பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளை குவைத் நாட்டு தம்பதிகள் தாக்கியதில், 5 சுங்க அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமது செல்லப் பிராணியான நாய் குட்டி ஒன்றை நாட்டிற்குள் கொண்டுவர முயற்சி செய்தபோது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து அது இறுதியில் கைகலப்பில் நிறைவடைந்துள்ளது. மேலும், இன்று காலை இலங்கைக்கு வருகை தந்த குவைத் நாட்டு தம்பதிகள், இலங்கையின் விலங்கு கட்டுப்பாட்டு ஒழுங்கு முறைக்கு இணங்க எதுவித தயார் நிலையில் வருகை தரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more
கண்டி, பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் மீள அறிவிக்கும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவக்கப்படுகின்றது. நிர்வாக பிரச்சினைகள் சிலவற்றின் காரணமாகவே இவ்வாறு அனைத்து பீடங்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ரயில் தண்டவாளத்தை திருடிய இருவரை இன்றுகாலை கைதுசெய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பயணிகளுக்கு ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்காக இந்த ஈ காட் (E-Card) முறை அமுல்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின், 2017ம் ஆண்டுக்கான செயற்பாட்டு அறிக்கையின் பிரகாரம், முப்படையினரும் வடக்கு மற்றும் கிழக்கில் கடந்த ஆண்டு 5 ஆயிரத்து 160.59 ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
டுபாயில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 20 மில்லியன் டொலர்கள் பெறுமதியான அரிதான நீல நிற மாணிக்கக்கல் ஒன்றை மீட்டுள்ளதாக, டுபாய் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ஒருவர் கைதாகியுள்ளார்.