Header image alt text

மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்காது அரசாங்கம் சர்வதிகாரப் போக்கில் புதிய அமைச்சு பதவிகளை வழங்கிமையை வன்மையாக கண்டிப்பதாக நுவரெலியா மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இன்று (26) ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். Read more

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று  இடம்பெற்றது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்ப்பாட்டில் நாடளாவிய ரீதியில் முல்லைத்தீவு கிளிநொச்சியில் காணி விடுவிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு, இரணைதீவு, மன்னார் முள்ளிக்குளம், கொழும்பு, காலி, நீர்கொழும்பு உள்ளிட்ட தென்பகுதி மக்கள் மற்றும் கிழக்கு மாகாண மக்கள் என எல்லா இடங்களிலிருந்தும் ஒன்றுதிரண்ட மக்கள் முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் பொதுச்சந்தைக்கு முன்பாக இருந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றை மேற்கொண்டு மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் நிறைவு செய்தனர் Read more

முல்லைத்தீவு செல்வபுரம், வட்டுவாகல் ஆகிய இரு கிராமங்களுக்கு எல்லையில் காணப்படும் சுடலையில் பிரதேச செயலாளர், கிராம சேவையாளர் மற்றும் அரச அதிகாரிகள் மதில் கட்ட முற்பட்டபோது அதனை செல்வபுரம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் தடுத்து அரச அதிகாரிகளோடு முரன்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த கிராம அபிவிருத்தி சங்க தலைவர் மீது முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டு அவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். Read more