள் மீதான) சித்திரவதை கொஞ்சம் குறைந்துள்ளது. ஆனாலும்கூட, சட்டத்தில் உள்ள ஓட்டைகள் காரணமாக இன்னும் சித்திரவதை தொடர்கிறது. Read more

இலங்கைத் தயாரிப்பு கப்பல்கள் வெளிநாட்டிற்கு விற்பனை-

sri lanka shipஇலங்கையில் தயாரிக்கப்பட்ட ஒன்பது கடற்பாதுகாப்பு கப்பல்கள் முதன் முறையாக நைஜீரியா நாட்டிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. வெலிசர கடற்படை முகாமில் உள்ள கடலோரக் காவல்படை கப்பல்கள் தயாரிக்கும் திட்டத்தில் இவை தயாரிக்கப்பட்டுள்ளன. வெளிநாடொன்றிற்கு இலங்கையின் கப்பல்கள் விற்பனை செய்யப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்பதுடன், இதன்மூலம் பெறப்பட்ட வருமானம் சுமார் 60 கோடிகள் என்று கடற்படை தெரிவித்துள்ளது. கப்பல்களை கொள்வனவு செய்யும்போது நைஜீரிய நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கையிலுள்ள நைஜீரிய நாட்டின் தூதுவர் எஸ்.யூ. அஹமட் கலந்து கொண்டிருந்தார். 1994ம் ஆண்டில் இருந்து அப்போதைய தேவைகளுக்கு ஏற்ப இருந்த கேள்விகளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் சிறிய ரக கப்பல்கள் தயாரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. இறுதி யுத்த காலத்தில் மனிதாபிமான செயற்பாடுகளுக்காக இந்தப் கப்பல்கள் இணைத்துக் கொள்ளப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.

ரயிலில் மோதி இரு இளைஞர்கள் மரணம், ரயிலில் பயணித்த மாணவன் படுகாயம்-

5466565கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்டு யாழ். கல்வியங்காட்டைச் சேர்ந்த மோகனராசா நிசாந்தன் (வயது 17), திருநெல்வேலியைச் சேர்ந்த பரமநாதன் ரெஜராம் (18) ஆகிய இரு இளைஞர்கள், இன்று உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் கோண்டாவில் ரயில் நிலையத்துக்கு அருகாமையில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் இரு இளைஞர்களும் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய நிலையிலே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளதென அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை ரயிலில் நேற்று பயணித்த யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒருவர், வெளியில் எட்டிப் பார்த்தபோது, மின்கம்பத்துடன் முகம் அடிபட்டதில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 26 வயதுடைய தாரக டுலாஜ் எனற மாணவனே படுகாயமடைந்தவராவார். காங்கேசன்துறை தல்சேவன விருந்தினர் விடுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு, நண்பர்களுடன் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொருளாதார மையம் அமைப்பது தொடர்பில் வவுனியாவில் அமைதிப் பேரணி-

4577677மத்திய அரசின் கிராமிய பொருளாதார அமைச்சினால் வவுனியாவில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார மையத்தை தாண்டிக்குளம் விவசாய பண்ணையின் பயன்படுத்தப்படாத காணியில் அமைப்பதற்கு முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்து வவுனியாவில் இன்று அமைதிப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த அமைதிப் பேரணியில், அபிவிருத்தியில் அரசியல் கலக்காதே, வலியவரும் வாய்ப்பை நழுவ விடாதே, மத்தியா மாகாணமா இதுவல்ல எமது பிரச்சனை மாவட்டத்தின் அபிவிருத்தியே, சந்தை வாய்ப்பில்லாமல் நாம் படும் துன்பம் தெரியுமா, தரவில்லை என்று குறை கூறாமல் தந்ததை பயன்படுத்து, வேண்டாம் வேண்டாம் பொய்யான அறிக்கைகள் வேண்டாம் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை பேரணியில் கலந்துகொண்டவர்கள் தாங்கியிருந்தனர்.

வவுனியா வாகன விபத்தில் 21 கடற்படையினர் காயம்-

ertrtrrttrrrrவவுனியா, செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில் நேற்றிரவு 7.30 மணியளவில் வேகக் கட்டுபாட்டை இழந்த பஸ் ஒன்று பாலத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 கடற்படையினர் காயமடைந்துள்ளனர்.

