கிணற்றடியில் முகம் கழுவச் சென்ற போது, மயங்கி விழுந்து குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழ் தொண்டைமானாறு பகுதியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தொண்டைமானாறு கடற்கரை வீதியில் வசிக்கும் முல்லைத்தீவைச் சேர்ந்த அன்ரன் ஜோர்ஜ் (வயது-35) 2 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். கிணற்றடிக்குச் சென்ற அவர் மயங்கி விழுந்துள்ளார். அவரை உடனடியாக மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதும் அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.