செய்திகள்:

1. தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் வன்முறை, அரச சொத்தக்களை ஆக்கிரமித்தல், சட்டவிரோதமான முறையில் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்தல் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் இதுவரையில் 1255 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் தேர்தல் சட்டங்களை மீறிய வேட்பாளர்கள் இருவர் உட்பட 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் திரு. முருகேசபிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களுக்கான தேர்தல் பிரச்சாரக் காரியாலயம் இன்றுகாலை 10மணியளவில் மட்டக்களப்பு நாவற்குடாவில் திறந்துவைக்கப்பட்டது.
சில்லாலை, வடலியடைப்பு, பன்னசிட்டி, மூளாய் மற்றும் வழக்கம்பரை பகுதிகளில் மக்களுடனான கலந்துரையாடல்கள்…
கோண்டாவில் மற்றும் சுன்னாகம் பகுதிகளில் மக்கள் சந்திப்புக்கள்..
வியாபாரிமூலையில் தேர்தல் பரப்புரைகள்…
விடத்தற்பளையில் தேர்தல் பரப்புரையின்போது…
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் 31ஆவது ஆண்டு நிகழ்வு எதிர்வரும் 13ம் திகதிமுதல் எதிர்வரும் 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது.
தமிழ் மக்களின் உரிமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிடாது. உரிமைக்காக தொடர்ந்தும் போராடிக்கொண்டே இருக்கும். மக்கள் தங்களுடைய ஜனநாயகக் கடமைகளை முறையாகச் செய்ய வேண்டும் என கூட்டமைப்பின் வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். சுன்னாகத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.