இலங்கையில் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் வேறு நடவடிக்கைகள் குறித்து ஆராய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹூஸைன் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் 37 வது அமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி வரையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இலங்கை தொடர்பான கருத்துக்களை முன்வைத்து உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். Read more