யாழ்ப்பாணம் – சுழிபுரம் பிரதேசத்தில் 6 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகியிருந்த 3 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று முன்தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களை அடுத்த மாதம் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அண்மையில் சுழிபுரம் பகுதியில் 6 வயதுடைய ரெஜினா என்ற சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.