இலங்கை வடக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் 5.5 ரிச்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய உதவி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த பூகம்பத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை என்று வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றையதினம் காலை மடகஸ்கர் தீவுக்கு அருகாமையில் இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளதாகவும், அது 5.5 ரிச்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.