வலி மேற்கில் வீரமக்கள் தினம்-(படங்கள் இணைப்பு)
வலி மேற்கு பிரதேசத்தில் வீரமக்கள் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது தழிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வட்டுக்கோட்டை தொகுதியின் கிளையினால் மேற்கொள்ளப்பட்டது. அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களது மேற்படி நினைவுநாள் நிகழ்வானது 13ஆம் திகதியன்று நாள் வலக்கம்பறை பொதுஅரங்கில் முன்னாள் மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர் கௌரிகாந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் திருமதி. நாச்சியார். செல்வநாயகம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர் மா.உதயசூரியன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் நோர்வே கிளை அமைப்பாளர் ராஜன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர் கௌதமன், மதகுரு அன்ரனி அடிகளார் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வட்டுக்கோட்டை தோழர் சின்னக்குமார், கழகத்தின் தோழர் கிருஸ்ணன் போன்ற பலரும் கலந்து சிறப்பித்தனர். இவ் நிகழ்வில் அமரரது படத்திற்கு அஞ்சலி செய்யப்பட்டதுடன். அகவிழக்கும் ஏற்றப்பட்டது.