ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகிறது. இந்தக் கூட்டத்தொடர் இன்றுமுதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இன்றைய முதலாவது அமர்வில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மைக்கல் பசேல் ஜெரியா உரைநிகழ்த்தவுள்ளார். இந்தத் தடவை கூட்டத்தொடரில் இலங்கை குறித்த 2 அறிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறவுள்ளன. அத்துடன், இலங்கை தொடர்பில் 4 உப குழுக் கூட்டங்களும் ஜெனீவா பேரவை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்தாகத் தெரிவிக்கப்படுகின்றது. Read more
தர்மத்தின் பாசறையில் உருவானவரே!
இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான கட்சித் தலைவர்கள் குழு இன்றுகாலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இந்தோனேசிய கடற்படைக் கப்பலான ´கிரி சுல்தான் ஹசனுடின்´ மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
மன்னார் முருங்கன் கட்டுக்கரை கோர மோட்டை பகுதியில் யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணியில் உள்ள கிணற்றினுள் கடந்த புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தொகுதி வெடி பொருட்களை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்றுமாலை மீட்டுள்ளனர்.