 மலர்வு 02.03.1933 உதிர்வு 08.10.2019
மலர்வு 02.03.1933 உதிர்வு 08.10.2019
யாழ். மயிலிட்டி கெத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும் ஜெர்மனியை தற்காலிக வாழ்விடமாகவும் கொண்டவரும், கழகத்தின் ஜெர்மன் கிளைத் தோழர் சந்திரன் அவர்களின் தந்தையாருமான வேலுப்பிள்ளை கந்தசாமி (ஓய்வுபெற்ற தபாலதிபர்) அவர்கள் (08.10.2019) செவ்வாய்க்கிழமை ஜெர்மனியில் காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அமரர் வேலுப்பிள்ளை கந்தசாமி அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினர், நட்புக்கள், உறவுகளோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப் பெருந்துயரினைப் பகிர்ந்து கொண்டு, துயரந் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
