தபால் மூல வாக்களிப்பில் தமிழ் மக்கள் தாம் விரும்பியவர்களுக்கு வாக்களிக்கலாம் என ஐந்து தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. 5 கட்சிகளின் கூட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இதன்போதே, மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ் அரசு கட்சியின் சார்பில் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சீ.வீ.கே.சிவஞானம், புளொட் சார்பில் த.சித்தார்த்தன், பா.கஜதீபன், எஸ்.சதானந்தம், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், என்.சிறிகாந்தா, ஹென்ரி மகேந்திரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். Read more
2019 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு நாளை (31) முதல் ஆரம்பமாகிறது.
மன்னார் மாவட்டத்தில் மடு திருத்தலம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி, அதற்கான உறுதிப்பத்திரத்தை மன்னார் மறை மாவட்ட பேராயர் இம்மானுவேல் பேர்டினன்ட்டிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (29) ஜனாதிபதி செயலகத்தில் கையளித்தார்.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தென்மாகணத்தின் சில பாடசாலைகளுக்கு நாளை (30) விடுமுறை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கடந்த 20 ஆம் திகதி தோட்ட காணியினை துப்பரவு செய்த போது மனித எச்சங்கள் காணப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது
அமெரிக்க அரசாங்கத்தின் மிலேனியம் சாவால்கள் (Millennium Challenge Corporation) கூட்டுதாபனத்திடம் இருந்து 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக பெறுவது தொடர்பில் நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தனியார் பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட அனைத்து தனியார் வாகனங்களிலும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களை மற்றும் கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் அடையாளங்கள்,
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் வாக்களிக்கலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் இருந்த உத்தியோகப்பூர்வ துப்பாக்கி காணாமற்போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
யாழ். நயினா தீவில் இன்று (28) அதிகாலை மினி சூறாவளி தாக்கம் இடம்பெற்றிருக்கும் நிலையில் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டிருக்கின்றது.