Header image alt text

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ்கிளையால் நினைவு கூரப்படும் 29வது வீரமக்கள் தினம் எதிர்வரும் 08.07.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.30 க்கு சுவிஸ் சூரிச் மாநகரில் உள்ள Unter Affoltern  மண்டபத்தில் (GZ Affoltern, Bodenacker -25, 8046 Affoltern Zürich)   நடைபெறவுள்ள வீரமக்கள் தின நிகழ்வில் சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம். Read more

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை சிங்கப்பூர் நோக்கி விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூரில் நடைபெறவுள்ள 06 ஆவது ´சர்வதேச நகரம்´ மாநாடு உள்ளிட்ட சில கருத்தரங்குகளில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் பிரதமர் உள்ளிட்ட அந்த நாட்டின் உயர் மட்ட உறுப்பினர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி புதிய வாக்காளர் பட்டியல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாடளாவிய ரீதியாக 2 லட்சம் புதிய வாக்காளர்கள் இந்த பட்டியலில் இணைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் வாக்காளர்கள் தமது பெயர்களை இரு முறை பதிவு செய்வதை தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல்கள் சட்டத்திற்கு அமைய புதிய வாக்காளர் பட்டியலை அரசாங்க வர்த்தமானியில் ஒக்டோபர் 31ஆம் திகதி பிரசுரிக்க திட்டமிட்டிருந்தது. Read more