Header image alt text

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் தனது 70 ஆவது வயதில் இன்று காலமானார்.

கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இன்றையதினம் பிற்பகல் காலமானதாக அகில இலங்கை இந்து மாமன்றம் தெரிவித்துள்ளது.

ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரான் நகரிலிருந்து யசூச் நகருக்கு சென்ற பயணிகள் விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 66 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

டெஹ்ரானில் இருந்து இஸ்ஃபாஹன் மாகாணத்தில் உள்ள யசூச் நகரத்திற்கு இன்றுகாலை பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் ஏசெமன் விமான நிறுவனத்தின் ATR-72 என்ற அந்த விமானத்தில் 66 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. வானில் பறந்து கொண்டிருக்கும்போதே ரேடாரில் இருந்து விமானம் மாயமாகியுள்ளது. Read more

இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது குறித்து தாய்லாந்து அரசாங்கம் ஆர்வத்துடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து அரசாங்க தகவல்கள் இதனை தெரிவித்துள்ளன. தெற்காசியாவில் இலங்கை முக்கிய பொருளாதார மையமாக திகழ்கிறது. அத்துடன் கடந்த காலங்களில் இலங்கையின் பொருளாதாரம் ஆரோக்கிய நிலையில் இருந்து வந்துள்ளதாகவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

சீன முதலீடுகளுக்கும், முதலீட்டுத் திட்டங்களுக்கும் முனைப்புடன் ஆதரவு வழங்க இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக சீன நாளிதழான சைனா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் சீன தூதுவர் இற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம், தொழில் வலயங்கள் உள்ளிட்ட சீன முதலீடுகளுக்கு அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கும் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். Read more

மாகா­ண­சபைத் தேர்­தல்­களை எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் நடத்த உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ளது என்றும் அதற்­கான ஏற்­பா­டுகள் எதிர்­வரும் மே மாத­ம­ளவில் ஆரம்­பிக்­கப்­படும் எனவும் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை, நடை­பெற்று முடிந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லின்­போது, ஏதேனும் அர­சியல் கட்சி அல்­லது வேட்­பா­ளர்கள், பணம், பொருட்கள் அல்­லது வேறேதும் பெறு­ம­தி­யான பொருட்­களை வாக்­கா­ளர்­க­ளுக்கு வழங்­கி­யது உறு­திப்­ப­டுத்­தப்­பட்டால், அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு தேர்தல் ஆணைக்­குழு நட­வ­டிக்­கை­களை எடுக்கும் என்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.
Read more

எமக்கு இறு­தி­யாக கிடைத்த மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்­தி­ரி ­பால சிறி­சேன ஆகிய இரண்டு ஜனா­தி­ப­தி­களும் கொழுக்­கட்­டையும், மோத­கமும் போன்­ற­வர்கள். உருவம் வேறாக இருந்­தாலும் அவர்­களின் செயற்­பா­டுகள் ஒன்­றா­கவே இருக்­கின்­றன என கிளி­நொச்சி மாவட்ட காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களின் இணைப்­பாளர் லீலா­வதி தெரிவித்­துள்ளார்.

கிளி­நொச்­சியில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் போராட்டம் மேற்­கொள்ளும் இடத்தில் நேற்­றைய தினம் ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்து உரை­யாற்­றி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வெளி­யி­டு­கையில், Read more

யாழ். குடாநாட்டைச் சேர்ந்த வேலையற்ற இளைஞர், யுவதியர் 50பேர் இலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்நிகழ்வு கடந்த 15ம் திகதி யாழ். இராணுவ தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த 50 பேரில். முன்னாள் போராளிகளும் அடங்குகின்றனர். சேர்த்துக்கொள்ளப்பட்ட 50 பேரும் இராணுவப் பணி அல்லாத பணிகளில் ஈடுபடுத்தப்படுவர் என தெரியவருகிறது. இந்த 50 பேருக்கும் மாதம் தலா 40ஆயிரம் ரூபா சம்பளத்துடன், உணவு, போக்குவரத்து, தங்குமிட, மருத்துவ வசதிகளும் செய்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

யாழ். தென்மராட்சி எழுதுமட்டுவாள் பகுதியில் எரிந்த நிலையில் ஆணொருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் மீசாலைப் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய செல்வரத்தினம் சுரேஷ்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த 11 ஆம் திகதி வீட்டிலிருந்து உறவினரொருவரது திருமணத்திற்காக கொழும்பு செல்வதாக தெரிவித்து வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார். Read more