மன்னார் மாவட்டம் முருங்கனில் அமைந்துள்ள புளொட் அலுவலகத்தில் 29ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் நடைபெற்றன.

நேற்று(16.07.2018) காலை 10மணியளவில் கட்சியின் செயற்குழு உறுப்பினர் து.சுந்தர்ராஜ்(சிவசம்பு) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கட்சியின் செயற்குழு உறுப்பினரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய ஜி.ரி.லிங்கநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் பரஞ்சோதி, உப தவிசாளர் புவனம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது நினைவுச்சுடர் ஏற்றல் இடம்பெற்று மௌனஅஞ்சலி மற்றும் மலரஞ்சலி இடம்பெற்றன. நிகழ்வில் கட்சியின் செயற்குழு உறுப்பினர் சிசில் ஜோன்சன், செயற்குழு உறுப்பினரும், பிரதேச சபை உறுப்பினருமாகிய வே.குகதாசன், நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.