தேர்தல் தொடர்பான பெனர்கள், கட்டவுட்களை காட்சிபடுத்துதல் மற்றும் தனியாகவோ, வாகனங்கள் மூலமாகவோ பேரணியில் ஈடுபடுவது இன்று முதல் தடைசெய்யப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அருகாமையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வது தொடர்பான சட்டத்தின் விதிகளுக்கமைய இன்று முதல் பெனர்கள், கட்டவுட்களை காட்சிபடுத்துதல் மற்றும் தனியாகவோ, வாகனங்கள் மூலமாகவோ பேரணியில் ஈடுபடுவது தடைசெய்யப்படுவதாக அவர் கூறினார். Read more