கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 17 பேர் இன்று குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றினால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 60 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 203 பேர் நாட்டின் மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.