மன்னார் பகுதியில் இருந்து மதவாச்சி நோக்கி விடுமுறையில் சென்று கொண்டிருந்த கடற்படையினரை ஏற்றிச்சென்ற இரண்டு பஸ்களில் ஒன்றே அங்கிருந்த தொலைபேசி கம்பத்துடன் மோதுண்டு பாலத்தினுள் வீழ்ந்துள்ளது. காயமடைந்த கடற்படையினர் செட்டிகுளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி விசாரணைக்குழு நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பு-

namalமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை விசாரணைக்கு வரும்படி பாரிய நிதி மோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி எதிர்வரும் 10ஆம் திகதி நாமல் ராஜபக்ச குறித்த ஆணைக்குழு முன்பாக முன்னிலையாகவுள்ளார். சிவில் விமான போக்குவரத்துக்கான கொடுப்பனவாக 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதியை செலவு செய்துள்ளமை தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது. இந்த விமானக் கட்டணம் கடந்த 2013 ஆம் ஆண்டுக்கும் 2015 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்துக்குரியது எனவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும், ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச துறைமுக திறப்பு நிகழ்வில் செலவு செய்யப்பட்ட அரச நிதி தொடர்பாகவும் நாமல் எம்.பியிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

கிளிநொச்சியில் 2,792 மாற்றுவலுவுடையோர் இருப்பதாக புள்ளிவிபரம்-

erreகிளிநொச்சி மாவட்டத்தில் 2,792 மாற்றுவலுவுடையோரும் 12,756 முதியோரும் இருப்பதாக மாவட்ட செயலக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதேச செயலக ரீதியாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 2,792 மாற்றுத்திறனாளிகளும் 12,756 முதியோரும் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதன்படி கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவில் 1,434 மாற்றுத் திறனாளிகளும் 8,560 முதியோரும் பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலாளர் பிரிவில் 250 மாற்றுத் திறனாளிகளும் 2,661 முதியோரும் பூநகரிப் பிரதேச செயலர் பிரிவில் 516 மாற்றுத் திறனாளிகளும், 578 முதியோரும், கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவில் 592 மாற்றுத் திறனாளிகளும், 957 முதியோரும் என உள்ளதாக இத்தகவல் மேலும் கூறுகின்றது.

பொது மன்னிப்பு காலத்தில் 423 துப்பாக்கிகள் ஒப்படைப்பு-

trttttபொதுமக்கள் சட்டவிரோதமாக வைத்திருக்கும் ஆயுதங்களை ஒப்படைப்பதற்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலம் முடிவடைந்துள்ளதாகவும் இதுவரை 423 துப்பாக்கிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயன்த ஜயவீர தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க கடந்த 25ஆம் திகதி வழங்கப்பட்ட கால எல்லை நேற்றுடன் முடிவடைந்துள்ளது. சட்டவிரோதமான முறையில் உரிய அனுமதி பத்திரம் எதுவுமின்றி ஆயுதங்களை வைத்திருக்கும் நபர்கள் அந்த ஆயுதங்களை பொலிஸ் நிலையங்கள் அல்லது பிரதேச செயலகங்களில் ஒப்படைக்க முடியும் என அமைச்சு அறிவித்திருந்தது. பொது மன்னிப்புக் காலத்தில் ஒப்படைக்கப்படாத ஆயுதங்கள் அதன் பின்னர் அபகரிக்கப்படுவதுடன் அதற்கான விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. Read more

இலங்கைக்கான ஐ. நா. வதிவிடப் பிரதிநிதிக்கும் தமிழ் மக்கள் பேரவை அரசியற் குழுவுக்கும் இடையில் நீண்ட சந்திப்பு-

UN 02இலங்கைக்கான ஐ. நா. வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோளி ((Ms. Una McCauley) அவர்களுக்கும் தமிழ் மக்கள் பேரவை அரசியல் விவகார உபகுழு உறுப்பினர்களுக்கும் இடையிலான நீண்ட சந்திப்பு ஒன்று, நேற்று வெள்ளிக்கிழமை, கொழும்பில் இருக்கும் ஐ. நா. வளாகத்தில் நடைபெற்றது. தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் விவகார உபகுழுவின் சார்பில் அலன் சத்தியதாஸ், சட்டத்தரணி நடராஜர் காண்டீபன், திருச்சிற்றம்பலம் பரந்தாமன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

