மலர்வு 02.03.1933 உதிர்வு 08.10.2019
யாழ். மயிலிட்டி கெத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும் ஜெர்மனியை தற்காலிக வாழ்விடமாகவும் கொண்டவரும், கழகத்தின் ஜெர்மன் கிளைத் தோழர் சந்திரன் அவர்களின் தந்தையாருமான வேலுப்பிள்ளை கந்தசாமி (ஓய்வுபெற்ற தபாலதிபர்) அவர்கள் (08.10.2019) செவ்வாய்க்கிழமை ஜெர்மனியில் காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அமரர் வேலுப்பிள்ளை கந்தசாமி அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினர், நட்புக்கள், உறவுகளோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப் பெருந்துயரினைப் பகிர்ந்து கொண்டு, துயரந் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கே ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவு என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலை குற்றம் புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவை பிணையில் விடுவித்து கொழும்பு நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவு கொழும்பு உயர்நீதிமன்றினால் இன்று ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக .முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை – மட்கோ பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். குறித்த நபரின் குழந்தையானது ரயில் வீதிக்கு சென்ற போது பிள்ளையை பிடிப்பதற்காக அவரது மனைவி ரயில் தண்டவாளத்துக்கு அருகே சென்றுள்ளார்.
இங்கிலாந்தின் பின்னர் நகரில் கடந்த மார்ச் மாதம் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்டவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
லண்டன் – லூட்டோன் விமான நிலையத்தில் கடந்த தினங்களில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் முகமாலை மற்றும் பளை பிரதேசங்களில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை கண்காணிப்பதற்காக அமெரிக்க அரச பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்று இலங்கை வந்துள்ளது.
மாகாண சபைகள், பொதுமக்கள் பிரதிநிதிகளால் அன்றி தனி ஒருவரின் அதிகாரத்தின் கீழ் நீண்ட காலமாக நிலவுவது, சர்வாதிகாரத்திற்கான படிக்கல்லாக அமையும் எனவும், இதனால் மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அதன் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
புலிகளின் சீருடை என சந்தேகிக்கப்படும் ஆடைகளுடன் வவுனியாவில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா – புதியபேருந்து நிலையத்தில் வைத்து அவர் நேற்று கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.