Header image alt text

தியதலாவ, கஹகொல்ல பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு மற்றும் தீ விபத்து சம்பவத்தில் 19 பேர் காயமடைந்த நிலையில் தியத்தலாவை மற்றும் பண்டாரவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் பேருந்து ஒன்றில் ஏற்பட்ட தீ மற்றும் வெடிப்பு சம்பவத்தாலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். காயமடைந்தவர்களில் 07 இராணுவ வீரர்கள், 05 விமானப்படை வீரர்கள் மற்றும் 07 பொது மக்களும் அடங்குவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். Read more

மாலைதீவில் தேசிய அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை மீள கட்டுயெழுப்புமாறு முன்வைக்கப்பட்டுவரும் சர்வதேச அழுத்தங்களை மீறி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஒன்பது எதிர்க்கட்சித் தலைவர்களின் விடுதலைக்கு எதிராக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 6 ஆம் திகதி ஜனாதிபதி அவசரகால உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். Read more