ஒன்றரை மணித்தியாலங்கள் நீடித்த இச்சந்திப்பில் இரு பகுதியினரும் பல விடயங்களை மிகவும் வெளிப்படையாகப் பேசினர். இதன் போது இலங்கைத்தீவின் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு எவ்வாறு சர்வதேசம் தற்போதைய இலங்கை அரசை பலப்படுத்தல் மற்றும் செயல்படுத்தல்களில் பொறுமை காத்தல் என்ற கோணத்தில் செயற்படுவதும் அதில் ஐ. நா. இன் நடுநிலைத்தன்மையும் பேரவையினரிற்கு எடுத்துக்கூறப்பட்டது.

ஐ. நா. இன் நடுநிலைத்தன்மையை ஏற்றுக்கொண்ட பேரவையினர், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு, போரில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறலும் அதற்கான ஒர் நீதியான விசாரணையின் அவசியத்தையும் எடுத்துக்கூறி, இதற்கு ஏன் ஒர் சர்வதேச விசாரணையை தமிழர்கள் வேண்டி நிற்கிறார்கள் என்பதை வரலாற்றுப் படிப்பினையின் அடிப்படையில் விரிவாக தெளிவுபடுத்தியதுடன், தமிழர்கள் இலங்கையில் கொளரவமாக சமவுரிமையுடன் வாழ்வதற்காக தமிழர்களின் பொறுமையின் வரலாற்றையும், தெளிவுபடுத்தி, நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல் என்பது பொறுப்புக்கூறலிலேயே ஆரம்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தினர். மேலும், பேரவையின் பொறுப்புக்கூறலுக்கான உபகுழுவின் செயற்திட்டங்களும் விரிவாக விளக்கப்பட்டது.

இச்சத்திப்பின் முடிவில் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு ஐ. நா. வதிவிடப் பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டது.

காணாமல் போனோரின் குடும்ப ஒன்றிய ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்-

erererereவெள்ளை வான் கடத்தல்கள், முறையற்ற கைதுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனக்கோரி அம்பாறை நகரில் இன்று கவன ஈர்ப்பு போராட்மொன்று நடைபெற்றது. காணாமல் போனவர்களின் குடும்பங்களின் ஓன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நல்லிணக்கத்தை முறியடிக்கும் வெள்ளை வான் கடத்தலை நிறுத்து என்ற பதாதைகளையும் வாசக அட்டைகளையும் ஏந்தியவாறு காணப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, காந்தி பூங்காவுக்கு முன்பாக ஆரம்பமாகி மாவட்டச் செயலகம் வரை சென்று அங்கிருந்து மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது. இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் மகஜர்கள் காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியத்தால் கையளிக்கப்பட்டன. அந்த மகஜரிலே, வெள்ளை வேன் கலாசாரத்தை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் மீண்டும் அந்தக் கலாசாரம் ஆரம்பமாகியுள்ளமை எம்மை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியை தோற்கடிக்கும் நோக்கில் அல்லது அரசாங்கத்தின் அரசியல் தேவைகளுக்காக மக்களை அச்சம் கொள்ளச் செய்யும் இந்த வெள்ளை வேன் கலாசாரம், எதிர்காலத்தில் இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது. இச் சட்டவிரோத கடத்தல் குறித்து விசாரணை செய்து இதற்கு பொறுப்பானவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது தடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாநில அரசுகளிடையிலான அதிகாரப்பகிர்வு விவகார உபகுழுவின் தலைவராக தர்மலிங்கம் சித்தார்த்தன் நியமனம்-

