முல்லைத்தீவில் நான்கு உள்ளூராட்சி சபைகளுக்கும் தவிசாளர், பிரதி தவிசாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய 4 உள்ளுராட்சி மன்றங்களுக்கே தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவினால் இந்த பெயர் விபரங்கள் ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளராக முதல் இரண்டு வருடங்களுக்கு செல்லையா பிரேமகாந்தும், அடுத்த இரண்டு வருடங்களுக்கு அருளானந்தம் தவக்குமாரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். உப தவிசாளராக முதல் இரண்டு வருடங்களுக்கு கனகசுந்தரசுவாமி ஜெனமேஜெயந்த்தும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சபாரெத்தினம் திருச்செல்வமும் பெயரிடப்பட்டுள்ளனர். அதுபோல், கரைத்துரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக முதல் இரண்டு ஆண்டுகளும் கனகையா தவராசாவும், எஞ்சிய இரண்டு ஆண்டுகளுக்கு கமலநாயகம் விஜிந்தனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். Read more