காணாமல் ஆக்கப்பட்டப்பட்ட உறவினர்கள் அமைப்பின் செயலாளரும் வவுனியா சிவில் சமூக அமைப்புக்களின் செயற்பாட்டாளருமான கோபால கிரிஸ்ணன் ராஜ்குமாரை பயங்கரவாத விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 6ஆம் திகதி இவ்வாறு முன்னிலையாக வேண்டும் என அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மாவீரர்கள் நினைவு தினத்தை ஏற்பாடு செய்தமை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு குறித்த அழைப்பு விடுக்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.