D.Sithadthan M.P,.பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டதன் பின்னர் அரசியலமைப்புச் சபையின் ஆறு உபகுழுக்களுக்கான பிரதிநிதிகள் நேற்று நியமிக்கப்பட்டிருந்தனர். அப்பிரதிநிதிகளுக்கு பேரவை ஏகமனதாக அங்கிகாரமளித்துள்ளது. அரசியலமைப்புப் பேரவையின் இரண்டாவது கூட்டம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றத்தில் நேற்றுக் காலை 9.30க்குக் கூடியது. பேரவையின் முதலாவது கூட்டம், மே மாதம் 2ஆம் திகதி கூடியது. அப்போது, 21 பேரடங்கிய வழிப்படுத்தல் குழு நியமிக்கப்பட்டது. இந்தக் கூட்டம், சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே கூடியது. மொத்தம் 66 பேரடங்கிய இந்தக் குழுக்களில் சிறுபான்மைப் பிரதிநிதிகள் 22 பேர் அங்கம் வகிக்கின்றனர். அடிப்படை உரிமை, நீதித்துறை, நிதி, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொதுச் சேவைகள், மத்திய மற்றும் மத்திய மாநில அரசாங்கங்களுக்கிடையிலான அதிகாரப்பகிர்வு விவகார குழு ஆகிய ஆறு குழுக்களுக்கான பிரதிநிதிகளே நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்களை சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, பிரேரிக்க பேரவை அங்கிகாரமளித்துள்ளது. இதிலே மத்திய மாநில அரசாங்கங்களுக்கிடையிலான அதிகாரப்பகிர்வு விவகார உபகுழுவின் தலைவராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் சுமித் மாணவடு காலமானார்-

Manawaduதலையில் பலத்த காயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டிருந்த மேஜர்ஜெனரல் சுமித் மானவடு இன்று அதிகாலையில் உயிரிழந்துள்ளார். ராணுவப் படைப்பிரிவொன்றின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சுமித் மானவடு, நுகேகொடையிலுள்ள அவரது வீட்டின் கூரையில் இருந்த மரத்தடி ஒன்று உடைந்து அவரது தலையில் வீழ்ந்து காயம் ஏற்பட்டிருந்ததாக கூறப்பட்டிருந்தது. இதற்காக அவரது தலைப்பகுதியில் இரண்டு சத்திர சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனினும் தீவிர சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் இன்று அதிகாலை மேஜர் ஜெனரல் சுமித் மானவடு உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனை வட்டாரங்கள் அறிவித்துள்ளன. கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கைது செய்த ராணுவப் பிரிவிற்குத் தலைமை தாங்கியவர் சுமித் மானவடு ஆவார். அவர் மலேஷியாவின் உதவி உயர்ஸ்தானிகராகவும் சில காலம் பணியாற்றியவர்.

புகையிரத திணைக்களம் மூலம் புதிய சேவைகள்-

trainவருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் பயணிகள் போக்குவரத்துக்கு மேலதிகமாக நிலக்கரி மற்றும் பொருட்களையும் புகையிரதத்தில் கொண்டு செல்வதற்கு புகையிர திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி புகையிரதத்தின் ஊடாக பொருட்களை கொண்டு செல்வதற்கு தற்சமயம் 10 தனியார் நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக புகையிரத திணைக்களம் கூறியுள்ளது. இந்த திட்டத்தினூடாக திருகோணமலை சீன துறைமுகத்தில் இருந்து பலாவி வரை நிலக்கரி எடுத்துச் செல்வதற்கு ஒரு நிறுவனம் புகையிரத திணைக்களத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதலாவது நிலக்கரி எடுத்துச் செல்லும் உத்தியோகபூர்வ நிகழ்வு போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் தலைமையில் நாளை திருகோணமலை சீன துறைமுகத்தில் இடம்பெறவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பொது வீதிச் சூழல்கள் மாசடைவதை தடுத்தல், டிப்பர் ரக வாகனங்களினால் ஏற்படும் வாகன நெரிசல்களை குறைத்தல் மற்றும் வீதி விபத்துக்களை மட்டுப்படுத்துவதற்கும் முடியும் என்று புகையிரத திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

படகில் ஆஸி. சென்றவர்கள் விமானத்தில் திருப்பி அனுப்பிவைப்பு-

australiaசட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலிவிற்கு சென்றிருந்த 12 இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு விஷேட விமானம் மூலம் அவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இவர்களில் பெண் ஒருவரும் இரண்டு சிறுவர்களும் 9 ஆண்களும் அடங்குகின்றனர். இவர்களுள் பெண் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் கணவரும் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு ஏற்கெனவே சென்று திருப்பி அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவர்கள் மீண்டும் கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்ததாக கூறப்பட்டுள்ளது. குறித்த குழுவினர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர

பொலிஸ் அதிகாரிகள் 59பேருக்கு பதவி உயர்வு-

police ...உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 59பேர் பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பெண் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களும் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிப்படி இந்தப் பதவி உயர்வுகள் வழங்கப்படவுள்ளன.

