தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தினம் கடந்த 13ம் திகதிமுதல் நேற்று 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்பட்டது.

30ஆவது வீரமக்கள் தினத்தின் இறுதி நாளான நேற்றும் வவுனியா, கோவில்குளத்தில் அமைந்துள்ள தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்துடன் வீரமக்கள் தினத்தை முன்னிட்டு உமாமகேஸ்வரன் இல்லத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட தாக சாந்தி நிலையமும் நேற்றுவரை தொடர்ந்து நடாத்தப்பட்டது.