சேவியர் தனிநாயகம் அடிகளாரின் 40வது ஆண்டு நினைவுநாள் இன்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா, நகரசபையின் ஏற்பாட்டில் தமிழுக்கும், சைவத்திற்கும் அரும்பணியாற்றிய தனிநாயகம் அடிகளாரின் நினைவுநாள் நிகழ்வு வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் அமைந்துள்ள அடிகளாரின் உருவச் சிலைக்கு முன்பாக இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது, அடிகளாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் தமிழருவி சிவகுமாரன், அடிகளார் தொடர்பான நினைவுப் பேருரை ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

வவுனியா நகரசபையின் உப நகரபிதா சு.குமாரசாமி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர்களான க.சந்திரகுலசிங்கம், நா.சேனாதிராஜா, சு.காண்டீபன், சுமந்திரன், தமிழ்விருட்சம் அமைப்பின் சந்திரகுமார் கண்ணன், பொது அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.