பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லன்ட் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார்.
அவர் கடந்த 2016ஆம் ஆண்டு அமைப்பின் செயலாளர் நாயகமாக பதவியேற்றதன் பின்னர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக இது அமையவுள்ளது. நாளை மறுதினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன ஆகியோரை சந்திக்கவுள்ளார். Read more
கட்டுநாயக்க பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்து, விமான நிலையத்தைச் சேர்ந்த சுங்கப் பிரிவினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இலங்கை விமான சேவையில், புதிதாக சேவையில் ஈடுபடுத்தும் பொருட்டு இன்று (30), புதிய விமானம் ஒன்று சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான செயலணியின் கூட்டத்தில் தாம் கலந்து கொள்ளப்போவதில்லை என்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.
இலங்கையில் மத ரீதியான சுதந்திரத்தை ஏற்படுத்துவதற்கு ஆவனசெய்யப்படும் என்று, அரசாங்கம் அமெரிக்காவிடம் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிவிவகார செயலாளர் பிரசாத் காரியவசம், அமெரிக்க அதிகாரிகளுடனான மாநாடு ஒன்றில் வைத்து இதனைக் கூறியுள்ளார்.
11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கடற்படை புலனாய்வுப்பிரிவின் அதிகாரிகள் இருவரும் கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று பிற்பகல் 1 மணி வரையிலான 24 மணி நேரத்துக்குள், ஆறு வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை வட-கிழக்கு கிராம அலுவலர் அடையாளம் தெரியாத குழு ஒன்றினால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட- உயர் திறன்வாய்ந்த போர்க்கப்பலான- ‘யு.எஸ்.சி.ஜி ஷேரமன்’, இலங்கை கடற்படைக்கு அடுத்தமாதம் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்பட இருந்த புகையிரத வேலை நிறுத்த போராட்டத்தை இரத்து செய்வதற்கு புகையிரத தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
வவுனியா, புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 11பேர் காயங்களுக்குள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.