அதன்படி நேற்றையதினம் முதல் அமுலாகும் வகையில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர மேலும் மூன்று உதவி பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதுடன், அவர்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரசன்ன மற்றும் பாலித்தவுக்கு ஒரு வாரம் தடை-

dsdfdffநாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற களேபரத்துக்கு காரணமானார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள பிரதியமைச்சரான ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும மற்றும்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர ஆகியோரது பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒரு வாரத்துக்கு தடை செய்ய, தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்றுகாலை கூடிய சபையில் சபாநாயகரால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைய, நாளை முதல் ஒரு வார காலத்துக்கு பாராளுமன்ற நடவடிக்கைகளில் குறித்த இருவரும் ஈடுபட முடியாது. நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் இ.போ.ச ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு-

gfjgஇலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் பஸ் டிப்போ ஊழியர்கள் இன்று பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். மன்னார் டிப்போவிற்கான கணக்காளர் அலுவலகம் ஒன்றை அமைத்துத் தருமாறு வலியுறுத்தி இந்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது. தமக்கான கணக்காளர் அலுவலகம் வவுனியாவில் காணப்படுவதால், தங்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மன்னார் டிப்போ ஊழியர்கள் குறிப்பிட்டனர். இந்நிலையில் இன்றுகாலை முதல் இடம்பெற்று வந்த மேற்படி பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கைகள் கைவிடப்பட்டு மீண்டும் மதியம் 1.15 மணிமுதல் ஊழியர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர். மதியம் 12.45 மணிளவில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் வட பிராந்திய முகாமையாளர் உப்பாலி பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட பணியாளர்களுடன் கலந்துரையாடினார். இதன்போது வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோவும் கலந்துகொண்டிருந்தனர்.

யாழில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு, அறுவர் வைத்தியசாலையில் அனுமதி-

current shockயாழ். சுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் தேர்த் திருவிழாவின்போது மின் பழுதுபார்த்தல் வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்றுகாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சுன்னாகம் சிவன் கோவிலின் திருவிழா இன்றுகாலை ஆரம்பமான நிலையில் கோவிலில் மின்சார வேலையில் ஈடுபட்டிருந்த 07 இளைஞர்களை தண்ணீர்ப்பந்தலில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியுள்ளது. இதன்போது எஸ் சொர்ணகுமார் (வயது 42) என்ற ஒரு பிள்ளையின் தந்தை ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். காயமடைந்த ஏனைய அறுவரும் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேற்படி சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

30 ஆயிரம் இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்பு-

Fஅமெரிக்க வைத்தியசாலைகளில் இலங்கைத் தாதியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்களை இணைத்துக் கொள்ளும், நிறுவனம் ஒன்றுடன் குறித்த ஒப்பந்தம் நேற்றையதினம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதன்படி குறித்த ஒப்பந்தம் ஐந்து வருடங்களுக்கு செல்லுபடியாகும் எனவும், இதன்மூலம் 30,000க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மேலும் அறிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து நாடு திரும்ப விரும்பும் அகதிகளுக்கு கடவுச்சீட்டு-

ranilஇந்தியாவிலிருந்து நாடு திரும்பவிருக்கின்ற அகதிகளுக்கு, இரண்டு வார காலத்திலிருந்து நான்கு வாரங்களுக்குள் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார். பிரதமரிடம் கேள்விகளைக் கேட்கும் நேரத்தில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தொடுத்த கேள்விக்குப் பதிலளிக்கும்போதே, பிரதமர் ரணில், மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். பிரதமர் தொடர்ந்தும் பதிலளிக்கையில், ‘குழப்பங்கள் காரணமாக இந்தியாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் சென்றிருப்போரை, நாட்டுக்குள் அழைத்துவருவதே, அரசாங்கத்தின் கொள்கையாகும். அவ்வாறு வருவோருக்குப் பிரஜாவுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ‘சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று பிரச்சினைகள் இல்லை. Read more